இந்த புதன்கிழமை வெற்றிலையின் மேல் இதை தடவினால், அடுத்த புதன்கிழமைக்குள் பணக்கஷ்டம் எல்லாம் தீரும். வராத பணம் கூட வீடு தேடி வரும்.

vetrilai-cash
- Advertisement -

வெற்றிலையை, வெற்றி இலை என்று கூட சொல்லலாம். வெற்றிலையை வைத்து நாம் செய்யக்கூடிய பரிகாரம் எதுவாக இருந்தாலும் அது நமக்கு முழு வெற்றியை கொடுக்கும். குறைந்த செலவில் எளிமையான இந்த வெற்றிலை பரிகாரத்தை புதன்கிழமை அன்று செய்து பாருங்கள். அடுத்த புதன்கிழமைக்குள் உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டத்திற்கு ஏதாவது ஒரு வகையில் தீர்வு கிடைக்கும். உதாரணத்திற்கு வாரா கடன் வசலாகும்.

நீங்கள் யாருக்காவது கடன் கொடுக்க வேண்டும் என்றால், அந்த கடனை திருப்பிக் கொடுப்பதற்கான வருமானம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குறைந்த சம்பளத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு, நல்ல வருமானத்திற்கு உண்டான வழி பிறக்கும். அடுத்த மாதம் வீட்டில் விசேஷம் வைத்திருக்கிறோம், அதற்கான பணம் ஒரு இடத்திலிருந்து வரவேண்டும், ஆனால் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த பணத்தை சீக்கிரம் வர வைக்க வேண்டும் என்றாலும் இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

பணம் தரும் புதன் கிழமை பரிகாரம்:
இத்த பரிகாரத்திற்கு கிழிசல் இல்லாத வெற்றிலை 3, சுத்தமான பசு நெய் சிறிதளவு, 1 ரூபாய் நாணயம், சதுர வடிவில் சின்னதாக ஒரு பட்டு துணி, இந்த 4 பொருட்கள் இருந்தால் போதும். பட்டுத் துணி எந்த நிறத்தில் இருந்தாலும் சரிதான். ஆனால் பயன்படுத்தாத புது பட்டு துணையாக இருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை புதன் கிழமை மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் செய்ய வேண்டும்.

பூஜையறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தாம்பல தட்டில் பட்டு துணியை விரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பக்கத்தில் தயாராக இருக்கும் வெற்றிலியையும், நெய்யையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வெற்றிலையாக கையில் எடுத்து அந்த வெற்றிலைக்கு மேல் இந்த நெய்யை உங்கள் விரல்களால் தொட்டு தடவ வேண்டும். தடவும் போது உங்களுக்கு இருக்கும் குறிப்பிட்ட பணக்கஷ்டம் எதுவோ அதை நினைத்து, குலதெய்வத்தையும் நினைத்து அந்த பணக்கஷ்டம் சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு நெய்யை வெற்றிலையின் மேல் தடவுங்கள்.

- Advertisement -

மூன்று வெற்றிலைக்கு மேல் பக்கமும் நெய் தடவி விட்டு, ஒவ்வொரு வெற்றிலையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து அடுக்கிக் கொள்ளுங்கள். மேலே மூன்றாவதாக இருக்கும் வெற்றிலைக்கு மேல் 1 ரூபாய் நாணயத்தை வைத்து, வெற்றிலையை அப்படியே சுருட்டி அந்த பட்டுத் துணியில் வைத்து மடித்து இந்த மூட்டையை அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.

அடுத்த வாரம் புதன்கிழமை பழைய வெற்றிலையை எடுத்து, கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். ஒரு ரூபாய் நாணயத்தை மீண்டும் பரிகாரம் செய்வதாக இருந்தால், அடுத்த வார புதன்கிழமைக்கு அதே ஒரு ரூபாய் நாணயத்தை பயன்படுத்தலாம். முதலில் பயன்படுத்திய பட்டுத் துணியை லேசாக தண்ணீரில் அலசி காய வைத்து விட்டு அதையே மீண்டும் பரிகாரம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். பரிகாரத்தை 1 வாரத்தோடு நிறைவு செய்ய போகிறீர்கள் என்றால் அந்த ஒரு ரூபாய் நாணயத்தை கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு வாரம் இந்த பரிகாரத்தை செய்யும் போதே உங்கள் வீட்டில் இருக்கும் பண கஷ்டத்திற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். ஒருவேளை உங்களுடைய தொழில் சரியாக நடக்கவில்லை என்றால், இதேபோல பரிகாரத்தை செய்து இந்த பட்டு துணியை அப்படியே கொண்டு போய் தொழில் செய்யும் இடத்தில் வைத்தாலும், அங்கே தொழிலில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தடைகள் எல்லாம் சரியாகி லாபம் மேலும் மேலும் பெருகும். இந்த பரிகாரத்தை இத்தனை வாரங்கள் தான் செய்ய வேண்டும் என்ற எந்த கணக்கும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: நமக்கெல்லாம் சொந்த வீடு வாங்கும் யோகமே இல்லை என்று சோர்ந்து விடாமல், இந்த தண்ணீரை தெளித்து வாருங்கள். சொந்த வீட்டில் வாழ யோகம் உங்களை தேடி வரும்.

தொடர்ந்து செய்து கொள்ளலாம். அல்லது 3 வாரம், 5 வாரம் என்று கணக்கு வைத்து இந்த பரிகாரத்தை செய்து முடித்துக் கொண்டாலும் நன்மையே நடக்கும். மிக மிக எளிமையான ஆன்மீகம் சார்ந்த தாந்திரீகம் இது. இறைவனை வேண்டி முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -