ஒரே நாளில் உங்க முகம் கண்ணாடி போல ஜொலிக்கணுமா? அப்படினா ஈசியாக இத ட்ரை பண்ணி பாருங்க!

vellarikkai-face
- Advertisement -

நம்முடைய முகம் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான தன்மையில் இருப்பது இல்லை. நாம் அதை பராமரித்து வரும் முறையில் தான் நம்முடைய சருமமானது ஜொலிக்கும். சாதாரணமாக வீட்டில் இருப்பவர்கள் தங்கள் முகத்தை அடிக்கடி பராமரிப்பது கிடையாது. வெளியில் செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் வேண்டுமானால் வாரம் ஒரு முறையாவது இப்படி அவர்களுடைய முகத்தை பராமரித்து வருவது உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஒரே நாளில் ஜொலிக்க வேண்டும் என்றால் அது முடியாத காரியம். ஆனால் இதை செய்து வந்தால் ஒரே நாளில் உங்களுடைய முகம் பளிச் பளிச்சென்று மின்னும். அப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்கிற அழகு குறிப்பு ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இன்ஸ்டண்டாக முகம் அழகு பெறுவதற்கு சில பொருட்களை நாம் சேர்த்து அரைத்து ஸ்கிரப்பர் போல தயாரித்துக் கொள்ளலாம். இதற்கு பெரிதாக ஒன்றும் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து இதனை எளிதான முறையில் தயாரித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

முதலில் சிறிதளவு வேப்பிலையை பறித்து வந்து கழுவி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் நான்கைந்து வெள்ளரி துண்டுகளை சேர்த்து பேஸ்ட் போல நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸியில் ஓட்ஸ் கொஞ்சம் சேர்த்து நைஸ் ஆக பவுடர் போல அரைத்து எடுங்கள். இந்த ஓட்ஸ் பவுடர் ஒரு ஸ்பூன் மற்றும் இதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து வேப்பிலை, வெள்ளரி கலவையுடன் கலந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

அவ்வளவுதான், இந்த சூப்பரான எளிதான பேஸ் பேக்கை முகத்தில் முதலில் ஸ்கிரப் போல மசாஜ் செய்ய வேண்டும். ஒரு பத்தில் இருந்து 15 நிமிடம் நன்கு மசாஜ் செய்த பின்பு முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவிக் கொள்ளுங்கள். மீண்டும் இதை ஒரு முறை முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் உலர விட்டு விடுங்கள். நன்கு உலர்ந்து காய்ந்ததும் முகத்தை அலம்பிக் கொள்ளலாம். இதனால் சருமமானது கண்ணாடி போல பளபளன்னு ஜொலிக்க ஆரம்பிக்கும்.

- Advertisement -

ஏதாவது ஒரு சன் ஸ்கிரீன் லோசனை தடவிக் கொண்டு வெளியே செல்ல வேண்டியது தான். அதிக மேக்கப் கூட போடத் தேவையில்லை! இந்த ஒரு விஷயத்தை செய்தாலே உங்களுடைய முகமாக இது? என்று நீங்களே வியந்து பார்க்கும் அளவிற்கு சருமமானது ஜொலிக்கும். சரும துவாரங்களுக்குள் சென்று இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை தூண்டி விடக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. மேலும் சருமத்தில் இருக்கும் கருமையை விரட்டி அடித்து, சருமத்தை நல்ல ஒரு சிகப்பழகுடன் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

இதையும் படிக்கலாமே:
இனி உங்க பாதமும் குழந்தைகளின் பாதங்களை போல மெருதுவாக இருக்க வேண்டுமா? பஞ்சு போன்ற பாத அழகை பெற இதை மட்டும் தவறாமல் செய்து விடுங்கள்.

மேலும் ஸ்கரப் செய்வதால் வெண் புள்ளிகள், கரும்புள்ளிகள், கண்ணுக்கு தெரியாத நுண் புள்ளிகள் அனைத்தும் நீங்கிவிடும், இதனால் சருமம் தொட்டாலே வழுக்கி கொண்டு போகும் அளவிற்கு சைனிங்காகவும் இருக்கும். மேலும் இதில் சேர்க்கக்கூடிய வேப்பிலையின் சாறு மற்றும் மஞ்சள் கிருமி நாசினியாக செயல்படுவதால் சரும கிருமிகளை அழித்து, பாக்டீரியாக்களை ஒழித்து பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளும். ஒரே நாளில் நல்ல ரிசல்ட் தெரியக்கூடிய இந்த ஒரு பேக்கை நீங்கள் வாரம் ஒரு முறை போட்டு வந்தால், சருமத்தில் எந்தவிதமான பிரச்சனைகளும் அண்டாது.

- Advertisement -