இந்த இளநீர் தீபத்தை வாழ்க்கையில் ஒரு முறையாவது வீட்டில் ஏற்றிப் பாருங்கள். கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் அவை அனைத்தையும் ஒன்றும் இல்லாமல் ஆக்கி கோடீஸ்வரர் ஆக்கக்கூடிய சிறப்பான தீபம் இது.

elaneer vilakku money
- Advertisement -

நடைபாதையில் குடியிருக்கும் நபர் முதல் பங்களாவில் குடியிருக்கும் வசதியான தொழிலதிபர் வரை அனைவருக்கும் கடன் என்ற ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. அந்த கடன் பிரச்சினை அளவில் மாறினாலும் அனைவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் இருக்கத்தான் செய்கிறது. சிலரோ வாங்காத கடனுக்காக வட்டியை கட்டி அதனால் பாதிப்பிற்கு ஆளாகி கஷ்டப்படுவார்கள். இந்தநிலையில் எப்படிப்பட்ட கடன் சுமையாக இருந்தாலும், அந்த கடனை தீர்ப்பதற்கு நாம் செய்யக்கூடிய பரிகாரம்தான் இளநீர் தீபம். இளநீரை வைத்து எப்படி தீபம் ஏற்ற வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் சுமையை தீர்ப்பதற்கு நாம் பல பரிகாரங்களை பார்த்திருக்கிறோம். இளநீர் தீபத்தை ஏற்றி அதனால் நம்முடைய கடன் சுமை தீரும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். ஒரே ஒரு முறை தம் வீட்டில் இந்த இளநீர் தீபத்தை ஏற்றி வழிபட்டால், நம்முடைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு நாம் எந்த மந்திரத்தையும் கூற வேண்டும், எந்த வழிபாட்டு முறையும் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதை வைத்து ஒரு தீபத்தை ஏற்றினாலே கடன் இல்லாத வாழ்க்கையை நம்மால் வாழ முடியும்.

- Advertisement -

முற்றாத இளநீர் ஒன்றை வாங்கிக் கொள்ள வேண்டும். வாங்கும் பொழுதே இளநீரை சீவி வாங்கிக் கொள்ளலாம். வீட்டிற்கு வந்து பூஜை அறையில் ஒரு தாம்பாளத்தை வைக்க வேண்டும். அதன் நடுவில் பச்சரிசியை கொட்டி கொள்ள வேண்டும். இப்பொழுது வாங்கி வந்த இளநீரை மேலே சீவி அதில் இருக்கும் நீரில் சிறிதளவு வெளியில் ஊற்றிவிட்டு, அரிசியின் மேல் இந்த இளநீர் ஆடாதவாறு வைக்க வேண்டும். நாட்டு மருந்து கடையிலிருந்து நவதானியத்தை வாங்கி வந்து இளநீரில் போட வேண்டும். பிறகு அந்த ஓட்டையை வெற்றிலையை வைத்து மூட வேண்டும்.

அந்த வெற்றிலையின் மேல் ஒரு அகல் விளக்கை வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். காலையும், மாலையும் ஒரு மணி நேரம் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். மறுநாள் அந்த அகலில் இருக்கும் எண்ணெயையும் திரியையும் மாற்றிவிட்டு, புதிதாக எண்ணெயையும் திரியையும் போட்டு ஏற்ற வேண்டும். இவ்வாறு நாம் தொடர்ந்து 7 நாட்கள் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் எண்ணெயையும், திரியையும் மாற்ற வேண்டும். 8வது நாள் இளநீரை இரண்டாக வெட்ட வேண்டும். இளநீரில் இருக்கும் நவதானியங்கள் முளைவிட்டு இருக்கும். அந்த தானியங்களை எடுத்து ஒரு பேப்பரில் போட்டு வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

காய்ந்த நவதானியங்களை பொடியாக அரைத்து ஒரு வெள்ளை நிற துணியிலோ அல்லது மஞ்சள் நிற துணியிலோ கொட்டி மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். இந்த மூட்டையை நம் வீட்டு பூஜை அறையில் வைக்கலாம் அல்லது பணம் இருக்கும் இடங்களில் வைக்கலாம் அல்லது பீரோவில் வைக்கலாம். இந்த பரிகாரத்தை நாம் ஒரே ஒரு முறை செய்தால் போதும் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து, கடன் இல்லாத வாழ்க்கையை நம்மால் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 6 மாதங்கள் கழித்து அந்த மூட்டையை கால் படாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற நீரிலோ போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இடமே இல்லை என்றாலும் இப்படி கூட நீங்கள் இந்த அதிர்ஷ்டம் தரும் செடியை வளர்க்க மறந்து விடாதீர்கள்! இந்த செடி உங்கள் வீட்டில் இருந்தால் மகாலட்சுமி உங்கள் வீட்டில் இருப்பது போல..

இந்த பரிகாரத்தை நாம் நம் வீட்டில் ஒரே ஒருமுறை செய்து நமக்கு இருக்கக்கூடிய கடன் சுமைகள் அனைத்திலும் இருந்து வெளிவந்து மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் வாழலாம்.

- Advertisement -