ஒரு சொந்த பந்தத்தின் திருமணத்திற்கே நாம் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த இடத்தில் நமக்கு பக்கத்தில் அமர்ந்து இருக்கும் மூன்றாவது நபருக்கு மதிப்பும் மரியாதையும் வரவேற்பும் அதிகமாக கிடைக்கும். நாம் அந்த நபருக்கு நெருங்கிய சொந்தமாக இருப்போம். ஆனால் மூன்றாவது நபருக்கு கொடுக்கக்கூடிய மரியாதை நமக்கு கிடைக்காது. அந்த நேரத்தில் நம்முடைய மனது சின்னதாக வருத்தப்படும். அடுத்தவர்கள் மதிக்கும்படி நம்முடைய வாழ்க்கை இல்லையா? நம்முடைய தரம் அவ்வளவு குறைந்து விட்டதா? என்று நிச்சயமாக எல்லோர் மனதிலும் ஒரு தாழ்வு மனப்பான்மை வரத்தான் செய்யும்.
ஆனால் என்ன செய்வது. இந்த சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் பெயர் புகழ் அனைத்தும் எல்லோருக்கும் சரிசமமாக கிடைக்கப்பெறுவது இல்லை. அவரவர் அந்தஸ்தை வைத்து தான் மதிப்பும் மரியாதையும் அடுத்தவர்களால் கொடுக்கப்படுகிறது. இதை நினைத்து யாரும் வருத்தப்பட வேண்டாம். பணத்தை வைத்து அடுத்தவர்கள் உங்களுக்கு மரியாதை கொடுத்தால் அந்த மரியாதை பொய்யாக இருக்கும். அந்த மரியாதையில் நடிப்பு இருக்கும். அதுவே உங்களுடைய மனதிற்கு, உங்களுடைய நல்ல எண்ணத்தை புரிந்து கொண்டு, ஒருவர் உங்களுக்கு மரியாதை கொடுத்தால் தான் அதில் உண்மையான அன்பும் பாசமும் இருக்கும். போலித்தனமான வாழ்க்கையில் சிக்கிக் கொள்ள என்றுமே ஆசைப்பட வேண்டாம் என்ற இந்த ஒரு நல்ல தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.
நமக்கும் நாலு பேர் மத்தியில் பெயர் புகழ் அந்தஸ்து மரியாதை கிடைக்க வேண்டும். நம்முடைய சொல்லுக்கும் நாலு பேர் மதிப்பு கொடுக்க வேண்டும். நம்முடைய வாக்குபலிதமாக வேண்டும் என்றால் என்ன பரிகாரம் செய்யலாம். ஆன்மீகம் இதற்கு ஒரு சில வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது. அதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
வாக்கு பலிக்க நாயுருவி வேர் பரிகாரம்:
உங்களுக்கு ரொம்பவும் பிரபல்யமாக ஆக வேண்டும் என்று ஆசை இருக்கா. உதாரணத்திற்கு அரசியல், சினிமாத்துறை, கலைத்துறை, விளையாட்டு அல்லது வேறு ஏதாவது விஷயத்தில் இந்த உலகமே உங்களை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், உங்களுடைய பெயர் புகழ் ஊர் முழுவதும் பரவுவதற்கு இந்த பரிகாரத்தை நீங்கள் முயற்சி செய்யலாம். உங்களுடைய வீட்டில் தென்கிழக்கு மூலை south east கார்னர் அந்த இடத்தில் சிவப்பு நிறத்தில் ஏதாவது ஒரு பொருள் எப்போதும் இருக்க வேண்டும்.
ஒரு சிவப்பு நிற சின்ன பல்ப் எரிய விட்டாலும் சரிதான். சிவப்பு நிறத்தில் அந்த இடத்தில் வர்ணம் தீட்டினாலும் சரிதான். சிவப்பு நிற சீனரி ஏதாவது அந்த இடத்தில் மாட்டி வைத்தாலும் சரிதான். குறிப்பிட்ட அந்த தென்கிழக்கு மூலையில் சிவப்பு வண்ணம் இருக்கும் போது உங்களுடைய பெயர் புகழ் வளர்ச்சியில் சீக்கிரம் முன்னேற்றம் தெரியும்.
இதோடு சேர்த்து உங்கள் வாக்கு பலிக்க, நீங்கள் சொல்லும் வார்த்தைக்கு அனைவரும் செவி கொடுக்க, இந்த பரிகாரத்தை செய்யலாம். குறிப்பாக உயர் பதவியில் இருப்பார்கள் அல்லவா. மேனேஜர் போஸ்டிங், காவல்துறையில் இருப்பவர்கள், வாத்தியார் வேலை செய்பவர்கள், அல்லது பேச்சு சாதுரியத்தால் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் இப்படி யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
நாயுருவி வேர் நாட்டு மருந்து கடைகளில் இருக்கும். அதை வாங்கி முந்தைய நாள் இரவே ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள் காலை அந்த வேரை எடுத்து தூரம் போட்டுவிட்டு அந்த தண்ணீரில் வாய் கொப்பளித்துக் கொள்ள வேண்டும். இதை வாரத்தில் ஒரு நாள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வாக்குபலிதம் ஆகும். நீங்கள் சொல்லும் பேச்சுக்கு உங்களுடன் இருப்பவர்கள் கட்டுப்படுவார்கள். நீங்களும் சமுதாயத்தில் உயர்ந்த மனிதர்கள் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இரண்டுமே எளிமையான பரிகாரம் தான். இரண்டில் ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்பவர்களுக்கும் பலன் உண்டு. இரண்டு பரிகாரத்தை சேர்த்து செய்பவர்களுக்கு நிச்சயம் இரட்டிப்பு பலன் உண்டு. நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம்.