கேது பகவானுக்கு அபிஷேகம் செய்ய அடிக்கடி இந்த 1 பொருளை மட்டும் வாங்கிக் கொடுத்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் கடன் பிரச்சனையே வராது.

kethu
- Advertisement -

செலவு செய்ய பணம் இல்லை என்று சில பேர், அடிக்கடி கடன் வாங்கிக் கொண்டே இருப்பார்கள். அடிக்கடி நகையை அடமானம் வைப்பார்கள். எவ்வளவு அதிகமாக வருமானம் வந்தாலும், கடன் வாங்காமல் ஒரு சிலரால் குடும்பம் நடத்தவே முடியாது. இப்படிப்பட்டவர்கள் கடன் இல்லாமல் வாழ்வதற்கு என்ன செய்வது. கடன் பிரச்சனை குறைய ஆன்மீகத்தில் ஒரு எளிமையான பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. நிறைய கடன் இருப்பவர்கள் அதை சீக்கிரம் திருப்பிக் கொடுக்கவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இனிமேல் கடனே வாங்க கூடாது என்றும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இதோடு சேர்த்து மகாலட்சுமியின் அருளாசியை பெற்று நிறைய பணத்தை சேமிக்கவும், ஒரு பரிகாரத்தை  இன்று தெரிந்து கொள்ள போகின்றோம்.

கடன் தீர கேது பகவான் பரிகாரம்:
ஜாதக கட்டத்தில் கேது சரியாக இல்லை என்றாலும் நிறைய கடன் சேரும். நவக்கிரகங்களில் இருக்கக்கூடிய கேதுவுக்கு அபிஷேகம் செய்வதற்கு உங்கள் கையால் வாசம் நிறைந்த பன்னீரை வாங்கிக் கொடுக்க வேண்டும். இந்த பன்னீரை அபிஷேகப் பொருளாக கோவிலுக்கு வாங்கிக் கொடுக்க கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். இது ஒரு பரிகாரம்.

- Advertisement -

கூடவே, கொள்ளு தானம் செய்யுங்கள். இந்த கொள்ளு தானத்தை எப்படி வேண்டுமென்றாலும் செய்யலாம். கோவிலில் இருக்கும் குருகளுக்கும் தானம் கொடுக்கலாம், அல்லது முதியோர் இல்லத்திற்கு கொள்ளு சுண்டல் செய்து கொண்டு போய் அன்னதானமாக கொடுக்கலாம். ஏதாவது கோவிலுக்கு கொள்ளு சுண்டல் செய்து கொடுத்து, நெய்வேத்தியமாக படைத்து, அதை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமாகவும் கொடுக்கலாம். அல்லது சிறிய குழந்தைகள் இருக்கும் ஆசிரமங்களுக்கு கொள்ளு வாங்கி தானம் கொடுத்தாலும் நல்லது தான். அதை அவர்கள் சுண்டலாக செய்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பார்கள். இப்படி கொள்ளு தானம் செய்தாலும் கடன் பிரச்சனை படிப்படியாக குறையும்.

சேமிப்பை அதிகரிக்கும் மகாலட்சுமி பரிகாரம்:
ஒரு மண் உண்டியல் எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு வீட்டில் பூஜையை முடித்துவிட்டு ஒரு மஞ்சள் துணியில் 5 ரூபாய் நாணயத்தை வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை கட்டும் போது உங்களுடைய வீட்டில் பணம் சேர வேண்டும் கடன் குறைய வேண்டும் என்று மகாலட்சுமியை மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

தயாராக எடுத்து வைத்திருக்கும் மண் உண்டியலில் இந்த 5 ரூபாயை முடிச்சோடு போட்டு விடுங்கள். பிறகு அந்த உண்டியலில் பணம் சேர்க்கவும். உங்களால் எப்போதெல்லாம் சிலரை காசுகளை அதில் சேர்க்க முடியுமோ சேர்த்து வாருங்கள். இந்த உண்டியலில் பணம் சேர சேர உங்களுடைய சேமிப்பு ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும். உண்டியலில் சேர்ந்த பணத்தை அடிக்கடி நம்முடைய தேவைகளுக்காக, சுப செலவுக்காக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். தவறே கிடையாது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் வாட்டி வதைக்கும் பிரச்சனைகள் பறந்தோட சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம் என்ன தெரியுமா? இந்த மந்திரம் உச்சரிப்பவர்களுக்கு தோல்வியே கிடையாது!

சரி ஏன் இந்த ஐந்து ரூபாய் மகாலட்சுமிக்கு ரொம்பவும் பிடித்தது என்று சொல்கிறார்கள். என்ற காரணம். உங்களுக்கு தெரியுமா. புதன் பகவானுக்கு உரிய இடம் 5. பெருமாளுக்கு உரிய கிரகம் புதன். ஆக பெருமாளுக்கு பிடித்த ஒன்று மகாலஷ்மிக்கும் மிகவும் பிடிக்கும். அதற்காகத்தான் ஐந்து ரூபாயை பரிகாரத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்று சொல்கின்றோம். முடிந்தால் ஐந்து ரூபாய் நாணயங்களாக சேர்த்து வைக்கும் பழக்கத்தை வைத்து பாருங்கள்‌. உங்களிடம் நிறைய காசு பணம் சேர தொடங்கும். இப்படி எளிமையான சின்ன சின்ன விஷயங்களை பார்த்து பார்த்து செய்து வந்தாலே காசை சுலபமாக சேர்த்துவிடலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -