ஆஞ்சநேயரை இந்த முறையில் வழிபட்டால் கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் தீர்ந்து விடும்.

anjaneyar
- Advertisement -

கடன் என்ற பிரச்சனை இல்லாத நபர்களே இருக்க மாட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். ஏதாவது ஒரு ரூபத்தில் யாருக்காவது ஒருவருக்கு கடன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படத்தான் செய்யும். சிறிய தொகையாக இருந்து அதை சமாளிக்கும் பட்சத்தில் எளிதில் கடனை அடைத்து விடலாம். ஆனால் வட்டிக்காக கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் வட்டி கட்டுவதற்காக மறுபடியும் கடன் வாங்கி தங்கள் வாழ்க்கையை இழந்தவர்கள் பலர் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அப்படி கடன் வாங்கி கஷ்டப்படுபவர்கள் எந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபட்டால் கடன் சுமை தீரும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

கடன் என்ற கடலை நீந்தி கரை ஏறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இன்றைய காலகட்டத்தில் இருந்து வருகிறது.வீட்டு சூழ்நிலைக்காகவும், தொழில் சம்பந்தமாகவும், படிப்பிற்காகவும் என்று பல வகைகளில் நாம் கடன்களை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். அதை திருப்பி செலுத்துவதற்குரிய வருமானங்களை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டாலும் அதில் ஏதாவது ஒரு தடங்கல்கள் ஏற்பட்டு கடனை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நமக்கு உதவக்கூடிய தெய்வமாக ஆஞ்சநேயர் விளங்குகிறார்.

- Advertisement -

பொதுவாக கடன் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் முழுமுதற் காரணமாக விளங்குபவர் செவ்வாய் பகவான் என்பதால் ஆஞ்சநேயரை நாம் செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரையில் வழிபட வேண்டும். அதாவது காலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளும் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள்ளும் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

இந்த வழிபாட்டை சிவன் கோவிலில் இருக்கும் ஆஞ்சநேயருக்கு செய்ய வேண்டும். கண்டிப்பான முறையில் அனைத்து சிவன் கோவில்களிலும் ஏதாவது ஒரு தூணில் ஆஞ்சநேயர் இருப்பார். செவ்வாய்க்கிழமை அன்று சிறிது நல்லெண்ணெய், ஒரு சிவப்பு நிற துணி, 1 1/4 கிலோ வெல்லம், 1/4 கிலோ கருப்பு உளுந்து இவை அனைத்தையும் வாங்கிக்கொண்டு அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு செல்ல வேண்டும்.

- Advertisement -

அங்கு பூஜை செய்பவரிடம் நல்லெண்ணையை கொடுத்து ஆஞ்சநேயருக்கு எண்ணெய் காப்பு சாற்ற சொல்ல வேண்டும். பிறகு சிவப்பு நிற துணியையும் கொடுத்து ஆஞ்சநேயருக்கு சாற்று சொல்ல வேண்டும். அங்கு இருக்கும் மடப்பள்ளியில் வெல்லத்தையும் உளுந்தையும் பிரசாதம் செய்வதற்காக கொடுத்து விட வேண்டும். பிறகு ஆஞ்சநேயருக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து அவர் முன்னால் அமர்ந்து நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் அனைத்தையும் அவரிடம் கூறிவிட்டு மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வர வேண்டும். கடன் தொகைக்கு ஏற்றார் போல் நாம் இந்த பரிகாரத்தை அதிகரித்துக் கொள்ளலாம். கடன் அடையும் வரை இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யலாம். ஒன்பது வாரத்துக்கு முன்பே கடன் தீர்ந்து விட்டால் வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் மற்றும் தொழில் பிரச்சினை தீர நெல்லிக்காய் பரிகாரம்.

இந்த முறையில் ஆஞ்சநேயரை நாம் தொடர்ந்து வழிபட்டு வந்தால் கோடிக்கணக்கில் இருக்கக்கூடிய கடன் சுமையும் காணாமல் போய்விடும்.

- Advertisement -