கடன் பிரச்சனை முற்றிலும் நீங்குவதற்கு அனுமனுக்கு இந்த முறையில் மாலை சாற்றி வழிபடுங்கள்.

kadan theera vetrilai maalai
- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவருக்கு போதுமான அளவு பணவரவு என்பது வேண்டும். எந்த அளவுக்கு பணவரவு இருக்கிறதோ அதற்கேற்றார் போல் செலவுகளை செய்தாலும் அவரால் நிம்மதியாக வாழ முடியும். அதை தவிர்த்து விட்டு வரவுக்கு மீறிய செலவை செய்வதன் மூலம் கடன் என்ற ஒரு பெரும் சுமையை தன் தோளில் தூக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும். அந்த சுமையை இறக்கி வைப்பதற்கும் முற்றிலும் இல்லாமல் செய்வதற்கும் ஆஞ்சநேயரை சனிக்கிழமை எந்த மாலையை சாற்றி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கண்கண்ட தெய்வமாக விளங்க கூடியவர் தான் ஆஞ்சநேயர். அழைத்த உடனே ஓடோடி வரும் ஆஞ்சநேயர் தன் பக்தர்கள் துன்பப்பட கூடாது என்று அவர்களுக்கு வரக்கூடிய துன்பத்தை தான் ஏற்று அந்த துன்பத்தில் இருந்து தன் பக்தர்களை காப்பாற்றக்கூடிய ஒரு அற்புதமான கடவுளாக ஆஞ்சநேயர் திகழ்கிறார். அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை நாம் முழுமனதோடு சரணாகதி அடைந்தோம் என்றால் நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை சனிக்கிழமை அன்று மாலை நேரத்தில் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு 27 வெற்றிலைகள் தேவைப்படும். இந்த வெற்றிலைகளில் எந்த வித ஓட்டைகளும் இல்லாத அளவிற்கு நல்ல வெற்றிலையாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நமக்கு தேவைப்படுவது வெண்ணெய். முதலில் வெற்றிலையை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் துடித்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது இந்த வெண்ணையை கடன் வாங்கியவர் தன் கைகளால் எடுத்து ஒவ்வொரு வெற்றிலையிலும் தடவ வேண்டும். அவ்வாறு தழுவும் பொழுது “ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயா என்னுடைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும்” என்று மனதுக்குள் உச்சரித்த வண்ணம் முழுமனதோடு செய்ய வேண்டும். இவ்வாறு வெண்ணையை தடவிய பிறகு வெற்றிலையை சுருட்டி மாலையாக கட்ட வேண்டும்.

- Advertisement -

கட்டிய இந்த மாலையை ஆஞ்சநேயருக்கு கொண்டு போய் சாற்றி விட்டு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி ஆஞ்சநேரை முழுமையாக சரணாகதி அடைய வேண்டும். தொடர்ந்து 27 வாரங்கள் இதை செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் பொழுது ரத்த பந்தங்கள் அவர்களுக்கு பதிலாக இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். மேலும் கணவனுக்கு பதிலாக மனைவியும் இந்த வழிபாட்டை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் என்று நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும் பொழுது இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து 27 வாரங்கள் 27 வெற்றிலைகளை வைத்து நாம் ஆஞ்சநேயரை வழிபடும் பொழுது ஆஞ்சநேயரின் பரிபூரண அருளால் நம்முடைய கடன் பிரச்சினைகள் தீர்வதற்குரிய வழிகளை அவர் நமக்கு காட்டுவார்.

- Advertisement -