கடனும் நோயும் ஒருவருடைய வாழ்க்கையை மாற்றிப் போடும் அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது. நோயைக் கூட பணம் இருப்பவர்கள் நினைத்தால் அதற்கான மருத்துவத்தை மேற்கொண்டு சரி செய்து கொள்ளலாம். ஆனால் கடன் என்பது நோயைவிட மிகவும் கொடுமையான ஒன்றாக திகழ்கிறது. கடன் ஏற்பட காரணம் பண பற்றாக்குறை என்பதால் அந்த கடனை திருப்பி செலுத்த கூட முடியாத அளவிற்கு மேற்கொண்டு மேற்கொண்டு கடனை வாங்கி கடனில் பலரும் மாட்டிக் கொண்டு தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பைரவரை எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட அவர்களின் கடன் பிரச்சனை படிப்படியாக நீங்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
கண்ணுக்கு தெரியாது புதைக்குழியை நாம் பார்த்திருப்போம். அதை நாம் பார்க்கும் பொழுது எந்தவித சலனமும் இல்லாமல் தான் இருக்கும். ஆனால் அதன் மேல் கால் வைத்தவுடன் அது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை உள்ளே இழுத்து அதற்குள் மூழ்கடித்து விடும். இதே போல் தான் கடனும் வெளியில் இருந்து பார்க்கும் பொழுது இவ்வளவு தானே கடன் வாங்கி இருக்கிறோம். திருப்பி செலுத்தி விடலாம் என்று நினைப்போம். ஒருமுறை வாங்கிவிட்டால் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு சூழ்நிலைக்காக கடனை வாங்கி வாங்கி அந்த கடன் என்னும் புதைக் குழியிலேயே புதைந்து போவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகிவிடும்.
இதிலிருந்து மீள்வதற்கு நமக்கு உதவி செய்யக்கூடிய கடவுளாக திகழ்பவர் தான் காலபைரவர். பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தீர்க்க உதவும் ஒரு அற்புத தெய்வமாக தான் காலபைரவர் திகழ்கிறார். நம்முடைய வாழ்க்கையில் என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் அந்தப் பிரச்சினைக்குரிய வழிபாட்டை நாம் கால பைரவருக்கு செய்யும்பொழுது அவர் கண்டிப்பான முறையில் அந்த பிரச்சனையில் இருந்து நம்மை காப்பாற்றுவார். அந்த வகையில் கடன் பிரச்சனையிலிருந்து தீர்வதற்கு செய்யக்கூடிய ஒரு எளிய வழிப்பாட்டு முறையை பற்றி பார்ப்போம்.
இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். ராகு காலத்தில் இந்த வழிபாட்டை செய்யலாம். இயலாதவர்கள் மாலை ஆறு மணிக்கு மேல் பைரவர் வழிபாட்டை மேற்கொள்ளலாம். அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய காலபைரவருக்கு மொத்தம் 11 தீபங்கள் ஏற்ற வேண்டும்.
11 அகல் விளக்குகளை வாங்கி அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து அதில் நெய் ஊற்றி திரிக்கு பதிலாக சிவப்பு நிற துணியில் 9 மிளகுகளை போட்டு மூட்டையாக கட்டி அதை திரியாக பயன்படுத்தி தீபம் ஏற்ற வேண்டும். இப்படி நாம் 11 தீபங்களை ஏற்றிவிட்டு அந்த 11 தீபங்களுக்கும் செவ்வரளி பூக்களை சமர்ப்பணம் செய்து காலபைரவருக்கும் செவ்வரளி பூக்களை சமர்ப்பணம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக 21 வாரங்கள் காலபைரவரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு ஏற்பட்டிருக்கும் கடன் பிரச்சினைகளை அவர் படிப்படியாக குறைக்க ஆரம்பிப்பார். பைரவரை வழிபட்டுவிட்டோம் இனிமேல் கடன் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று வீட்டிலேயே உட்காராமல் பணத்தை சம்பாதித்து கடனை அடைக்கும் முயற்சியிலும் நாம் ஈடுபட வேண்டும். அப்பொழுதுதான் பைரவரின் அருளால் அந்த முயற்சிகள் வெற்றி அடைந்து விரைவிலேயே நம்மால் கடனை அடைக்க முடியும்.
இதையும் படிக்கலாமே: தடைகள் நீங்கி வெற்றிகள் பெற விநாயகர் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த பைரவர் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக செய்பவர்களின் வாழ்க்கையில் கடன் என்ற பேச்சுக்கு இடம் இல்லாமல் போய்விடும்.