வியாபாரத்தில் வெற்றி பெற பைரவர் வழிபாடு.

bhairavar business
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் துன்பங்கள் என்பது ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும். அந்த துன்பங்களை எதிர்கொண்டு போராடி ஜெயிப்பவரே வாழ்க்கையில் வெற்றி பெறுவார். அப்படி போராடி ஜெயிக்கும் பொழுது நமக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் விளங்கக்கூடிய சில தெய்வங்கள் இருக்கின்றன. அந்த தெய்வங்களில் மிகவும் முக்கியமான இடத்தை பிடிக்கக் கூடிய ஒருவர்தான் பைரவர். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பைரவரை எந்த முறையில் வழிபட்டால் வியாபாரத்தில் வெற்றிகள் பெருகும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

துன்பங்கள் என்று பார்க்கும் பொழுது குடும்ப ரீதியாகவோ, படிப்பு ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ என்று ஏதாவது ஒரு ரூபத்தில் துன்பங்கள் வரும். ஒவ்வொரு துன்பத்திற்கும் ஒவ்வொரு வகையான பரிகாரங்கள் இருக்கின்றன. இந்த பதிவில் வியாபாரத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கு செய்யக்கூடிய பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

ஒருவர் செய்கின்ற தொழிலில் வெற்றி அடைந்தால் தான் அவருடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் பல பேர் தங்களுடைய தொழிலில் நஷ்டத்தை சந்தித்து அந்த தொழிலை நடத்த முடியாமல் போய் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் சரி அல்லது வியாபாரத்தை செய்து கொண்டு இருப்பவர்களாக இருந்தாலும் சரி தங்கள் வியாபாரம் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பைரவரை புதன்கிழமை அன்று வழிபட வேண்டும்.

புதன்கிழமை அன்று காலையில் 10:30 மணி முதல் 12 மணிக்குள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கும் பைரவருக்கு சந்தன காப்பு செய்ய வேண்டும். பிறகு அவருக்கு மரிக்கொழுந்து மாலையை சூட்ட வேண்டும். அதோடு அவருக்கு புனுகு பூச வேண்டும். அவருக்கு நெய்வேத்தியமாக பாசிப்பயறு சுண்டல், பாசிப்பருப்பு பாயாசம், கொய்யாப்பழம், பாசிப்பருப்பு பொடி கலந்த சாதம் என்று இவைகளில் ஏதாவது ஒன்றையோ அல்லது தங்களின் வசதிக்கேற்ப அனைத்துமே செய்து படையல் போடலாம்.

- Advertisement -

இலுப்பை எண்ணெயில் பைரவருக்கு இரண்டு விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். அடுத்ததாக வியாபாரத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அர்ச்சனை செய்ய வேண்டும். பூஜை முடிந்த பிறகு படையல் இட்ட நெய்வேத்தியத்தை அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் பைரவரை வழிபட்டு வந்தால் நாம் செய்யும் வியாபாரத்தில் வெற்றிகளை குவிக்க முடியும். தொழில் நல்ல லாபகரமாக நடைபெறும். வியாபாரத்திலும் தொழிலிலும் இருக்கக்கூடிய எதிரிகளை வைரவர் தவிடு பொடி ஆக்கிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு கட்டை நம் வீட்டில் இருந்தால் தங்கம் தங்கு தடையின்றி சேரும்.

யார் ஒருவர் இந்த பூஜையை முறையாக செய்து பைரவரை வழிபட்டு வருகிறார்களோ அவர்களுடைய வியாபாரத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி வெற்றிகள் வந்து சேரும்.

- Advertisement -