இந்த ஒரு பொருளை இரவில் சாப்பிட்டால் கையில் பணப்புழக்கம் இருக்காது தெரியுமா? அது என்ன பொருள்?

- Advertisement -

ஒரு சில பொருட்களுக்கு ஒவ்வொரு அதிர்வலைகளை உண்டு பண்ணக் கூடிய சக்தி உண்டு. குளிர்ச்சி பொருந்திய பொருட்கள் நம் உடலில் குளிர்ச்சியை கூட்டி, உஷ்ணத்தை தணிக்க செய்யும். அத்தகைய பொருட்கள் சிலவற்றில் ஆன்மீக ரீதியான ஆற்றலும் உண்டு. அந்த வகையில் இந்த ஒரு பொருள் இரவில் சாப்பிட்டால் கையில் பணப்புழக்கம் இருக்காது என்று கூறப்படுகிறது. அது என்ன பொருள்? ஏன் அவ்வாறு கூறப்படுகிறது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக இரவு நேரங்களில் தயிர் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுவது வழக்கம். அறிவியல் ரீதியாக தயிர், இரவு நேரத்தில் எடுத்துக் கொண்டால், நமக்கு எளிதில் ஜீரணம் ஆகாது! இதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே இரவு நேரங்களில் தயிரை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவார்கள்.

- Advertisement -

ஒரு பாத்திரம் நிறைய பால் இருந்தாலும், அதில் ஒரு துளி தயிருடன் சேரும் பொழுது முழுவதுமாக தயிராக மாறி விடுகிறது. தயிரானது பாலை தன்னுடன் சேர்த்து தயிராக பெருகச் செய்வதால், இதை மகாலட்சுமிக்கு இணையாக ஆன்மீகம் குறிப்பிடுகிறது. ஆன்மீகத்தில் மகாலட்சுமியின் அம்சமாக பல பொருட்கள் கூறப்பட்டாலும், இந்த தயிர் மகத்துவமானதாக கருதப்படுகிறது.

எனவே தயிர் இரவு நேரங்களில் நீங்கள் எந்த ரூபத்தில் சாப்பிடும் பொழுதும் உங்கள் கையில் இருக்கும் பணப்புழக்கம் குறையும் என்பது நியதி! அது மட்டுமல்லாமல் தயிர், பால் போன்ற பொருட்களை இரவு நேரங்களில் மற்றவர்களுக்கு தானம் கொடுக்க கூடாது! இதனால் செல்வவளம் குறையும், கடன் பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பதும் உண்டு. தயிர், பால் போன்றவை மகாலட்சுமிக்கு இணையானது. ஒரு மனிதன் தாய்ப்பாலை விட அதிகமாக தன் வாழ்நாளில் குடிப்பது பசும்பாலை தான்!

- Advertisement -

எனவே பசுவில் இருந்து கிடைக்கக்கூடிய இந்த பால், தயிர், நெய், வெண்ணெய் போன்ற பொருட்களை இரவு நேரங்களில் தானம் கொடுத்தால் நம்மிடம் இருக்கும் அதிர்ஷ்டம் வெளியில் சென்று விடும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிர்ஷ்டத்தை தரக்கூடிய இந்த தெய்வீகமான பொருட்கள் எப்பொழுதும் இரவு நேரங்களில் தானம் கொடுக்க கூடாது. சிலர் உறை ஊற்றுவதற்கு தயிர் இல்லாமல் பக்கத்து வீட்டில் போய் கடன் வாங்குவது உண்டு. இது போல் கடன் வாங்கி வந்து உறை ஊற்றக் கூடாது. அதற்கு நீங்கள் காசு கொடுத்து கடையில் இருந்து தயிர் வாங்கி உறை ஊற்றி கொள்ளலாம்.

உறை ஊற்றப்படும் தயிரானது நம் இல்லத்தில் செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அதிக அளவு தயிரை இரவு நேரங்களில் தவிர மற்ற நேரங்களில் உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்வதால் ஆரோக்கியம், ஆயுள் நீடிக்கும். இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்யவும் தயிர் உதவியாக இருக்கிறது. இத்தகைய தயிர் எப்பொழுதும் வீட்டில் குறைவில்லாமல், தினமும் உறை ஊற்றி வைத்து பயன்படுத்தி வருவது மிகுந்த செல்வ வளத்தை கொடுக்கும். தயிரை உறை ஊற்றுவதற்கு இரவு நேரம் சரியாக இருக்கும். அந்த தயிரை இரவில் பயன்படுத்துவது மட்டுமே கூடாது! ஒரு டம்ளர் பாலில் கொஞ்சம் தயிரை ஊற்றி வைத்து விட்டு தினமும் தூங்க சென்று பாருங்கள், நல்ல தூக்கம் வரும்.

- Advertisement -