வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்க பரிகாரம்

salary increase pariharam
- Advertisement -

ஒவ்வொருவருக்கும் வேலை கிடைப்பது ஒரு பெரிய பிரச்சனை என்றால் கிடைத்த வேலையில் நிரந்தரமாக இருப்பதும் நிம்மதியாக வேலை செய்வதும் அதைவிட பெரிய பிரச்சனை. ஏனென்றால் போட்டி நிறைந்த இந்த உலகில் எப்படியோ வேலை கிடைத்தாலும் கூட பொறாமை மிக்க மனிதர்களால் நிம்மதியாக நாம் அந்த வேலையை செய்ய முடிவதில்லை.

அதிலும் சில இடத்தில் உயரதிகாரிகள் தொல்லை மிக அதிகமாகவே இருக்கும். நாம் என்ன வேலை செய்தாலும் அதில் ஏதேனும் குறை சொல்லி மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார்கள். இப்படியான சூழ்நிலையில் வேலைக்கு செல்லவே விருப்பம் இருக்காது. அது போல சூழ்நிலையில் சிக்கி இருப்பவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

- Advertisement -

பணியிடத்தில் நற்பெயர் வாங்க பரிகாரம்

இந்த பரிகாரம் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏனெனில் இது தங்களுக்கு மேல் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தங்களுக்குமான பிணக்தை சரி செய்வதற்கான பரிகாரம். அது எந்த வேலை செய்பவராக இருந்தாலும் பரவாயில்லை செய்யலாம்.

இந்த பரிகாரத்தை நீங்கள் புதன்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை என்று செய்யலாம். இந்த இரண்டு தினங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறந்ததாக சொல்லப்படுகிறது. அதை போல் இந்த பரிகாரத்தை நீங்கள் பூஜை அறையில் அமர்ந்து செய்யலாம். அதேபோல் இந்த பரிகாரத்தை காலை வேலையில் செய்து விடுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்ய இரண்டு கிராம்பு, இரண்டு கற்பூரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் ஒரு சிறிய தட்டு அல்லது கற்பூரம் காட்டும் தீபாரதனை தட்டு இருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் இரண்டு கற்பூரத்தை கொளுத்துங்கள். அந்த கற்பூரத்தில் இரண்டு கிராம்பை போடுங்கள். கிராம்பு உடையாத முழு கிராம்பாக இருக்க வேண்டும்.

கிராம்பு போடும் போது உங்கள் உயர் அதிகாரி மனதில் நினைத்து அவருடன் உங்களுக்கு இருக்கும் மனக்கசப்பு நீக்க வேண்டும் என்றும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த கிராம்பு முழுவதுமாக கற்பூரத்தில் எரிய வேண்டும் ஆகையால் கற்பூரம் போதவில்லை என்றால் இன்னும் கூட போடலாம் தவறில்லை.

- Advertisement -

இது முழுவதுமாக எரிந்த பிறகு கால் படாத இடத்தில் கொண்டு தட்டி விடுங்கள். இந்த பரிகாரத்தை எத்தனை நாள் செய்ய வேண்டும் என்பதெல்லாம் கிடையாது துவங்கும் நாள் புதன், ஞாயிறு அன்று துவங்க வேண்டும் . இதை தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள் ஒரு வேளை அந்தப் பிரச்சினை முடிந்து விட்டாலும், வரும் நாட்களிலும் அந்த உறவு பலப்பட இந்த பரிகாரம் உதவி செய்யும்.

இதையும் படிக்காலமே: நினைத்த காரியம் நடக்க விநாயகர் வழிபாடு

எத்தனையோ வகையான பிரச்சனைகளுக்கு பலவிதமான பரிகாரங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். இது போன்ற பிரச்சனைகளுக்கு இப்படி ஒரு சில பரிகாரங்களை உள்ளது அதில் எது மிகவும் பலன் தரும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -