இன்று தேய்பிறை பஞ்சமி மாலை வாராகி அம்மனை இதை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் கோடி ரூபாய் கடனும் காணாமல் போகும் அதிசயம் நடக்கும்.

varahi-cash
- Advertisement -

சப்த கன்னிகர்களின் ஒருவரான வாராகி அம்மன் வழிபாடு இன்று பெருமளவில் அனைவராலும் செய்யப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் இந்த அம்மனை நினைத்து நாம் வைக்கும் ஒவ்வொரு வேண்டுதலையும் நமக்கு தவறாது நிறைவேற்றி தருவதால் தான். எவ்வளவு பெரிய பிரச்சனை இருந்தாலும் இவர் முன்பு நின்று மனம் உருகி கண்ணீர் மல்க ஒரே ஒரு முறை வேண்டினாலே போதும். மலை போல் வந்த துன்பம் கூட பனி போல உருகி ஓடி விடும். அத்தகைய சக்தி வாய்ந்த இந்த வாராகி அம்மனை நம்முடைய கடன் தீர எப்படி வழி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடன் தீர வாராகி அம்மன் வழிபாடு
இந்த பஞ்சமி திதி வாராகி அம்மனுக்கு மிகுந்த உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் இவரை நினைத்து நாம் வேண்டும் ஒவ்வொரு வேண்டுதலுக்கும் பல மடங்கு பலன் உண்டு. அந்த வகையில் வாராகி அம்மனை நினைத்து இன்று நாம் கடன் தீர செய்யும் இந்த வழிபாட்டிற்கும் நிச்சயம் பலன் உண்டு. வாராகி அம்மனை இருள் சூழ்ந்த நேரத்தில் வழிபட்டால் உடனே அருள் புரிவார் என்று ஒரு ஐதீகம் உண்டு. எனவே இன்றைய தினம் இரவு ஏழு மணிக்கு மேல் இந்த வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வழிபாடு செய்வதற்கு உங்கள் வீட்டில் வாராகி அம்மன் விக்ரகம், படம் இரண்டில் இருந்தாலும் நன்றாக துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் விக்ரகம் வைத்திருந்தால் மஞ்சளை பேஸ்ட் போல குழைத்து அம்மனை முழுவதுமாக பூசி தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து கொள்ளுங்கள் இது மிகவும் விஷேசம்.

இன்றைய தினம் வாராகி அம்மனுக்கு கரு துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். கருந்துளசி கிடைக்கவில்லை என்றால் செவ்வரளி மலர் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். இரண்டும் கிடைக்காத பட்சத்தில் மல்லிகை மலரை கொண்டு அர்ச்சனை செய்யலாம். இவற்றுடன் வெற்றிலை பாக்கு பழம் போன்றவற்றையும் வைத்து நல்ல வாசனை மிக்க தூபத்தை போட்டு விடுங்கள். இவையெல்லாம் செய்த பிறகு இந்த ஒரு மந்திரத்தையும் நாம் சொல்ல வேண்டும்.

- Advertisement -

ஓம் அஷ்வா ரூடாய நமக
என்ற இந்த மந்திரத்தை ஒவ்வொரு மலரை வைத்து அர்ச்சனை செய்யும் போது ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். இத்துடன் இன்றைய தினத்தில் அம்மனுக்கு கருப்பு உளுந்தில் வடை செய்து அதையும் மாலையாக போட்டு வழிபாடு செய்யும் போது கிரகங்களால் ஏற்படும் தோஷமும் நிவர்த்தி ஆகும்.

இந்த வாராகி அன்னையை பொறுத்த வரையில் மிக எளிமையான முறையில் நாம் வழிபட்டாலே போதும். உங்களால் இது எதையுமே செய்ய முடியாத பற்றி ஒரு ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைத்து அந்த தீபத்தின் முன் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லி என்னுடைய கடன் அடைய வேண்டும் என வேண்டி நாளும் உங்களுடைய வேண்டுதலுக்கு வாராகி அம்மன் செவி சாய்பார்.

இதையும் படிக்கலாமே: கிராம்பை இந்த பொருளுடன் சேர்த்து எடுத்து சென்றால் வெகுநாட்களாக பணத்தை தராமல் இழுத்து அடித்தவர்கள் கூட உங்களை பார்த்ததும் ஓடி வந்து பணத்தை திருப்பி தந்து விடுவார்கள்.

இன்றைய பஞ்சமி திதியில் வாராகி அம்மனை இந்த முறையில் வழிபட்டு உங்களுடைய கடன் பிரச்சனைகளும் கிரக தோஷங்களில் இருந்தும் விடுபட்டு அம்மனுடைய அனுக்கிரகத்தை முழுமையாக பெற்று வாழ்வில் சகல சௌபாக்கியத்துடன் வாழ வழி செய்து கொள்ளலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -