ஜனவரி முதல் நாள், முதலில் பார்க்க வேண்டிய பொருள்

vasambu
- Advertisement -

ஏதாவது ஒரு விசேஷ நாள், நல்ல நாள் என்று வந்தால், வீட்டில் இருக்கும் பெண்கள் கொஞ்சம் முன்கூட்டியே உங்களுடைய வீட்டை சுத்தம் செய்து விட வேண்டும். திங்கட்கிழமை புது வருடம் பிறக்கப் போகிறதா, ஞாயிற்றுக்கிழமையே வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை சுத்தம் செய்து, பூஜை பாத்திரங்களை தேய்த்து, வரக்கூடிய புத்தாண்டை வரவேற்க தயாராகிக் கொள்ளுங்கள்.

நாளைய தினம் திங்கட்கிழமை புது வருடம் பிறக்கவிருக்கின்றது. திங்கட்கிழமை காலை நீங்கள் கண்விழிக்கும் போது, இந்த ஒரு பொருளை பார்த்தால் போதும் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு வருமானத்திற்கு பஞ்சமே இருக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. அது எந்த ஒரு பொருள். அதை எப்படி பார்க்க வேண்டும் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

நாம் வாழக்கூடிய வாழ்க்கைக்கு முழு அர்த்தம் என்ன தெரியுமா. வாழும் போது சந்தோஷமாக வாழ வேண்டும். அவ்வளவுதான். இந்த சந்தோஷத்தை நாம் கண்ணில் பார்க்க வேண்டும். அதற்காக தட்டில் சந்தோஷத்தை எடுத்து வைத்து பார்க்க முடியுமா. நிச்சயம் முடியாது. நமக்கு சந்தோசத்தை கொடுக்க கூடிய பொருள் எது. அந்த 1 பொருளில் தான், புது வருடத்தில் முதலில் நாம் கண்விழிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளில் சந்தோஷம் கிடைக்கும்.

சிலருக்கு பணத்தின் பார்த்தால் சந்தோஷம் வரும், சிலருக்கு நகையை பார்த்தால் சந்தோஷம் வரும், சிலருக்கு அழகான சில பொருட்களை பார்த்தால் சந்தோஷம் வரும், சிலருக்கு புத்தகத்தை பார்த்தால் சந்தோஷம் வரும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளின் மீது ஈடுபாடு இருக்கும். அந்த வரிசையில் உங்களுக்கும், உங்களுடைய மனதிற்கும் சந்தோஷத்தை கொடுக்கக் கூடிய பொருள் எது.

- Advertisement -

அதை எடுத்து 31 ஆம் தேதி இரவு ஞாயிற்றுக்கிழமை இரவே நீங்கள் படுக்கின்ற இடத்திற்கு பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் அந்த 1 பொருளின் மீது கண்வழிக்கலாம். அந்த சந்தோஷம்தான் இந்த வருடம் முழுவதும் உங்களுடன் தொடர்ந்து வரும்.

சரிங்க இது எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம். இது தவிர பரிகாரமாக ஏதாவது செய்யலாமா, செய்யலாம். ஒரு தாம்பூல தட்டில் ரூபாய் நோட்டுகள், புஷ்பங்கள், உங்கள் வீட்டில் இருக்கும் தங்க நகை, ஒரு சின்ன சுவாமி படம், இதோடு சின்னதாக 1 வசம்பு துண்டு, 1 ஜாதிக்காய் இவைகளை எல்லாம் ஒன்றாக வைத்துவிட்டு காலை எழுந்ததும் இந்த பொருட்களில் கண்விழித்தால் இந்த பொருட்கள் எல்லாம் உங்களுக்கு வசியமாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால் உங்களுக்கு வருமானத்திலும் தடை இருக்காது.

- Advertisement -

ஆன்மீகம் சார்ந்த இந்த விஷயங்களையும் நீங்கள் பின்பற்றி கொள்ளலாம். இது தவிர இன்னொன்றும் இருக்கிறது. உங்கள் மனதிற்குப் பிடித்தவர்கள், உங்கள் வீட்டில் இருப்பார்கள், உங்களுடைய மனைவியை, உங்களுக்கு பிடிக்கலாம். கணவரை பிடிக்கலாம். குழந்தைகளை பிடிக்கலாம். தாய் தந்தை முகத்தில் கண் விழிக்கலாம்.

இப்படி பிடித்தவர்களுடைய முகத்தில் விழிப்பதும், உங்களுக்கு நல்லதை மட்டுமே நினைப்பவர்களுடைய முகத்தில் கண்வலிப்பதும் சந்தோஷத்தை கொடுக்கும். இந்த வருடம் முழுவதும் அவர்களுடன் சந்தோஷமாக சேர்ந்து வாழ பிடித்தவர்கள் முகத்தில் விழித்துப் பாருங்கள். அதுவும் நன்மையை தரும்.

இதையும் படிக்கலாமே: மார்கழி மாத தேய்பிறை பஞ்சமி திதி வாராகி வழிபாடு

கண்விழித்தது இந்த பொருட்களை எல்லாம் பார்த்ததும் பிறகு சுத்தபத்தமாக குளித்துவிட்டு குடும்பத்தோடு வீட்டு பூஜை அறையில் வீட்டு பெண்கள் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து, குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று, இறைவழிபாடை முடித்துக் கொண்டு வீடு திரும்பவும். பிறக்கவிருக்கும் புத்தாண்டு எல்லோருக்கும் நல்ல புத்தாண்டாக இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -