கடன் அடைய ஏற்ற வேண்டிய தீபம்

kadan deepam
- Advertisement -

நாம் உண்டு நம் வேலை உண்டு, நாம் வாங்கிய சம்பளத்திற்குள் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைத்தாலும் நம்மை தேடி வந்து கடன் தருகிறோம் அது தருகிறோம் இது தருகிறோம் என்று ஆசை வார்த்தைகள் கூறி நம்மை கடன்காரனாக ஆக்கக்கூடிய சூழ்நிலை இன்றைய காலகட்டத்தில் அதிகமாகவே இருக்கிறது. அப்படி ஆசை வார்த்தை காட்டி அதில் ஏமாந்து நம்முடைய தகுதிக்கு மீறி கடனை வாங்கி கடைசியில் அந்த கடனை செலுத்த முடியாமல் அவமானப்பட்டு அசிங்கப்பட்டும் என்ன செய்வது என்றே தெரியாமல் இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வீட்டில் எந்த தீபத்தை ஏற்றினால் கடனால் பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒருவருடைய வாழ்க்கையில் கிரகங்களின் அமைப்பு சரி இல்லாத பட்சத்தில் அவர் அமைதியாக வீட்டிலேயே இருந்தாலும் அவரைத் தேடி பிரச்சினைகள் வரும் என்று கூறுவார்கள். அப்படி வரக்கூடிய மிகப்பெரிய பிரச்சினையில் ஒன்றுதான் கடன் பிரச்சனை. கடன் பிரச்சனை ஏற்படுவதற்கு நவகிரகங்கள் தான் காரணமாக திகழ்கின்றன. அப்படிப்பட்ட நவகிரகங்களை சாந்தி செய்வதற்கும் அதே சமயம் பண வரவை அதிகரிக்கவும், அதிகரித்த பணவரவால் கடனை அடைக்கவும் செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்றோ அல்லது சனிக்கிழமை அன்றோ செய்யலாம். இரண்டு நாட்களும் கூட செய்யலாம். தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். செவ்வாய்க்கிழமை செய்வதாக இருந்தால் ராகு காலத்திலும், சனிக்கிழமை செய்வதாக இருந்தால் எமகண்ட நேரத்திலும் செய்ய வேண்டும்.

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாக என்று நாம் தீபத்தை ஏற்றுகிறோமோ அன்றைய தினம் அருகில் இருக்கும் நாட்டு மருந்து கடைக்கு சென்று நவதானியங்களை வாங்கி வர வேண்டும். ஒரு பித்தளை தாம்பாள தட்டை எடுத்து அதை சுற்றி 9 சந்தன குங்குமங்களை வைத்து அதில் இந்த நவதானியங்களை கொட்டி பரப்பிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகல் விளக்கை எடுத்து அதற்கும் ஒன்பது சந்தன குங்குமங்களை வைத்து அந்த அகல் விளக்கை நாம் பரப்பி வைத்திருக்கும் நவதானியத்தின் மேல் நடுவில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

பிறகு அதில் சிறிதளவு டைமண்ட் கற்கண்டை சேர்க்க வேண்டும். அடுத்ததாக இதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தீபம் ஏற்றிய பிறகு நமக்கு யார் அதிக அளவில் பண நெருக்கடி தருகிறார்களோ அவர்களுக்கு தருவதற்காக நம்மால் முடிந்த அளவு பணத்தை எடுத்து அந்த நவதானிய தாம்பாள தட்டிற்கு கீழ் வைக்க வேண்டும். பேங்கில் நாம் கடன் வாங்கி இருந்தால் அதை கட்டுவதற்கான தொகையை ஒரு செக்கில் பூர்த்தி செய்து அதை வைக்கலாம்.

இப்படி வைத்து வழிபடுவதன் மூலம் நவகிரகங்களின் அருள் நமக்கு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் பணவரவை ஏற்படுத்தக்கூடிய சுக்கிரனின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். இப்படி இவர்கள் அனைவரின் அருளும் நமக்கு கிடைப்பதால் பணவரவு என்பது அதிகரித்து விரைவிலேயே நம்முடைய கடன் பிரச்சினைகள் தீர்வதற்கு வழி கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்கும் சிவ வழிபாடு

மிகவும் எளிமையான இந்த நவதானிய தீபத்தை ஏற்றுபவர்களுடைய வாழ்க்கையில் கடன் பிரச்சனை என்பது படிப்படியாக குறைந்து நிம்மதியான வாழ்க்கையை பெற முடியும்.

- Advertisement -