லோன் லோன் என்று லோனில் கிடந்து தவிப்பவர்களுக்கு கடன் பிரச்சினைகள் தீர வீட்டில் ஏற்ற வேண்டிய சக்தி வாய்ந்த விளக்கு என்னவென்று தெரியுமா? இந்த விளக்கு ஏற்றினால் பணம் புரளும்!

vilakku-cash
- Advertisement -

உலகில் வாழும் எல்லோருக்கும் கடன் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் பணக்காரனாக இருந்தாலும் கூட உங்களுக்கு என சில கடன்கள் இருக்கத்தான் செய்யும். நடுத்தர வருடத்தினரே அதிகம் இந்த கடன் பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறார்கள். கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து எளிதாக மீண்டு விடவும், மீண்டும் அவர்களிடம் கடன் சேராமல் இருக்கவும் வீட்டில் ஏற்ற வேண்டிய விளக்கு என்ன? இந்த விளக்கு ஏற்றி வழிபட்டால் கடன் தீருமா? என்பது போன்ற ஆன்மீக குறிப்பு தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஆன்மீகத்தை பொறுத்தவரை கடன் பிரச்சனை என்பது அவர்கள் பிறந்த ஜாதகத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது என்கிறது. ஒருவருடைய ஜனனத்தில் இருந்தே கடன் பிரச்சினை ஆரம்பிக்கும். நீங்கள் பிறந்ததும் உங்களுடைய அப்பா அம்மாவிற்கு கடன் பிரச்சினை அதிகமாக வாய்ப்புகள் இருக்கும். அதுபோல நீங்கள் வளர வளர உங்களுடைய வாழ்க்கையில் எந்த சமயத்தில் கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்க வேண்டும் என்பதும் ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதுபோல கடன் பிரச்சினைகளை சரி செய்வதற்கு பரிகாரங்கள் உண்டு. அந்த வரிசையில் வீட்டில் எளிமையாக நான்முக விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தாலும் கடன் பிரச்சினைகள் தீரும் என்கிறது சாஸ்திரங்கள்.

- Advertisement -

கடன் பிரச்சனையில் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்படுவது லோன் என்னும் ஒரு வழியில் தான். லோன் லோன் என்று லோனில் சிக்கி தவிப்பவர்களின் நிலைமை இன்று படுமோசமாக இருக்கிறது. ஒரு லட்சம் கடனை வாங்கிவிட்டு மூன்று லட்சமாக திருப்பி செலுத்தக்கூடிய அவலம் நிகழ்கிறது எனவே கூடுமானவரை தன்னுடைய உழைப்பை வீணாக்காமல் சேகரித்து எந்த ஒரு விஷயத்தையும் செய்து கொள்ள வேண்டுமே அன்றி லோன், தண்டல் ,வட்டிக்கடன் என்று வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

வீட்டில் பொதுவாக காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஏதாவது ஒரு விசேஷம், விழாக்கள் என்றால் நாம் புதிதாக குத்து விளக்கை தேய்த்து சுத்தம் செய்து வைத்து விளக்கு ஏற்றி வைப்போம். குத்து விளக்கு ஐந்து முகங்களில் இருக்கும். இதில் நான்முக விளக்கு ஏற்றி நீங்கள் இஷ்ட தெய்வத்தை மனதார வழிபட்டு வந்தால் கடன் தொல்லைகள் நீங்குவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

- Advertisement -

ஐந்து முகத்தில் விளக்கு ஏற்றி வைத்தால் வீட்டில் சுபீட்க்ஷம் நிலைத்து இருக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் தீரும், தடைகள் யாவும் நீங்கி வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அது போல நான்கு முகங்களை ஏற்றி வைத்து வழிபட்டு வருபவர்களுக்கு பணம், பொருள் சேரும். மேலும் கடன் தொல்லைகள், தேவையற்ற பண சிக்கல்கள், வம்பு வழக்குகள், சொத்து பிரச்சனைகள் போன்றவையும் தீர்வதாக நம்பப்பட்டு வருகிறது.

இதையும் படிக்கலாமே:
பெண்கள் காலையில் எழுந்து நிலை வாசல் கதவை திறக்கும் போது இந்த 1 வரி மந்திரத்தை சொன்னால், வீட்டில் செல்வ செழிப்பு பெருகும். வறுமை வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கவே வைக்காது.

இந்த நான்முக விளக்கை நீங்கள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு ஏற்றி வழிபடலாம். இரண்டு குத்து விளக்குகளை சுத்தம் செய்து அதற்கு சந்தன குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். பின்னர் சிறிய பூ ஒன்றை சூட்டி சுற்றிலும் நான்கு திரிகளை போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி ஏற்றி வைக்கும் பொழுது நம்முடைய ஜாதகத்தில் இருக்கும் குறைகள் அகழும். மேலும் இஷ்ட தெய்வங்களின் அருள் கிடைத்து உங்களுக்கு உடனே சாபங்கள் நீங்குவதாகவும், குறிப்பாக கடன் பிரச்சினைகள் தீர்வதாகவும் நம்பப்படுகிறது.

- Advertisement -