கடன் தீர மாம்பூ பரிகாரம்

vinayagar maam poo
- Advertisement -

மனிதனின் தலையாய பிரச்சனைகளில் முதல் பிரச்சனையே இந்த கடன் தான். கடன் இல்லாத வாழ்க்கை தான் நிம்மதியான வாழ்க்கை. கடன் என்ற ஒன்று நம் வாழ்க்கைக்குள் வந்து விட்டால் நிம்மதி என்ற வார்த்தை கூட நம் வாழ்க்கையை விட்டு விலகி விடும். அத்தகைய கொடிய கடனால் துன்பப்படுவர்கள் அந்த கடனிலிருந்து எப்படி வெளியேறுவது என்று தினம் தினம் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த கடனிலிருந்து விடுபடுவதோடு, தங்களின் பொருளாதார நிலையில் மேம்பட்டு நல்ல செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். அத்தகைய வளமான வாழ்க்கையை தரக் கூடிய எளிமையான ஒரு வழிபாட்டு முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

கடன் தீர விநாயகர் வழிபாடு

எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் எளிய தீர்வாக இருக்கக் கூடியவர் விநாயகப் பெருமான். அவரை நினைத்து மனதார வேண்டிய எதுவும் நமக்கு உடனே அருளுவார் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படியான விநாயகரை நினைத்து இந்த ஒரு வழிபாடு செய்யும் போது நம்முடைய தீர்க்க முடியாத கடனும் தீரும் என்று சொல்லப்படுகிறது.

இந்த பரிகாரத்திற்கு தேவையான முக்கியமான பொருள் மாம்பூ. இப்போது மாம்பூ கிடைக்கக் கூடிய பருவம் தான். ஆகையால் இந்த பரிகாரத்தை செய்ய இது தகுந்த காலம் என்றே சொல்லலாம். ஒரு கொத்து அல்லது மூன்று கொத்து மாம்பூக்களை முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்

- Advertisement -

ஏனெனில் இந்த பரிகாரத்தை புதன்கிழமை காலையிலேயே செய்ய வேண்டும். புதன்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு செல்லுங்கள். அங்கு விநாயகர் பாதத்தில் இந்த மாங்கொத்துகளை வைத்து உங்கள் கடன்கள் தீர வேண்டும் என்று மனதார வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த மாங்கொத்துகளை எடுத்துச் சென்று ஓடும் நீரில் விட வேண்டும். இந்த மாங்கொத்துகளை ஓடும் நீரில் விடுவது தான் மிகவும் முக்கியம். ஓடும் நீர் இல்லை என்றால் இந்த பரிகாரத்தை செய்ய முடியாது ஆகையால் முதலில் அது போன்ற இடத்தை தேர்வு செய்து கொண்டு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

- Advertisement -

மூன்று புதன்கிழமைகள் தொடர்ந்து விநாயகருக்கு இப்படி மாங்கொத்துகளை வைத்து வணங்கி ஓடும் நேரில் விட வேண்டும். இதன் மூலம் கடன்கள் அடைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அத்துடன் செல்வ வளமும் பெருகும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாகவே வீட்டில் மங்கள காரியங்கள் நல்ல விசேஷங்கள் போன்றவைகளில் மாங்கொத்துக்கள் மாவிலை பயன்படும்.

இதையும் படிக்கலாமே: குழந்தைகள் நன்றாக படிக்க பெற்றோர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

இந்த மாம்பூவை வைத்து வழிபடும் போது நம்முடைய செல்வ வளம் பெருகி கடன் அடைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -