உங்களுக்குள் இறைவன் இருக்கிறாரா? இல்லையா? என்பதை தெரிஞ்சுக்கணுமா? இதை ட்ரை பண்ணி பாருங்க உடனே தெரிஞ்சிக்கலாம்!

pray
- Advertisement -

நமக்குள் இறைவன் இருக்கிறார் என்று சாஸ்திரங்கள் ஆணித்தரமாக கூறுகிறது. ஆனால் சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்றவர்கள் மட்டுமே இறைவனை தனக்குள் உணருகிறார்கள். சாதாரண மனிதனால் இறைவனை உணர முடியாமல் போவதற்கு காரணம் என்ன? நமக்குள் இறைவன் இருக்கிறாரா? இல்லையா? என்பதை எப்படி அறிந்து கொள்வது? என்பது போன்ற சூட்சமமான ஆன்மீக குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

ஒரு ஆத்மா தான் குழந்தையாக மறுபிறப்பு எடுக்கிறது. தாயின் வயிற்றில் சிசுவாக இருக்கும் பொழுது 7 மாதம் வரை அந்த ஆத்மா எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கும். ஏழாவது மாதத்தின் பொழுது இறைவனிடம் இந்த பூமியில் மீண்டும் நான் பிறக்க விரும்பவில்லை, இந்த மனித பிறவி எனக்கு வேண்டாம் என்று மன்றாடி கேட்குமாம். செய்த பாவங்களுக்கு உரிய தண்டனையை மேலோகத்தில் ஏற்கனவே அந்த ஆத்மா அனுபவித்திருக்கும். அதனால் தான் இப்படி ஏழாவது மாதத்தில் இறைவனிடம் கெஞ்சி மன்றாடிக் கொண்டிருக்கும்.

- Advertisement -

அந்த சமயத்தில் ‘ஷடம்’ எனும் வாயு சிசுவை சுற்றிலும் உருவாகும். இந்த வாயு உருவாகிய பின்பு எல்லா ஞாபகங்களும் அந்த சிசுவுக்கு மறந்து போய்விடுமாம். அதனால்தான் நாம் பிறந்த பிறகு நமக்கு முற்பிறவியின் ஞாபகங்கள் எதுவுமே இருப்பது கிடையாது. பெருமாள் கோவில்களில் தலையில் வைக்கும் ஜடாரிக்கும் இந்த ஷடம் என்னும் வாயுக்கும் தொடர்பு உண்டு.

‘எல்லாவற்றையும் நான் கர்ப்பத்திலேயே மறந்து போனாலும், உன்னை மட்டும் மறக்க கூடாது இறைவா’ என்கிற ஒரு விஷயத்தை ஆத்மா சொல்லி இருக்குமாம். அதை சிசுவானது ஷடம் என்னும் வாயுவிடம் கேட்டு பெற்ற வரமாக இருக்கிறது எனவே தான் சடாரியை தலையில் வைக்கும் பொழுது எப்பொழுதும் இறைவனுடைய ஞாபகம் நமக்கு இருக்க வேண்டும் என்று அவருடைய பாதத்தை எடுத்து தலையில் வைத்து கொள்வதாக தாத்பரியம் உண்டு.

- Advertisement -

இறைவன் பூமிக்கு ஒரு பிறவியை அனுப்பும் பொழுது இரண்டு விஷயங்களை சொல்லி அனுப்புகிறது. முதலாவது நீ உன்னுடைய இஷ்டம் என்னவோ அதன்படி உன்னுடைய வாழ்க்கையை நடத்தி விட்டு என்னை வந்து சரண் அடையலாம். இன்னொன்று மனம் போன போக்கில் வாழ்ந்து மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறக்கலாம். உன்னுடைய வாழ்க்கையில் நான் எந்த விதத்திலும் தலையிட மாட்டேன் என்று கூறுவாராம்.

இந்த இரண்டும் நம்முடைய கையில் தான் உள்ளது. ஆத்மா என்பது வேறு! மனம் என்பது வேறு! உங்கள் ஆத்மா சொல்வதைக் கேட்டு நீங்கள் நடந்தால் நல்லவற்றை சிந்தித்து, நல்லவற்றை செய்து, இறுதியில் கடவுளை உணர்ந்து கடவுளை அடைவீர்கள். ஆனால் மனம் சொல்வதைக் கேட்டு நடந்தால் பாவங்களை செய்து இந்த பூமியில் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இது உலக உயிர்கள் அத்தனைக்கும் பொருந்தக்கூடிய ஒன்று.

- Advertisement -

நாம் மறந்து போன இந்த இறைவனை நமக்குள் எப்படி தேடுவது? பல சமயங்களில் இதை நாம் நம்முடைய வாழ்க்கையில் உணர்ந்து இருப்போம். நாம் தவறான வழியில் செல்லும் பொழுதெல்லாம் ஒரு குரல் வந்து நீ செய்வது தவறு என்று நம்மை துரத்திக் கொண்டே இருக்கும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தான் நாம் அந்த தவறை செய்து கொண்டிருப்போம். அந்தக் குரல் மனசாட்சி என்று சிலர் கூறுவார்கள். அது மனசாட்சியின் குரல் அல்ல! இறைவனின் குரலாகும்.

இதையும் படிக்கலாமே:
தயவுசெய்து இந்த சின்ன சின்ன தவறுகளை கூட பூஜையறையில் செய்யவே செய்யாதிங்க. அது உங்கள் பூஜைக்கான பலனை முழுமையாக கொடுக்காது.

உங்களுக்குள் கேட்கும் அந்த குரல் இறைவனுடையது. இறைவன் உங்களுக்குள் இருந்து தவறு செய்யாமல் தடுக்க முயற்சிக்கிறார் ஆனால் நீங்கள் அதைக் கேட்காமல் தவறு செய்கிறீர்கள். கடவுள் எப்பொழுதுமே நமக்கு நல்ல வழியைத்தான் காண்பிப்பார். அதை ஆத்மாவால் உணர வேண்டுமே தவிர, மனதால் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் இறைவனை எளிதாக உங்களுக்குள் தரிசிக்கலாம்.

- Advertisement -