பணம் சேர வெள்ளிக்கிழமை பரிகாரம்

money milk
- Advertisement -

இப்போதுள்ள சூழ்நிலையில் பணக்காரராய் வாழ வேண்டும் என்ற ஆசை எல்லார் மனதிலும் இருக்கத் தான் செய்கிறது. பணக்காரராய் வாழ வேண்டும் எனில் முதலில் கடன் இல்லாமல் இருக்க வேண்டும். கடன் என்ற ஒன்று இருந்தாலே நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் கட்டவும், வட்டி கட்டவும் சரியாக போகும். அதன் பிறகு எப்படி சேமிப்பது? எப்படி பணக்காரன் வாழ்வது?.

ஆகையால் முதலில் கடன் இல்லாமல் வாழும் வாழ்க்கையை வாழ பழகிக் கொள்ளுங்கள். ஆடம்பர தேவைகளை தூக்கிக் கொண்டு அத்தியாவசியமான வெற்றிக்கு மட்டும் செலவு செய்து பணத்தை சேமித்து பழகுவது நல்லது இத்துடன் சேர்த்து இந்த ஒரு எளிய சூட்சம பரிகாரத்தையும் செய்யும் பொழுது ஒரு வேளை கடன் இருந்தாலும் அது அடையக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இப்போது இந்த சூட்சம பரிகாரத்தை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் தீர்ந்து பணம் சேர பரிகாரம்

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் செய்ய வேண்டும் அதுவும் மாலை 5 மணிக்குள் செய்ய வேண்டும. இதை ஆண்கள் பெண்கள் என அனைவரும் செய்யலாம். பணம் தேவையானது அனைவருக்கும் இருக்கும் தானே, ஆகையால்அனைவருமே இதை செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு உங்கள் வீட்டில் அருகிலோ வேப்பமரம் இருக்க வேண்டும் ஆகையால் முதலில் வேப்பமரம் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் உங்களுக்கு எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அந்த நேரத்தில் வீட்டிலிருந்து ஒரு டம்ளர் அளவு காய்ச்சாத பசும்பாலை எடுத்துச் செல்லுங்கள். இந்த பரிகாரத்திற்கென நேரம் எதுவும் கிடையாது. ஆனாலும் நீங்கள் செல்லும் நேரத்தில் அந்தி சாய்த்து இருக்க கூடாது. பொதுவாக விருட்சகங்களின் வழிபாட்டை மாலை 6 மணிக்கு மேல் செய்யக் கூடாது என்பது ஐதீகம். ஆகையால் தான் ஐந்து மணிக்குள் இதை செய்து விட வேண்டும்.

- Advertisement -

அந்தப் பாலை வேப்பமரத்து அடியில் வேர்ப்பகுதியில் ஊற்றி விட்டு மூன்று முறை மரத்தை சுற்றி வந்து தொட்டு வணங்க வேண்டும். உங்களால் முடிந்தால் மரத்திற்கு தீபத்தூப ஆராதனை செய்து வழிபடலாம். அது மேலும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஒருவேளை முடியாதவர்கள் பெரும் பாலை மட்டும் ஊற்றி மரத்தை சுற்றி வாருங்கள். சுற்றி வரும் பொழுது உங்களுக்கு என்ன தேவையோ கடன் அடைய வேண்டுமெனில் கடன் அடைய வேண்டும் அல்லது பணம் தேவை எனில் அதையும் சொல்லி இந்த மரத்திடம் சங்கல்பம் செய்து கொள்ளுங்கள்.

இவ்வளவு தான் பரிகாரம் இதை மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் இதற்குள்ளாகவே உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. மரங்களிலே தெய்வீக மரமாக கருதப்படுவது இந்த வேம்பு. வேப்ப மரத்தின் மரத்திற்கு அம்மனின் அருள் பரிபூரணமாக உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மி தாயாருக்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தங்கம் அதிக அளவில் சேர பரிகாரம்

ஆகையால் உங்களுக்கு இஷ்டமான ஏதேனும் ஒரு அம்மனை மனதில் நினைத்துக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்யுங்கள் நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து கடன் எல்லாம் செல்வ வாழ்க்கை வாழ வழி தேடிக் கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -