கடனை கழிக்கும் கற்றாழை பரிகாரம்

katrazahi
- Advertisement -

அப்பப்போ தேவைகளுக்காக, கொஞ்சம் கொஞ்சமாக கை நீட்டி கடனை வாங்கி இருப்போம். நமக்கே தெரியாது, பின்பு எல்லா கணக்கையும் கூட்டிப் பார்த்தால் லட்சக்கணக்கில் கடன் சேர்ந்திருக்கும். வாங்கிய கடனை எப்படிடா திருப்பி தருவது என்று வழி தெரியாமல், பின்பு கடன் என்ற கடலில் மூழ்கி, தத்தளிப்போம்.

கடன் வாங்கி அதை திருப்பித் தர முடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு தான் தெரியும் அதில் இருக்கும் வலி. சரி இதிலிருந்து விடுபட என்ன செய்வது. முதலில் செலவை குறைக்கணும். கடன் வாங்குவதை குறைக்கவும். வருமானத்துக்கு ஏற்ப குடும்பம் நடத்தணும். இதையும் தாண்டி வாங்கிய கடனை திருப்பித் தர ஒரு சில தாந்திரீக பரிகாரங்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு சிறப்பான எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

கடனை கரைக்கும் கற்றாழை பரிகாரம்

பறந்து விரிந்து ஆகாசத்தை பார்த்தவாறு முட்களோடு இருக்கக்கூடிய இந்த கற்றாழை செடிக்கு பிரபஞ்ச நல்ல ஆற்றலை ஈர்க்கும் தன்மை உண்டு. கற்றாழையிலிருந்து ஒரு சின்ன துண்டு எடுத்துக்கோங்க. அதை சீவி உள்ளே இருக்கும் அந்த ஜெல் மட்டும் நமக்குத் தேவை. ஒரு இரண்டு ஸ்பூன் அளவு இருந்தால் போதும். அதை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு கல் உப்பு. ஒரு கைப்பிடி கல் உப்பை வலது கையால் எடுத்து, இடது கையில் வைக்க வேண்டும். இந்த கற்றாழையையும் அப்படியே ஸ்பூனில் எடுத்து இடது கை மேல் இருக்கும் கல் உப்பில் வைத்துக் கொள்ளுங்கள். கையை மூடி கொள்ளவும். கொஞ்சம் கையை இறுக்கமாக மூடிக்கொள்ளுங்கள். கல்லுப்பு உங்கள் கையில் லேசாக குத்த வேண்டும்.

- Advertisement -

அந்த அளவுக்கு கையை மூடி உங்களுடைய தலையை இடதுபுறத்திலிருந்து வலது புறமாக சுத்த வேண்டும். ஆன்டி கிளாக் வைஸ் தலையை மூன்று முறை சுற்றி, இந்த கல்லுப்பு கற்றாழையை அப்படியே தண்ணீரில் கரைத்து விடுங்கள். ஒரு பாத்திரத்தில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை எடுத்து இந்த கல்லுப்பை கரைக்க வேண்டும்.

இப்படி கையில் கல் உப்பை வைத்துக்கொண்டு, தலையை சுற்றும் போதும், தண்ணீரில் கரைக்கும் போதும், கடன் சுமையெல்லாம் காணாமல் போக வேண்டும், கடன் சுமையெல்லாம் கரைந்து போக வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, இந்த மூன்று கிழமைகளில் இந்த பரிகாரம் செய்து வாருங்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு சில வாரங்களில் உங்கள் கடன் கஷ்டம் காணாமல் போக இந்த பிரபஞ்சம் நல்ல வழியை காட்டி கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: நல்ல பிள்ளை பெற்ற குணவதி அம்மன் கோவில் சிறப்பு

கடனை திருப்பித் தருவதற்கு தேவையான முழு முயற்சிகளை நீங்கள் எடுங்கள். அதில் எந்த தடைகளும் வராமல் இந்த பரிகாரம் பார்த்துக் கொள்ளும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த தாந்த்ரீகம் சொல்லும் இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -