முன்னோர் சாபம் நீங்க விளக்கு பரிகாரம்

vilakku2
- Advertisement -

பல தலைமுறைகளாக ஒரு குடும்பம் தொடர்ந்து கஷ்டப்பட்டு கொண்டு வருகிறது என்றால், அந்த குடும்பத் தலைவரின் ஜாதகத்தை கொண்டு போய் ஜோதிடரிடம் காண்பிக்க வேண்டும். பல தலைமுறைகளாக அந்த குடும்பத்திற்கு முன்னோர்களது சாபம் இருக்கும் பட்சத்தில் குடும்பம் கஷ்டத்தில் இருந்து மீளவே முடியாது.

எவ்வளவோ கோவிலுக்கு போயிருப்பாங்க, எவ்வளவோ பரிகாரங்கள் செஞ்சி இருப்பாங்க, ஆனா கஷ்டம் முடிந்த பாடாக இருக்காது. உங்களுடைய குடும்பத்தில் இப்படிப்பட்ட கஷ்டங்கள் வருவதற்கு முன்னோர்களது சாபம் காரணமாக இருந்தால் அந்த சாபத்தை நிவர்த்தி செய்ய எளிமையான ஒரு ஆன்மீக பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

சில பேருக்கு பிறக்கும்போது தலையெழுத்து நல்லா இருக்கும். அவர்களுடைய ஜாதக கட்டமும் நல்லா தான் இருக்கும். ஆனா குடும்பத்தை பின் தொடரும் சாபம் இவர்களுடைய பிறந்த ஜாதகத்தை வேலை செய்யவிடாமல் தடுக்கும். அதிலிருந்து விடுபடவும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

முன்னோர் சாபம் நீங்க

அமாவாசை நாள், பௌர்ணமி நாள் அல்லது ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை, இதில் ஏதாவது ஒரு தினத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும். குலதெய்வ கோவிலில் ஒரு இடத்தில் நன்றாக மஞ்சள் தண்ணீரை தெளித்து சுத்தம் செய்து விடுங்கள். பிறகு 48 மண் அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு, விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எங்களுடைய குடும்பத்தை தொடரும் முன்னோர்களது சாபம் விலக வேண்டும் எங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துவிட்டு, முறையாக உங்கள் குல தெய்வத்திற்கு எப்படி வழிபாடு செய்வீர்களோ, அதையும் செய்துவிட்டு, வீடு திரும்பும் போது அன்னதானம் செய்ய வேண்டும்.

உங்களால் முடிந்த உணவை வாங்கி உண்மையிலேயே பசியாக இருப்பவர்களுக்கு தானம் செய்துவிட்டு வீடு திரும்புங்கள். ஒரே ஒரு முறை இந்த 48 விளக்குகளை ஏற்றி, அன்னதானம் செய்து குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று பிரார்த்தனை வைத்தால், நிச்சயம் உங்கள் குடும்ப சாபம் நீங்கும்.

- Advertisement -

பல தலைமுறைகளுக்கு முன்பாக முன்னோர்களுடைய மனசு கஷ்டப்பட்டு உங்களுடைய குடும்பத்திற்கு ஏதேனும் சாபம் வந்திருந்தாலும் அது நிவர்த்தி ஆகிவிடும். முன்னோர்களது மனது குளிர்ந்து உங்களை ஆசீர்வாதம் செய்து விடுவார்கள். மொத்தமாக 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள் இந்த மொத்த எண்ணிக்கையின் கூட்டுத்தொகை தான் 48.

இதையும் படிக்கலாமே: குழந்தை பாக்கியத்தை அருளும் விநாயகர்

சிரமம் பார்க்காமல் இந்த பரிகாரத்தை செய்பவர்களுடைய குடும்பத்தில் நிச்சயம் கஷ்டங்கள் நிவர்த்தி ஆகி சந்தோஷம் பிறக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -