கோடி கடனும் தீர்ந்து கோடி கோடியாய் பணம் வர நிலை வாசலில் அமாவாசை அன்று இதை செய்து விடுங்கள்.

mahalakshmi nilai vasal
- Advertisement -

இன்றைய கால சூழ்நிலையில் கடன் இல்லாமல் வாழும் மனிதர் ஒருவரும் கிடையாது. இந்த கடன் நகை கடனாக இருக்கலாம். பணம் கடனாக வாங்கி இருக்கலாம். வீட்டு உபயோக பொருட்களாக இருக்கலாம். இப்படி ஏதோ ஒரு வகையில் எல்லோரும் கடனால் அவதிப்படுகிறோம் என்பதை மறுக்க முடியாத உண்மை.

சிலருக்கு நகை வாங்கும் யோகமும் இருக்காது வாங்கிய நகை வீட்டில் தங்கவும் தாங்காது. வருமானத்தில் தடை இருந்து கொண்டே இருக்கும். பணம் யாருக்காவது கொடுத்தாலும் அது திரும்ப வராது. இப்படி பணத் தடையும் இருக்கும். இது போல நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து சிக்கல்களும் தடைகளும் தீர இந்த பரிகாரம் நல்ல தீர்வாக அமையும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

பொதுவாகவே அமாவாசை என்பது விசேஷமான நாள் தான். அதிலும் இந்த மகாளய பட்ச அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தாக சொல்லப்படுகிறது. இன்றைய நாளில் நாம் செய்யும் எந்த ஒரு பரிகாரமும் பல மடங்கு பலன் தரும். ஆகையால் நம்முடைய கடன் பிரச்சனை வருமானம் பெருக, பணத்தடை நீக்கக்கூடிய இந்த பரிகாரத்தை இன்று செய்வது மிகவும் சிறந்தது. அதை எப்படி செய்வது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடன் தீர அமாவாசை உப்பு பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு தேவையான முக்கியமான பொருள் கல் உப்பு தான். இந்த கல் உப்பு மகாலட்சுமி தாயாரின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அத்தகைய கல் உப்பை வைத்து தான் நம்முடைய கடன் தீரவும் வருமானம் பெருகவும் பரிகாரம் செய்ய போகிறோம்.

- Advertisement -

இந்த கல்லுப்புடன் ஒரு நாணயம் அது ஐந்து ரூபாய் பத்து ரூபாய் ஒரு ரூபாய் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மூன்று மிளகு சிறிய அளவில் தங்க நகை இருந்தால் வைக்கலாம் இல்லையென்றால் பரவாயில்லை. அதே போல் தான் வெள்ளி நகை இருந்தாலும் இந்த முடிச்சில் வைக்கலாம் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால் உப்பு நாணயம் மிளகு இவைஅவசியம். இதை வைத்து கட்ட மஞ்சள் நிறத்திலான துணி ஒன்று.

இந்த பரிகாரம் செய்ய மஞ்சள் நிற துணியில் உப்பு, மிளகு, ரூபாய் நாணயம், தங்கம் அல்லது வெள்ளி (இருந்தால் மட்டும்) வைத்து ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இதை மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்றி உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர வழிகாட்டும் படி வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த முடிச்சை உங்கள் நிலை வாசலில் கட்ட வேண்டும்.

- Advertisement -

இந்த முடிச்சை இன்றைய தினம் மதியம் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள்ளாக கட்டலாம். தவறினால் இரவு 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாக கட்டுங்கள். இந்த இரண்டு நேரத்தில் உங்களுக்கு வாய்ப்புள்ள நேரத்தை பயன்படுத்தி நிலைவாசல் இதை கட்டி விடுங்கள்.

இந்த முடிச்சு ஒரு மாதம் காலம் வரை அப்படியே இருக்கட்டும். அடுத்த மாதம் அமாவாசை அன்று இதே போல இந்த முடிச்சிலுள்ள கல் உப்பு, மிளகு இரண்டையும் கால் படாத இடத்தில் போட்டு விட்டு அதில் இருக்கும் நாணயத்தை திரும்பவும் இதே துணியில் வைத்து இது போல முடிச்சாக கட்டி நிலை வாசலில் கட்டி விடுங்கள். நீங்கள் வீட்டில் பூஜை செய்யும் பொழுதெல்லாம் தூபம் மட்டும் காட்டி வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வத்தை அமாவாசை நாளில் இப்படி சென்று வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

இந்த அமாவாசை உப்பு மூட்டை பரிகாரம் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரமாக சொல்லப்படுகிறது இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள்.

- Advertisement -