குழந்தைகள் நன்றாக படிக்க அனுமன் வழிபாடு

hanuman
- Advertisement -

படிப்பு வராத பிள்ளைகளாக இருந்தால் அவர்களை படி படி என்று சொல்லி பெற்றவர்கள் ரொம்பவும் டார்ச்சர் பண்ணி எடுத்துடுவாங்க. சில குழந்தைகள் சீக்கிரத்தில் புரிந்து படித்து விடும். சில குழந்தைகள் பாடத்தை படிப்பதற்கு சிரமப்படும், ஞாபக சக்தி குறைவாக இருக்கும், பாடத்தை புரிந்து கொள்ளக்கூடிய தன்மையும் குறைவாக இருக்கும்.

பூமியில் பிறந்த அத்தனை பிள்ளைகளும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது அல்லவா. உங்களுடைய பிள்ளை படிப்பில் கொஞ்சம் மந்தமாக இருக்கிறதா. கவலைப்படாதீங்க, அந்தப் பிள்ளையை தொடர்ந்து படி படி என்று சொல்லி டார்ச்சரும் கொடுக்காதீங்க. ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை தொடர்ந்து ஏழு வாரம் செஞ்சு பாருங்க. உங்களுடைய பிள்ளையின் படிப்பில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் தெரியும்.

- Advertisement -

குழந்தை நன்றாக படிக்க அனுமன் வழிபாடு

இந்த வழிபாட்டை வாரத்தில் ஒரு நாள் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமை ஏதாவது ஒரு கிழமையை தேர்ந்தெடுத்து செய்யுங்கள். முதல் வாரம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தால், தொடர்ந்து ஏழு வாரமும் செவ்வாய் கிழமை தான் இந்த வழிபாட்டை செய்யணும். முதலில் சனிக்கிழமை இந்த வழிபாட்டை தொடங்கினால் தொடர்ந்து ஏழு வாரம் சனிக்கிழமைதான் இந்த வழிபாடு செய்யணும். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போங்க.

அந்த ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயரின் பாதத்தில் செந்தூரம் கொட்டி வைத்திருப்பார்கள். அதில் ஆஞ்சநேயருக்கு இடது காலில் இருக்கக்கூடிய செந்தூரத்தை கொஞ்சமாக வாங்கிக்கோங்க. அந்த திலகத்தை கொண்டு வந்து தினமும் படிக்கின்ற பிள்ளையின் நெற்றியில் வைத்து வந்தால் உங்களுடைய பிள்ளை சூப்பரா படிப்பாங்க. படிப்பில் ஆர்வமே இல்லை என்றாலும் படிப்பில் ஆர்வத்தை கொண்டு வரும் வேலையை ஆஞ்சநேயர் பார்த்துப்பாரு.

- Advertisement -

இப்படி ஆஞ்சநேயர் பாதத்தில் செந்தூரம் கொட்டி வைக்கவில்லை இடது காலில் இருக்கக்கூடிய செந்தூரத்தை எடுக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது. நீங்கள் கொஞ்சமாக செந்தூரம் வாங்கிக் கொண்டு போய் ஆஞ்சநேயருக்கு கொடுங்க. அந்த செந்தூரத்தை ஆஞ்சநேயரின் இடது பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வாங்கிக் கொள்ளுங்கள்.

குருக்களிடம் சொன்னால் இதை செய்து தருவார்‌. நீங்கள் செந்தூரம் வாங்கி கொடுத்து அதை ஆஞ்சநேயர் பாதத்தில் வைத்து எடுத்தாலும் தவறு கிடையாது. இந்த திலகத்தை அனுமனை நினைத்து தினமும் பிள்ளைகளுடைய நெற்றியில் வைத்து வந்தாலும் உங்களுடைய பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

- Advertisement -

எழுதக்கூடிய தேர்வையும் சிறப்பாக எழுதுவார்கள். இந்த பரிகாரம் சின்ன பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை நன்றாகவே வேலை செய்யும். உங்க குழந்தை இப்பதான், ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு படிக்கிறது என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு படிக்கிறது என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: நல்லபடியாக குழந்தை பிறக்க செய்ய வேண்டிய பரிகாரம்

காலேஜ் படிக்கும் பிள்ளைகளுக்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள் அந்த ஹனுமனின் பலசாலித்தனமும் புத்திசாலித்தனமும் உங்க பிள்ளைகளுக்கும் நிச்சயம் கிடைக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -