இன்று சனிப்பிரதோஷம். இன்று மாலை சிவன் கோவிலுக்கு செல்லும்போது இந்த பொருளை உள்ளங்கையில் எடுத்து சென்றால், கடன் கஷ்டம் எல்லாம் காணாமல் போகும்.

sivan-2
- Advertisement -

நம்முடைய கஷ்டத்தை கொடுக்கும் எந்த ஒரு தோஷமாக இருந்தாலும், அது விலக வேண்டும் என்றால் சிவபெருமானை பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்வது சிறப்பு என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக இந்த சனி மகா பிரதோஷத்தை நாம் தவறவே விடக்கூடாது. மற்றக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தில், சிவபெருமானை வழிபாடு செய்ய முடியவில்லை என்பவர்கள் கூட, இந்த சனி மஹா பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபாடு செய்வது பல மடங்கு அதிக பலனை கொடுக்கும். சரி, இந்த பிரதோஷ தினத்தில் கடன் சுமை குறைய நாம் செய்ய வேண்டிய அற்புதமான அதிசக்தி வாய்ந்த அந்த பரிகாரம் என்ன. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

எவ்வளவு பெரிய கஷ்டத்தையும், எவ்வளவு பெரிய கடன் சுமையையும் குறைக்கக்கூடிய சக்தி இந்த கருமிளகுக்கு உண்டு. இன்று கோவிலுக்கு செல்லும்போது உங்களுடைய உள்ளங்கையில் 3 மிளகு மட்டும் எடுத்துச் செல்லுங்கள். பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்கு முன்பு அமர்ந்து சிவபெருமானை பார்த்தவாறு, வேண்டுதல் வைப்பீர்கள் அல்லவா. அப்போது கடன் சுமை தீர வேண்டும் என்ற வேண்டுதலை ஆழமாக வேண்டிக் கொள்ளுங்கள். கையில் மிளகு அப்படியே இருக்கட்டும். (சமையலுக்கு பயன்படுத்தும் மிளகு)

- Advertisement -

அபிஷேகம் ஆராதனை அத்தனையும் முடிந்த பிறகு, சன்னிதானத்திற்கு வெளியில் இருக்கக்கூடிய நந்தியின் அருகில் வந்து நின்று கொள்ளுங்கள். உங்களுடைய உள்ளங்கையை அப்படியே மடித்தவாறு, உச்சந்தலையின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கைக்கு உள்ளே மிளகு இருக்கிறது. என்னுடைய கடன் சுமை குறைய வேண்டும். கடன் சுமை குறைய வேண்டும். கடன் சுமை குறைய வேண்டும். என்று மூன்று முறை சொல்லிவிட்டு உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி கையில் இருக்கும் மிளகை, அங்கு அந்த கோவிலில் இருக்கக்கூடிய மண்பானங்கான இடத்தில் போட்டுவிட்டு வந்து விடுங்கள்.

அவ்வளவுதான். கடன் சுமையை குறைக்க இந்த சின்ன பரிகாரம் உங்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும். இது தவிர பிரதோஷ தினத்தில் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம். வில்வ இலைகளை வாங்கி உங்கள் கையால் கட்டி மாலை போடுங்கள்.

- Advertisement -

சனி பிரதோஷத்திற்கு என்று ஒரு சக்தி உள்ளது. அந்த சனிப்பிரதோஷ சக்தி வாய்ந்த நாளில் இந்த மிளகு பரிகாரம் உங்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நன்மையை கொடுக்கும். மிளகுக்கு எந்த ஒரு கெடுதலையும் அழிக்கக்கூடிய சக்தி உண்டு.

இதையும் படிக்கலாமே: இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் என்றைக்கு ஆரம்பிப்பது? விரதத்தை தொடங்க வேண்டிய நாள், நேரம், முருகனின் அருள் ஆசையை முழுமையாக பெற உச்சரிக்க வேண்டிய மந்திரம்.

வாங்கிய கடனை திருப்பி கொடுக்க விடாமல் தடுக்கும் எந்த ஒரு கெட்ட சக்தியாக இருந்தாலும், அது உங்களை விட்டு நீங்கி விடும். கடனை தருவதற்கு உண்டான அத்தனை வழிகளையும் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக் கொடுக்கும். நம்பிக்கையோடு சிவபெருமானின் மேல் பாரத்தை போட்டு, இந்த சின்ன பரிகாரத்தை மட்டும் இன்று செய்து தான் பாருங்களேன். அடுத்து வரக்கூடிய ஒரு சில நாட்களில் நீங்களே நம்ப முடியாது நிறைய நல்ல மாற்றங்களை உணர்வீர்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -