மீளவே முடியாத கடன் தொல்லையிலிருந்து எப்படி மீண்டோம் என்றே தெரியாமல் மீண்டு வர சக்தி வாய்ந்த இந்த தீபத்தை ஏற்றுங்கள். நிச்சயம் இனி கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்கள்.

- Advertisement -

மீளவே முடியாத கடன் தொல்லையிலிருந்து எப்படி மீண்டோம் என்றே தெரியாமல் மீண்டு வர சக்தி வாய்ந்த இந்த தீபத்தை ஏற்றுங்கள். ஒரு மனிதன் வாழ்நாளில் கடனை வாங்கி விட்டு அந்த கடனை அடைக்கவே திரும்பவும் தன் வாழ்நாள் முழுவதும் ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு காலக்கட்டத்தில் தான் இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடன் தான் வாங்கி வாழ வேண்டும் என்று யாரும் நினைப்பது கிடையாது. சூழ்நிலை அப்படி அமையும் போது வேறு வழியில்லாமல் கடன் வாங்கி அதில் சிக்கிக் கொள்வார்கள். அப்படி கடனில் சிக்கி மீள முடியாமல் தவிப்பவர்கள் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் கடன் பிரச்சனையிலிருந்து எளிதில் வெளி வரலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்யலாம் என்பதை ஆன்மீகம் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

கடன் தீர அரச மர வழிபாடு
கடன் தீர செய்யப்படும் பெரும்பாலான பரிகாரங்கள் அரச மரத்தை சார்ந்தவையாகவே இருக்கும். இதற்கு காரணம் அரச மரமானது மகாலட்சுமி தாயாரின் சொரூபமாக பார்க்கப்படுகிறது. அதிலும் இந்த பரிகாரத்தை சனிக்கிழமை நாள் என்று தான் செய்ய வேண்டும். சனிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயார் விஷ்ணு பெருமாள் இதில் ஒன்றாக வீற்றிருப்பதாக ஒரு ஐதீகமே உண்டு. அந்த நாளில் கடன் அடைய செய்யப்படும் எந்த பரிகாரமும் பெரும் அளவு பலனை தரும் என்பதாலே இந்த பரிகாரங்கள் செய்யப்படுகிறது.

- Advertisement -

இப்போது கடனை அடைக்க நாம் செய்ய வேண்டிய இந்த பரிகாரமும் சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். சனிக்கிழமை காலை முதல் மாலை வரை உங்களால் முடிந்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்திற்கு நான்கு முக அகல் விளக்கு கட்டாயம் தேவை. இத்துடன் விளக்கேற்ற எண்ணெய் அல்லது நெய் திரி மஞ்சள், குங்குமம் போன்றவை மட்டும் இருந்தால் போதும்.

சனிக்கிழமை அன்று இந்த விளக்குடன் நீங்கள் அரச மரத்தடிக்கு செல்ல வேண்டும். அங்கு இந்த நான்கு முக விளக்கை வைத்து கொஞ்சம் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து இந்த விளக்கிற்கு ஒரு பூவையும் வைத்த பிறகு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி தீபத்தை ஏற்ற வேண்டும். அதன் பிறகு மகாலட்சுமி தாயாரையும் விஷ்ணு பெருமாளையும் மனதார நினைத்துக் கொண்டு நாங்கள் வாங்கி இருக்கும் இந்த கடன் தொல்லையிலிருந்து விரைவில் வெளிவர அருள் புரிய வேண்டும் என்று மனதார அந்த ஆலயத்தில் சிறிது நேரம் அமர்ந்து வேண்டிக் கொள்ளுங்கள்.அதன் பிறகு நீங்கள் வீட்டிற்கு வந்து விடலாம்.

- Advertisement -

இந்த பரிகார விளக்கை ஏழு வாரங்கள் தொடர்ந்து ஏற்ற வேண்டும். ஒரு சிலருக்கு ஏற்றிய சில வாரங்களுக்குள்ளாகவே இந்த கடனிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்து விடும். ஆனாலும் நாம் இந்த தீப வழிபாட்டை தொடர்ந்து செய்ய வேண்டும் ஏழு வாரங்கள் முழுமையாக முடித்து பிறகு தான் பரிகாரத்தை நிறுத்த வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யத் தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே உங்களுக்கு இருக்கும் இத்தகைய கடன் பிரச்சனையிலிருந்து வெளிவருவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் அல்லது எந்த கடனை அடைக்க நீங்கள் வேறு ஏதேனும் பணம் பெரும் முயற்சியில் ஈடுபட்டாலும் அதுவும் வெற்றி அடையும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தினமும் இந்த திலகத்தை வைத்தால் போதும் சுக்கிர யோகம் பெற்று ஆனந்தமான,அழகான வாழ்க்கை அமைவதோடு நீங்கள் கனவிலும் நினைத்து பார்க்க உயரத்தை தொடலாம்.

கடன் அடைய நீங்கள் எடுக்கும் பெரும் முயற்சியோடும் உழைப்போடும் இந்த ஒரு எளிய பரிகாரத்தையும் செய்து கடன் என்னும் பெரிய தொல்லையிலிருந்து வெளிவந்து நிம்மதியானது ஒரு வாழ்க்கையை வாழ வழி தேடி கொள்ளலாம் என்று இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொ

- Advertisement -