தலை முடி பிரச்சனை தீர

natural shampoo
- Advertisement -

தலை முடி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அவர்களுடைய தலைமுடி பிரச்சனைகள் அனைத்தையும் நீக்குவதற்கு பல வழிமுறைகளை பின்பற்றி இருப்பார்கள். அதிலும் குறிப்பாக பெண்களை சொல்லவே வேண்டாம். யார் யார் என்னென்ன சொல்கிறார்களோ அவை அனைத்தையுமே முயற்சி செய்து பார்ப்பார்கள்.

அப்படி முயற்சி செய்து பார்த்தும் எந்த பலனும் இல்லை என்று நினைப்பவர்களும் சரி ஆண்களும் சரி இதை வாரத்திற்கு ஒருமுறை மட்டும் தலையில் தேய்த்து குளித்தால் போதும் தலை முடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும். அதை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தலைமுடி உதிர்தல் பிரச்சினை என்பது பல காரணங்களால் ஏற்படக்கூடும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பிரச்சனைகள் ஏற்பட்டு அந்த பிரச்சினையால் தலைமுடி உதிர்தல் என்பது ஏற்படும். எதனால் தலைமுடி உதிர்கிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்றார் போல் வழிமுறைகளை பின்பற்றினால் தான் தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது நீங்கும். ஆனால் இந்த ஒரு பொருளை நாம் எந்த பிரச்சினைக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எதனால் தலைமுடி உதிர்தல் ஏற்பட்டாலும் இந்த ஒரு பொருளை தலைக்கு தேய்த்து குளிப்பதன் மூலம் அந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.

இதை இயற்கையான ஷாம்பூ என்று கூட கூறலாம். கண்டிப்பான முறையில் அனைவரும் வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு குளிப்போம். இந்த பொருளை பயன்படுத்தி குளித்தாலே நல்ல பலன் கிடைக்கும். இதற்கு நமக்கு இரண்டு ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் தேவைப்படும். இதை முதல் நாள் இரவே தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலையில் எழுந்து ஊற வைத்திருக்கும் இந்த வெந்தயத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விட்டு இதனுடன் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய கற்றாழை ஜெல் 2 ஸ்பூன் சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் சுத்தம் செய்த 15 வேப்ப இலைகளை சேர்க்க வேண்டும். அடுத்ததாக 10 செம்பருத்தி இலைகளை சுத்தம் செய்து இதனுடன் சேர்க்க வேண்டும். குறைந்த அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி இதை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்ட்டை தலையில் தடவி அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பிறகு இதை நாம் எப்பொழுதும் ஷாம்பு போட்டு தலைக்கு குளிப்பது போல் நன்றாக தேய்த்து குளித்து விடலாம். ஷாம்பு போட வேண்டும் என்று அவசியமே இல்லை. தலையில் இருக்கக்கூடிய எண்ணெய் பிசுக்கும் சரி அழுக்குகளும் சரி இந்த இயற்கையான ஷாம்புவில் நீங்கிவிடும். இயற்கையிலேயே உற்பத்தியாக கூடிய எண்ணெய் பசை மட்டுமே மீதம் இருக்கும்.

- Advertisement -

நாம் செயற்கையாக உருவாக்கப்படக்கூடிய ஷாம்புவை பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய தலை முடி வறட்சி ஏற்பட்டு அதனாலேயே பல முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படும். இந்த இயற்கையான ஷாம்புவை பயன்படுத்துவதன் மூலம் தலை முடி வறட்சி என்பது ஏற்படாது. அதோடு எதனால் தலைமுடி உதிர்கிறதோ அந்த பிரச்சினையும் நீங்கி புது முடிகள் கருகருவென்று வளர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: தலை முடியை அடர்த்தியாக வளரச் செய்ய உதவும் எண்ணெய்

சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் மட்டும் குறைந்த நேரம் ஊற வைத்து தலைக்கு தேய்த்து குளித்து விடலாம். வெதுவெதுப்பான நீரில் தலையை அலச சளி பிடிக்கும் பிரச்சினையும் ஏற்படாது. இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய மிகவும் அற்புதமான இந்த ஷாம்புவை பயன்படுத்தி தலைமுடி பிரச்சினையை முற்றிலுமாக நீக்க முடியும்.

- Advertisement -