சங்கடங்களை தந்து கொண்டிருக்கும் கடன் தொல்லையிலிருந்து மீள, இன்று ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு இந்த தீபம் ஏற்றங்கள். முழு கடனையும் தீர்க்க முழுமுதற் கடவுளின் சக்தி வாய்ந்த பரிகாரம்.

- Advertisement -

கடனை வாங்கும் போது யாரும் சந்தோஷமான மனநிலையில் விருப்பப்பட்டு வாங்குவது கிடையாது. கடன் வாங்குவதே ஒரு பெரிய சங்கடமான விஷயம் தான். வேறு வழி இன்றி தேவைகளை சமாளிக்க தான் கடன் வாங்க வேண்டியதாக இருக்கிறது. கடன் வாங்குவதே இத்தனை போராட்டம் என்றால், அதை அடைக்க அதை விட போராட வேண்டியதாக இருக்கிறது. இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் அடைக்கவே முடியாமல் அல்லல் படுத்தும் கடனை கூட விரைவில் அடைக்க கூடிய எளிய பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கடன் அடைய விநாயகருக்கு ஏற்ற வேண்டிய தீபம்:
இந்த தீபத்தை கோவில்களில் தோரண கணபதி என்று இருப்பார் அங்கு வைத்து ஏற்றினால் மிக மிக விசேஷம். ஆனால் எல்லா கோவில்களும் இந்த தோரண கணபதி இருக்க மாட்டார். எனவே இந்த பரிகாரத்தை வீட்டிலே செய்து கொள்ளலாம். அது மட்டும் இன்றி இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமையில் வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று தொடங்குவது தான் மிக மிக விசேஷம்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்வதற்கு ஆறு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் எருக்கன் செடியில் உள்ள காய்கள் காய்ந்த பிறகு அதில் பஞ்சு போல இருக்கும். அந்த பஞ்சை எடுத்து நாம் வீட்டில் இருக்கும் பஞ்சு திரியுடன் சேர்த்து திரித்த திரியை தான் பயன்படுத்த வேண்டும். அதே போல் 9 அல்லது 11 எண்ணிக்கையிலான செம்பருத்தி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை வேளையில் வீட்டில் இருக்கும் விநாயகர் படத்தை துடைத்து சந்தன குங்குமம் பொட்டு செம்பருத்தி மலர் வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு விநாயகருக்கு நெய்வேத்தியமாக வெல்லத்தை வைத்து விடுங்கள். உங்களால் செய்ய முடிந்தால் பிடி கொழுக்கட்டை செய்து வைத்தால் மிகவும் விசேஷம். இப்போது விநாயகருக்கு முன்பாக நாம் வாங்கி வைத்த அகல் விளக்கில் தயார் செய்து வைத்து திரியினை போட்ட பிறகு தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இப்போது நாம் எடுத்து வைத்த செம்பருத்தி இலையை கொண்டு விநாயகருக்கு ஒவ்வொரு இலையாக வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு இலையை வைக்கும் போது ஓம் ஹ்ம் கணபதியே நமஹ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை நீங்கள் எடுத்து வைத்திருக்கும் செம்பருத்தி இலையும் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சொல்லுங்கள்.

இதை சொல்லி முடித்த பிறகு விநாயகருக்கு தீப தூப ஆராதனை காட்டிய பிறகு நெய்வேத்தியத்தை வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு முதலில் சாப்பிட கொடுங்கள். அதே போல் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கும் இந்த நெய்வேத்தியத்தை சாப்பிட கொடுங்கள். ஏனெனில் விநாயகருக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.

இதையும் படிக்கலாமே: சமையலறையில் மறந்தும் கூட வைக்க கூடாத 4 பொருட்கள் என்னென்ன? இதெல்லாம் இருந்தால் உடனே மாத்திடுங்க தரித்திரம் பிடிக்கும்!

ஞாயிற்றுக்கிழமையில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் இந்த பரிகாரத்தை தொடங்குவது மிகவும் சிறப்பு. அதன் பிறகு இதை போல் தொடர்ந்து ஆறு வாரங்கள் ஆறு விளக்கை ஏற்றி வரும் போது உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனைகள் அனைத்தும் குறைய தொடங்கி விடும். நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்தால் கடன் அடைய நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சிக்கும் விநாயகர் அருள் புரிவார்.

- Advertisement -