கடன் தீர சித்தர்கள் சொன்ன பரிகாரம்

kadan theera
- Advertisement -

கடன் என்னும் கடலில் மூழ்கிக் காணாமல் போனவர்கள் ஏராளமானோர். யார் ஒருவர் கடன் இல்லாத வாழ்க்கை வாழ்கிறார்களோ, அவர்கள் தான் உலகிலே நிம்மதியாக வாழக் கூடியவர்கள் என்று ஆணித்தரமாக சொல்லலாம். கடன் அத்தகை கொடிய அரக்கன் இது கடனால் பாதிக்கப்பட்டு தினம் தினம் அவதிப்படும் அனைவருக்கும் நன்றாக புலப்படும்.

அதிலும் கடன் வாங்கி விட்டு அதை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் நாம் படும் அவமானங்களை சொல்லி மாளாது. இந்த கடனால் நெருங்கி பழகியவர்கள் கூட நம்மை ஏளனமாக பேசி நோகடித்து விடுவார்கள். ஓரளவிற்கு கடன் இருப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால், ஒரு சிலர் தங்களுடைய நிலைமைக்கு மேல் கடன் வாங்கி இருப்பார்கள். அவர்களின் நிலை எல்லாம் எண்ணிப் பாருங்கள்.

- Advertisement -

யாரும் கடனுடன் வாழ ஆசைப்படுவதில்லை கடன் வாங்கும் போது அதை அடைத்து விடலாம் என்ற நம்பிக்கை தான் வாங்கி இருப்போம். ஆனால் சூழ்நிலை அதற்கான வாய்ப்பை நமக்கு தராமல் தள்ளிக் கொண்டே செல்லும். இப்படியான கடன் தொல்லையிலிருந்து மீளவும், நிம்மதியான வாழ்க்கை வாழவும் எளிமையான ஒரு பரிகாரத்தை சித்தர்கள் நமக்கு தந்திருக்கிறார்கள். அதைப்பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

கடன் தீர நாய்களுக்கு உணவு

கடன் தீர வழிபடும் தெய்வங்களில் முக்கியமானவர் எனில் அவர் காலபைரவர் தான். ஏனெனில் ஒருவர் கடனால் உழைத்து துன்பப்படுவதை அவருடைய கர்ம வினையால் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய கர்ம வினை தீர்த்து கடன் என்னும் அரக்கனிடமிருந்து விடுவிப்பவர் இந்த காலபைரவர்.

- Advertisement -

ஆகையால் கடன் தீர வேண்டும் எனில் முதலில் இந்த வழிபாட்டை சரியாக செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரத்தில் சிவாலயத்தில் உள்ள கால பைரவருக்கு தீபம் ஏற்றி செவ்வரளி மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள். இத்துடன் கடன் தீர மிளகு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அது மேலும் நல்ல பலனை சீக்கிரத்தில் பெற்று தரும் இத்துடன் சேர்த்து நாம் செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் உண்டு.

அது நாய்களுக்கு உணவு அளிப்பது. பெரும்பாலும் கடன் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் நாய்களுக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்தாலே தீர்ந்து விடும். இந்த முறை ஓரளவுக்கு கடன் இருப்பவர்கள். இதை செய்தும் தீரவில்லை என்பவர்கள் நாய்களுக்கு நல்லி எலும்பை உணவாக தர வேண்டும் என்று சொல்லப்படுகிறது. நாங்களே கடன் வாங்கி துன்பப்படுகிறோம் இதில் நாய்களுக்கு எப்படி என்று கேள்வி கேட்கலாம்.

- Advertisement -

அத்தகைய பெரிய கடன் அடைய நமக்கு வாய்ப்பு ஏற்பட வேண்டும் எனில் ஒரு சில விஷயங்களை நாம் செய்து தான் ஆக வேண்டும். தினமும் செய்யவில்லை என்றாலும் வாரத்திற்கு ஒரு நாளாவது இதை செய்து பாருங்கள். இத்துடன் தினமும் நாய்களுக்கு பிஸ்கட் வாங்கி கொடுங்கள். அசைவம் சாப்பிடாதவர்கள் யாரையாவது செய்து தர சொல்லி போடலாம் அல்லது கடையில் வாங்கியாவது போடுங்கள்.

இதையும் படிக்கலாமே: தங்க நகை சேர மந்திரம்

கடன் தீர இது வழியா என்று யோசிக்கலாம். நாய் பைரவரின் சுரூபமாகவே பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில் நாய்களுக்கு நாம் உணவளிப்பதே நமக்கு பெரும் புண்ணியத்தை தேடி தரும். ஆனால் இது ஒரு பரிகார முறையாக சித்தர்கள் சொல்லி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் செய்து பார்த்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -