வாரம்தோறும் சனிக்கிழமை இந்த 1 பொருளை மட்டும் வாங்கினால் போதும். ஒரு ரூபாய் கூட கடன் இருக்காது.

mahalashmi
- Advertisement -

சனிக்கிழமை என்றாலே சனிபகவானுக்கு உரிய தினம் என்பதும், பெருமாளுக்கு உரிய தினம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். பொதுவாகவே இந்த சனிக்கிழமை எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். ஆனால் சனிக்கிழமை அன்று ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை நாம் செய்யும் போது, அது நமக்கு இரட்டிப்பு பலனை கொடுக்கும். வழிபாடு, பரிகாரங்களை சனிக்கிழமை அன்று தாராளமாக செய்யலாம். அந்த வரிசையில் கடன் பிரச்சனை தீருவதற்கு சனிக்கிழமை நாம் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு அறிய தகவலைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சனிக்கிழமை எந்த ஒரு வேலையை செய்தாலும் அது இரண்டு மடங்காக பெருகும் என்று சொல்லுவார்கள். சனிக்கிழமை அன்று யாரும் கடன் வாங்காதீங்க. சனிக்கிழமை அன்று கடனை திருப்பிக் கொடுக்கலாம். சனிக்கிழமை அன்று கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். மீண்டும் மீண்டும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். உங்களுக்கு நிறைய கடன் இருக்கும் போது கொஞ்சம் தொகையை சனிக்கிழமை அன்று திருப்பி கொடுத்துப் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக கடனை திருப்பிக் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பத்தை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.

- Advertisement -

சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று உங்கள் கடன் அடைய வேண்டும் என்று பெருமாலையும், மகாலட்சுமி தாயாரையும் மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். பெருமாளுக்கு துளசி இலைகளையும் மகாலட்சுமிக்கு தாமரை பூவையும் சூட்டி வேண்டிக்கொண்டால் , உங்கள் கடன் பிரச்சனை படிப்படியாக சீக்கிரம் குறையும்.

கடன் குறைய சனிக்கிழமை வாங்க வேண்டிய பொருள்:
சனிக்கிழமை நீங்கள் முக்கியமாக வாங்க வேண்டிய பொருள் எள்ளுருண்டை. பத்து ரூபாய்க்கு கூட எள்ளுருண்டைகள் கடைகளில் கிடைக்கும். மிகக் குறைந்த அளவு வாங்கினால் போதும். வாங்கிய எள்ளுருண்டைகளை கோவில் குளங்களில் இருக்கும் மீன்களுக்கு இறையாக போடுவது நல்லது.

- Advertisement -

எள்ளுருண்டைகளை வாங்கிக் கொண்டு போய் நவகிரகங்களில் இருக்கும் சனி பகவானுக்கு நிவேதியமாக வைத்து அர்ச்சனை செய்து, அந்த எள்ளுருண்டைகளை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுப்பதும் நல்லது. இதில் எதுவுமே முடியாதா எள்ளுருண்டை வாங்கி வீட்டுக்கு கொண்டு போய் நீங்களே சாப்பிடுங்கள். காசு கொடுத்து சனிக்கிழமை எள்ளுருண்டை வாங்குவது நல்லது. தீராத கடன் பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த வழிபாடு உங்களை நேராக குல தெய்வத்தின் பாதங்களில் கொண்டு போய் சேர்த்து விடும். குலதெய்வம் தெரியாதவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு.

இவ்வளவு தான். எவ்வளவு பரிகாரங்களை நாம் செய்தாலும், நம் கடன் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் சமயத்தில், நம்முடைய ஆடம்பர வாழ்க்கைக்காக, நாம் மீண்டும் மீண்டும் கடன் வாங்கிக் கொண்டே இருந்தால் இந்த கடன் பிரச்சனைக்கு தீர்வு என்பது கிடைக்கவே கிடைக்காது. ஆக காசு இல்லை என்றால் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை மனதில் இருந்து அகற்ற வேண்டும். அதன் பின்பு பரிகாரங்கள் செய்ய வேண்டும். கடன் இனிமேல் வாங்கவே கூடாது என்ற எண்ணத்தை மனதில் நிறுத்தி மேல் சொன்ன பரிகாரத்தை செய்பவர்களுக்கு பலன் நிச்சயம் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -