குலதெய்வத்தை அமாவாசை நாளில் இப்படி சென்று வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

kuladeivam baby
- Advertisement -

குலதெய்வம் என்ற ஒன்று அனைவருக்கும் இருக்கும். அவ்வாறு இருக்கும் குலதெய்வத்தை நாம் வருடத்திற்கு ஒரு முறையாவது நேரில் சென்று வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் தான் ஒவ்வொரு குலதெய்வ கோவிலிலும் ஒரு குறிப்பிட்ட நாளில் திருவிழா என்ற ஒன்று நடைபெறுகிறது. அந்த சமயத்தில் உலகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் குலதெய்வ கோவிலுக்கு வரும் வழக்கத்தை பலரும் வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட குலதெய்வத்தை அமாவாசை நாளில் எப்படி வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தான் பார்க்க போகிறோம்.

நம்முடைய முன்னோர்கள் வணங்கிய தெய்வத்தை நாம் தொடர்ந்து வணங்கி வருகிறோம் என்றால் அதை நாம் நம்முடைய குலதெய்வம் என்று கூறுகிறோம். இந்த குலதெய்வத்தை தினந்தோறும் யார் நினைத்து வழிபடுகிறார்களோ அவர்களை குலதெய்வம் நின்று நிலைத்து காப்பாற்றும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்றும் நம் முன்னோர்கள் ஒரு வழி வகுத்து வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

அவ்வாறு செய்தால்தான் நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சினைகளை குலதெய்வம் நின்று காத்து ரட்சிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குலதெய்வத்தை குழந்தை இல்லாத தம்பதியினர் எப்படி வழிபட வேண்டும் என்று இப்பொழுது பார்ப்போம்.

குழந்தை பேறு வேண்டி குலதெய்வத்தை வழிபடுபவர்கள் அமாவாசை நாளன்று குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும். தங்களின் குலதெய்வத்திற்கு தங்களால் இயன்ற அளவு அபிஷேகம் செய்ய வேண்டும் அல்லது அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும். பிறகு ஏதாவது ஐந்து வகை சாதங்களை நாமே நம் கைகளில் தயார் செய்து குலதெய்வத்துக்கு படையலாக வைக்க வேண்டும். அதேபோல் குலதெய்வத்திற்கு வஸ்திரம் வாங்கி கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி அபிஷேகம், வஸ்திரம், படையல் என்று அனைத்தையும் செய்து விட்டு குலதெய்வத்திடம் மனதார மண்டியிட்டு குழந்தை வரம் வேண்டி மடிப் பிச்சை கேட்டு வணங்கி வர வேண்டும். வழிபாடு அனைத்தும் நிறைவடைந்த பிறகு படையல் இட்ட ஐந்து வகை சாதங்களை அருகில் இருப்பவர்களுக்கு தானமாக வழங்கி விட வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு அமாவாசை நாளில் இந்த முறையில் வழிபாடு செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். முன்னோர்களின் சாபத்தினால் குழந்தை பேறு இல்லாமல் இருந்தாலும் அல்லது மற்ற பிற தீய சக்திகளால் குழந்தை பேறு தள்ளிப் போனாலும் குலதெய்வம் அங்கு வந்து அந்த தடைகளையும், சாபங்களையும் நீக்கி நம்முடைய குலம் விருத்தி அடைவதற்கு நல்ல வழியை காட்டுவார்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனை முற்றிலும் நீங்குவதற்கு அனுமனுக்கு இந்த முறையில் மாலை சாற்றி வழிபடுங்கள்.

குலதெய்வத்திடம் முறையிட்டு நடக்காத காரியம் என்று எதுவும் இல்லை என்பது நம் முன்னோர்களின் வாக்கு. அதன்படி குழந்தை பேறு இல்லாதவர்கள் குலதெய்வத்தை அமாவாசை நாளில் இந்த முறையில் வழிபட்டு விரைவிலேயே குழந்தை பேரு பெற முடியும்.

- Advertisement -