கடன் தீர வாராகி வழிபாடு

varahi karpuram
- Advertisement -

கடன் தீர்ந்து செல்வம் சேர பல வகையான வழிபாடுகள் இருந்தாலும் வாராகி அன்னை வழிபாடு அதிக பலனை தரக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் கார்த்திகை தேய்பிறை பஞ்சமி. இந்த பஞ்சமி திதியானது வெள்ளிக்கிழமை மாலை 4.41 க்கு தொடங்கி நாளை சனிக்கிழமை மாலை 6.17 வரை உள்ளது. பொதுவாக வாராகி அன்னை வழிபாடு இரவு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆகையால் இன்றைய தினமே இந்த வழிப்பாடு செய்வது உகந்ததாக கருதப்படுகிறது.

வாராகி அன்னை வழிபாட்டில் நம்முடைய துன்பங்கள் துயரங்கள் கடன் போன்றவை தீர தேய்பிறையில் வணங்க வேண்டும். தேய்பிறையில் வணங்கும் போது அவையெல்லாம் தேய்ந்து போகும் என்பது ஒரு நம்பிக்கை. அதே போல் செல்வம் பெருக, வியாபார விருத்தி போன்றவை எல்லாம் வளர்பிறையில் செய்வது உகந்ததாக சொல்லப்படுகிறது. கடன் தீர செய்யப்படும் இந்த தேய்பிறை வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் தீர்ந்து செல்வம் பெருக வாராகி வழிபாடு

இந்த வழிபாடு இன்றைய மாலை 7 மணிக்கு மேல் உங்களுடைய வீட்டிலே செய்து கொள்ளலாம். வாராகி அன்னை படம் இருந்தால் அதை துடைத்து மஞ்சள், குங்குமம், பொட்டு வைத்து செவ்வரளி அல்லது செம்பருத்தி மாலை சூட்டி செய்து கொள்ளுங்கள். படம் இல்லாதவர்கள் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுங்கள். இந்த தீபம் ஐந்து முக விளக்கு அல்லது ஐந்து அகல் விளக்கு ஏற்ற வேண்டும். இது மிகவும் முக்கியம்.

வராகி அன்னைக்கு நெய்வேதியமாக நிலத்தின் அடியில் விளையும் எந்த கிழங்கு வகைகளை வேண்டுமானாலும் படைக்கலாம். இதையெல்லாம் தயாராக செய்த பிறகு சாம்பிராணி தூபம் போட்டு வீடு முழுவதும் நல்ல தெய்வீக மனம் கமழும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்து இந்த பரிகாரத்திற்கு 5 ஏலக்காய், பச்சைக் கற்பூரம் இரண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வாராகி அன்னைக்கு முன்பு தீபம் ஏற்றி வைத்த பின் வாராகியின் ஸ்லோகம் தெரிந்தவர்கள் அதை சொல்லலாம். ஸ்லோகம் தெரியாதவர்கள் வாராகி அன்னையே போற்றி என்ற இந்த நாமத்தை மட்டும் 54 அல்லது 108 முறை சொல்லுங்கள். அதன் பிறகு ஒரு சிறிய அகல் விளக்கில் பச்சைக் கற்பூரத்தை போட்டு எரிய விடுங்கள். இந்த பச்சை கற்பூரத்தில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ஏலக்காவை சேர்த்து எரிக்க வேண்டும்.

ஏலக்காய் பயன்படுத்தும் போது அது உடைந்ததாகவோ அல்லது பழையதாகவோ இருக்க வேண்டாம். நல்ல ஏலக்காயாக பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பச்சை கற்பூரத்தில் ஏலக்காய் முழுவதுமாக எரிய வேண்டும். அதற்கு ஏற்ற போல் பச்சை கற்பூரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏலக்காய் எரிந்த பிறகு கருப்பு நிறத்தில் துகள் இருக்கும். இதை கொஞ்சமாக நெய் விட்டு குழைத்து ஒரு டப்பாவில் சேகரித்து வைத்து வாராகி அன்னை படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த திலகத்தை தினமும் நெற்றியில் இட்டு வருவதன் மூலம் செல்வம் பெருகுவதோடு கடன் தொல்லை முற்றிலுமாக நீங்கி விடும் என்று சொல்லப்படுகிறது. இதே வழிபாட்டை நாளை சனிக்கிழமை அன்றும் செய்யலாம். சனிக்கிழமையில் செய்யும் போது ஏலக்காய்க்கு பதிலாக 5 கிராம்பை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கிராம்பும் உடையாத நல்ல நிலையில் உள்ள கிராம்பாக சேர்க்க வேண்டும். இன்று பஞ்சமி திதியில் செய்யப்படும் இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையில் செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர வெள்ளிக்கிழமை பரிகாரம்

கடன் அடையவும், செல்வம் சேரவும் வாராகி அன்னைக்கு செய்யப்படும் இந்த பரிகாரம் மிகவும் சக்தி வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் இதை செய்து பலன் பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
g

- Advertisement -