இருண்டு போன உங்கள் வாழ்க்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பரிகாரம்

amman
- Advertisement -

சில மனிதர்களால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது. எந்த முயற்சிகளை எடுத்தாலும் தோல்வி. எதைத் தொட்டாலும் பிரச்சனை. பேசினாலும் பிரச்சினை, பேசாமல் இருந்தாலும் பிரச்சனை, வேலைக்கு போனாலும் பிரச்சினை வேலைக்கு போகவில்லை என்றாலும் பிரச்சனை.

நின்றால் பிரச்சனை, நடந்தால் பிரச்சனை, உட்கார்ந்தால் கூட பிரச்சினை தூங்கினாலும் பிரச்சினை என்று இருள் சூழ்ந்த வாழ்க்கையில் தங்களுடைய வாழ்க்கையை நடத்திச் செல்வார்கள். வாழ்க்கையை சூனியம் அடைந்தது போல இருக்கும். இப்படி இருள் நிறைந்த வாழ்க்கையிலிருந்து வெளிவர, பிரகாசமான வாழ்க்கையில் மற்ற மனிதர்களைப் போல இவர்களும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால், என்ன செய்வது.

- Advertisement -

இதற்கு ஆன்மீகத்தில் ஒரு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொண்டால் இருள் சூழ்ந்த வாழ்க்கையில் நிச்சயம் ஒளி வீசும் அது என்ன திலகம். அதை எப்படி தயார் செய்வது. அதை தினமும் எப்படி இட்டுக் கொள்வது. பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

இருள் சூழ்ந்த வாழ்க்கையில் ஒளி பெற செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் பச்சை கற்பூரம், ஏலக்காய். இந்த இரண்டும் நேர்மறை ஆற்றலை கொடுக்கக் கூடியது. எதிர்மறை ஆற்றலை விளக்கக் கூடியது. பணவரவை கொடுக்கக் கூடியது. நல்லதை வசியம் செய்யக்கூடியது. ஒரு வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒரு சின்ன கொட்டாங்குச்சி எடுத்துக்கோங்க. அதில் இரண்டு துண்டு பச்சை கற்பூரம் போடுங்க. பச்சைக் கற்பூரத்தில் நெருப்பு வையுங்கள். அதில் நான்கு ஏலக்காய்களை போட வேண்டும். ‘ஓம் ஸ்ரீம்’ என்ற மந்திரத்தை சொல்லி இந்த ஏலக்காய்களை அந்த பச்சை கற்பூரத்தில் போட்டு எரித்து விடுங்கள். சாம்பல் கிடைத்திருக்கும். அந்த சாம்பலை சேகரித்து ஒரு சின்ன டப்பாவில் போட்டு சுத்தமான நெய் ஊற்றி கலந்தால் மை கிடைத்துவிடும்.

இந்த மையை சின்ன டப்பாவில் சேகரித்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். தினமும் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு குலதெய்வத்துக்கு விளக்கு ஏற்றி, மனதார வழிபாடு செய்ய வேண்டும். பிறகு இருள் நிறைந்த என்னுடைய வாழ்க்கை வெளிச்சத்துக்கு வர வேண்டும். கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து, இந்த திலகத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டு உங்களுடைய அன்றாட வேலையை தொடங்கி பாருங்கள்.

- Advertisement -

பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறையும். பிரச்சனைகள் எல்லாம் பகலவனைக் கண்ட பணியைப் போல உருகிப் போகும். 48 நாட்களுக்குள் இந்த திலகம் உங்களுக்கு நல்வாழ்க்கையை கொடுத்திருக்கும். ஆண்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். பெண்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: வியாபாரம் செழிக்க மட்டை தேங்காய் பரிகாரம்

உங்களுடைய பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேறவில்லை. வீட்டுக்குள்ளேயே இருக்காங்க. எதைத் தொட்டாலும் அவர்களுக்கு தோல்வியாகவே இருக்கிறது என்னும்போது நீங்கள் இந்த மையை தயார் செய்து உங்களுடைய பிள்ளையின் நெற்றியில் தினமும் வைத்து வர அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -