செவ்வாய்க்கிழமையில் அனுமனை வணங்க வேண்டிய முறை

hanuman pray honey
- Advertisement -

ராமரின் பரமபக்தனான ஆஞ்சநேயரை மானிடர்களின் துயர் நீக்கவே அவதரித்தவர் என்றே சொல்லலாம். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் தெய்வங்களில் ஆஞ்சநேயரும் ஒருவர். ராம அவதாரத்தில் ராமர் சீதையை மீட்டு வர துணையாக நின்ற ஆஞ்சநேயரை நாமும் நம்முடைய துன்பத்திலிருந்து மீண்டு வர எப்படி வணங்க வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக செவ்வாய்க்கிழமையில் சில வழிபாடுகளையும், பரிகாரங்களையும் செய்யும் போது அது பல விதமான பலன்களை தரும். அதிலும் குறிப்பாக கடன் அடைய இந்த நாளில் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் அதிக அளவில் பலனை தருவதோடு, கடனும் விரைவில் அடையும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் கடனை அடைக்க மட்டுமல்லாது நம்முடைய பிரச்சனைகள் தீர்வும் செவ்வாய்க்கிழமையில் அனுமனை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமையில் அனுமனை வழிபட வேண்டிய முறை

நீண்ட நாட்களாக தீராத கடனால் அவதிப்பட்டு வருபவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமையில் ஆஞ்சநேயருக்கு ரோஜா மலர்களை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். இத்துடன் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும். இந்த வழிபாட்டை தொடர்ந்து ஏழு செவ்வாய் செய்து வரும் போது கடன் தீருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொருவரின் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில் இருக்கும். ஒரு சிலர் தங்களுடைய பிரச்சனைகளை வெளியில் கூட சொல்ல முடியாமல் துன்பப்படுபவர்கள். அப்படியானவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று அனுமனுக்கு பலாப்பழ எண்ணெய்யில் வெண்டைக்காய் கலந்து அர்ச்சனை செய்ய வேண்டும். இதை செய்யும் போது அவர்களுடைய பிறவி சாபத்திலிருந்தும் கூட விடுபடுவதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதே போல் செவ்வாய்க்கிழமையில் ஒரு சிறிய மண் குடுவையில் தேனை ஊற்றி அனுமன் கோவிலுக்கு கொண்டு சென்று அங்கு அவருக்கு வைத்து வணங்க வேண்டும். இப்படி வழிபட்ட தேனை நீங்கள் வீட்டிற்கும் கொண்டு வரலாம் அல்லது அனுமனுக்கே வைத்து விடலாம். இந்த வழிபாடு உங்கள் வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படுத்துவதுடன் செல்வ செழிப்பை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

காரியத்தடைகள் உள்ளவர்கள் எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் தோல்வியை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்கள். செவ்வாய்க்கிழமையில் அனுமனுக்கு வெண்பூசணி திலகத்தை தடவி வழிபட வேண்டும். அதிலும் குறிப்பாக அவரது வலது தோளில் வெண்பூசணி திலகத்தை தடவ வேண்டும். இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்யும் போது அனைத்து காரியங்களும் வெற்றி ஆகும் என்பது ஐதீகம்.

இதையும் படிக்கலாமே: பணம் பெருக அமாவாசை பரிகாரம்

செவ்வாய்க்கிழமையில் அனுமனுக்கு விரதம் இருந்து தொடர்ந்து வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் உள்ள அனைத்து துன்பங்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாடுகளில் நம்பிக்கை உள்ளவர்கள் அனுமனை இந்த முறையில் வழிபட்டு தங்களுடைய தீராத துன்பத்திலிருந்து வெளி வரலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -