கடன் அடைய இதுவரை நீங்கள் எத்தனை பரிகாரங்களை செய்தும் பலன் இல்லையா? கற்றாழையை வைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்க. கடன் சுமை நிச்சயம் காணாமல் போய் விடும்.

aloevera cash
- Advertisement -

பலரை திண்டாட வைத்துக் கொண்டு இருக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த கடன் பிரச்சனை. கடன் வாங்கிய பின்பு அதை அடைக்க முடியாமல் நாம் திணறும் சமயங்களில் கடன் வாங்கியவர் நம் முன் வந்து நிற்கும் பொழுது நாம் அடையும் வேதனையை வார்த்தைகளால் சொல்லவே முடியாது. அதிலும் உறவினர்களிடம் கை நீட்டி கடன் வாங்கி விட்டால் அதன் கொடுமையை விவரிக்க கூட முடியாது. அந்த அளவிற்கு கடன் நம்முடைய நிம்மதியும் சந்தோஷத்தையும் அளித்து விடும்.

இப்படி வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தினம் தினம் துன்பப்படுபவர்கள் எண்ணற்ற பரிகாரங்களை செய்தும் பலன் இல்லை என்பவர்கள் இந்த கற்றாழை பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அந்த கற்றாழை பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் அடைய கற்றாழை பரிகாரம்:
இந்த பரிகாரத்தை செய்வதற்கு எந்த நாள், கிழமையை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதற்கு பயன்படுத்தும் கற்றாழை புதிதாக கற்றாழை மடலை எடுத்து அதிலிருந்து ஜல்லை எடுத்து தான் பயன்படுத்த வேண்டும். கடையிலிருந்து வாங்கியோ அல்லது நாம் ஏற்கனவே நாம் வீட்டில் எடுத்து வைத்ததோ இருந்தால் அதை பயன்படுத்தக் கூடாது.

இந்த பரிகாரத்திற்கு ஒரு கற்றாழை மாடலை எடுத்து அதன் மேல் தோலை சீவிய பிறகு உள்ளிருக்கும் ஜல்லில் ஒரே ஒரு ஸ்பூன் அளவு மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் போதும். இத்துடன் கொஞ்சம் கல் உப்பு இரண்டையும் உங்களது இடது கையில் வைத்துக் கொண்டு கிழக்கு முகமாக நின்று மேலிருந்து கீழாக அதாவது கிளாக் வைஸில் மூன்று முறை சுற்றிய பிறகு இதைக் கொண்டு வெளியில் கால் படாத இடத்தில் போட்டு விட்டு கை கால்களை அலம்பிய பிறகு உள்ளே வந்து விடுங்கள்.

- Advertisement -

இவ்வளவு தான் இந்த பரிகாரம் இதை மாதத்திற்கு ஒரு முறை நீங்கள் தவறாமல் செய்து வாருங்கள். இந்த பரிகாரத்தை செய்து கடன் அடைந்து விட்ட பின்னரும் இதை தொடர்ந்து செய்வதன் மூலம் மேலும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் எண்ணமும் உங்களுக்கு ஏற்படாமல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

எந்த ஒரு பரிகாரத்தை செய்யும் பொழுதும் அதில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். பரிகாரங்களை செய்து பலன் அடையவில்லை எனில் நம்முடைய கர்ம வினைகள் தான் காரணம். கர்ம வினைகள் குறைய குறைய தான் பரிகாரங்களின் பலன் நமக்கு கிடைக்கும். இந்த பரிகாரமானது நீங்கள் பல வகையான பரிகாரங்கள் செய்து பலன் கிடைக்காத பட்சத்தில் இது பலனை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சமுதாயத்தில் உங்களுக்கான அந்தஸ்தும் மதிப்பும் மரியாதையும் உயர, நீங்கள் சொல்லும் வார்த்தைக்கு எல்லோரும் கட்டுப்பட்டு நடக்க, இந்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் போதும்.

கடன் வாங்கி துன்பப்படுபவர்கள் இந்த கற்றாழை பரிகாரத்தை செய்து இந்த கடன் சுமையிலிருந்து வெளி வரலாம். இதன் பிறகு கடன் அடைய நீங்கள் எடுக்கும் சிறு முயற்சி கூட பெரிய அளவில் உங்களுக்கு பலனை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரம் செய்து பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -