கடன் தீர அஷ்டமி திதியில் சொல்ல வேண்டிய மந்திரம்

bhairavar sad lady
- Advertisement -

பைரவர் வழிபாடு என்றாலே அது அஷ்டமி தான் என்பது அனைவருக்கும் தெரிந்தது இருக்கும். இந்த அஷ்டமி திதி மாதத்தில் இரண்டு முறை வரும் ஒன்று வளர்பிறை அஷ்டமி, மற்றொன்று தேய்பிறை அஷ்டமி. நம்முடைய செல்வ வளம் பெருக்கவும், பணவரவை அதிகரித்துக் கொள்ளவும் வளர்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்குவது சிறப்பு.

அதே போல நம்முடைய துன்பங்கள், துயரங்கள் சேர்ந்து கடன் பிரச்சனை அகல தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும். அதாவது வாழ்க்கையில் வளர வேண்டியவை எல்லாம் வளர்பிறை அஷ்டமியிலும், தீர வேண்டியவை எல்லாம் தேய்பிறை அஷ்டமியிலும் செய்வது இந்த வழிபாட்டின் சிறப்பு.

- Advertisement -

இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் வந்திருக்கும் இந்த தேய்பிறை அஷ்டமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய அஷ்டமியில் மாலை பைரவரை இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டால் நம்முடைய துன்பம் துயரம் அனைத்தும் தீரும் என்று சொல்லப்படுகிறது. அது குறித்தான தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

கடன் கஷ்டங்கள் தீர பைரவர் மந்திரம்

பைரவர் வழிபாடு அஷ்டமி திதியில் செய்தாலும் ராகு காலத்தில் செய்வது மிகவும் சிறப்பு இந்த ராகு காலமானது ஞாயிற்றுக்கிழமையில் வருவது மேலும் சிறப்பு. ஏனெனில் பொதுவாகவே இந்த நான்கு முப்பதிலிருந்து ஆறு மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்று சொல்வார்கள். ஞாயிற்றுக்கிழமையில் மட்டுமே இந்த நேரத்தில் ராகு காலமும் சேர்ந்து வரும்.

- Advertisement -

இத்தகைய அற்புதமான இந்த நாளில் அஷ்டமி திதியும் இணைந்து வந்திருப்பதால் நம்முடைய துன்பங்கள் அனைத்தும் காணாமல் போக இதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. இன்று மாலை ராகு கால நேரத்தில் அருகில் உள்ள சிவாலயத்தில் இருக்கும் பைரவரை வழிபாடு செய்வது சிறப்பு.

பைரவரத்துக்கு பூசணி தீபம், தேங்காய் தீபம், மிளகு தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்கள் மறக்காமல் இன்றைய நாளில் செய்யுங்கள். அப்படி செய்வதோடு இந்த ஒரு மந்திரத்தை வைரவர் அமர்ந்து 106 முறை சொல்லுங்கள். இதனால் கடன் பிரச்சனைகள் தீர்வதுடன் செல்வ வளமும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

மந்திரம்

ஓம் பைரவாய வித்மஹே
ஹரி ஹரப்ரம் ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!

என்ற இந்த மந்திரத்தை மனதார 106 முறை பைரவரை நினைத்து சொல்லுங்கள். ஒரு வேளை ஆலயத்திற்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இந்த நேரத்தில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு வடக்கு நோக்கி அமர்ந்து இதை மந்திரத்தை 106 முறை ஜெபித்து வழிபாடு செய்யுங்கள்.

இந்த வழிபாட்டுடன் நாய்களுக்கு மறக்காமல் பிஸ்கட் வாங்கி போடுங்கள். பைரவரின் இந்த ஒரு மந்திர வழிபாடு போதும் உங்கள் துன்பங்கள் எல்லாம் தீர்வதுடன் அஷ்டலட்சுமிகளின் அனுகிரகத்தையும் பெற்று செல்வ வளத்துடன் நீங்கள் வாழ்வது உறுதி.

இதையும் படிக்கலாமே: பணம் சேர கற்பூர பரிகாரம்

இந்த மந்திர வழிபாட்டில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பைரவரின் பரிபூரண அருளாசியுடன் நல்லதொரு வளமான வாழ்க்கையை வாழுங்கள்.

- Advertisement -