கழுத்தை நெரிக்கும் கடன் தீர செவ்வாய் ஹோரையில் இதை மட்டும் செஞ்சு பாருங்க! கோடி கோடியாய் கடன் இருந்தாலும் விரைவில் காணாமல் போகும்.

pachai-payaru-murugan
- Advertisement -

கோடி கோடியாய் கடன் இருந்தாலும் அதை அடைக்கக் கூடிய வல்லமை நம்மிடம் இருந்தால் மட்டுமே கடன் வாங்க வேண்டும். கடன் வாங்குவதற்கு முன்னரே நம்மால் அந்த கடனை நிச்சயமாக அடைக்க முடியுமா? என்பதை சிந்தித்தாலே பலரும் கடன் தொல்லையில் சிக்கி தவிக்க மாட்டோம். எப்படியாவது ஏதாவது செய்து அடைத்து விடலாம் என்ற குருட்டு நம்பிக்கையுடன் வாங்கும் கடன் சுமையாகி விடுகிறது.

இத்தகைய சுமையை இறக்கி வைப்பதற்கு சரியான நேரம் ‘செவ்வாய் ஹோரை’ ஆகும். இந்த செவ்வாய் ஹோரையில் செய்யக் கூடிய எளிய விஷயங்களால் அடங்காத கடன்கள் காணாமல் போகும். கடன் தீர செவ்வாய் ஹோரையில் செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் இனி நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

பொதுவாக முருகப்பெருமான் வழிபாடு தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு கடன் தொல்லை இருக்காது என்று நம்பிக்கை உண்டு. செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபடுபவர்களுக்கு பண ரீதியான பிரச்சினைகள் தீரும், வருமானம் அதிகரிக்கும், வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் முருகன் கோவிலுக்கு சென்று மனதார கடன் தீர வழிபட்டு வாருங்கள். செவ்வாய் ஹோரையில் முருக வழிபாடு செய்வதும் கடன் தீர வழி வகுக்கும்.

உங்களுடைய இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வத்தை செவ்வாய்க்கிழமை அன்று காலையில் ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலான காலகட்டத்தில் நன்கு சுத்தம் செய்து அலங்கரித்துக் கொள்ளுங்கள். பின்னர் சுவாமி படத்திற்கு முன்னர் பாசிப்பயறு மற்றும் வெல்லம் கலந்த பாயாசம் தயார் செய்து நைவேத்தியம் படையுங்கள்.

- Advertisement -

பின்னர் சுத்தமான விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி மனதார கடன் தீர வழிபடுங்கள், விரைவில் கடன் அடையும். செவ்வாய் ஹோரைக்கு மகத்துவமான சக்திகள் உண்டு. செவ்வாய்க்கிழமை பொதுவாக நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால் செவ்வாய் ஹோரையில் இது போன்ற பரிகாரங்கள் செய்யும் பொழுது கடன்கள் தீருவதற்கான வழிகள் பிறக்கும் என்கிற சாஸ்திர உண்மைகள் மறைந்து காணப்படுகிறது.

அந்த வகையில் இரண்டாவதாக செவ்வாய் ஹோரையில் மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரையில் இதே போல பாசிப்பயறு, வெல்லம் மற்றும் பச்சரிசி சேர்த்து பாயாசம் செய்து கொள்ளுங்கள். இதை பூஜை அறையில் இஷ்ட தெய்வத்திற்கு முன்பு படைத்து வழிபட்டு பின்னர் பசுமாடுக்கு தானம் செய்ய வேண்டும். இப்படி செய்து மனதார கடன் தீர வழிப்பட்டால் எல்லா தெய்வங்களுடைய ஆசிர்வாதமும், தேவாதி தேவர்களின் அருளும் கிடைக்கும், இதனால் கடன் தீரும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே:
தொழில் செய்யும் இடத்தில் இந்த 1 வார்த்தையை எழுதி வைத்து, அடிக்கடி பார்த்துக் கொண்டே இருங்கள். நஷ்டத்தில் போகும் தொழில் கூட நிறைய லாபம் தரும்.

பச்சரிசி, பச்சை பயிறு மற்றும் வெல்லம் கலந்த உணவை பசு மாட்டிற்கு கடன் வாங்கியவர்களின் கைகளால் தானம் கொடுத்து வர வேண்டும். தானம் கொடுத்த பின்பே அவர்கள் சாப்பிட வேண்டும். இது போல உண்ணா விரதம் இருந்து பசுவிற்கு இந்த தானம் செய்து வந்தால், நாள்பட்ட கடனும் அடையும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. நீங்களும் செவ்வாய் ஹோரையில் இந்த விஷயங்களை எல்லாம் செய்து பாருங்கள், உங்களுடைய கடனும் நிச்சயம் தீரும்.

- Advertisement -