மீளவே முடியாத கடன் தொல்லையில் இருந்து விரைவில் மீண்டு வர, சில்லறை காசுடன் இந்த பொருளையும் சேர்த்து குலதெய்வத்திடம் வேண்டி இதை யார் கையும் படாமல் வைத்து விடுங்கள். கடன் தீர சக்தி வாய்ந்த பரிகாரம்.

kadan theera
- Advertisement -

இந்த உலகில் சந்தோஷமாக வாழும் மனிதர் யார் என்றால் கடன் இல்லாத வாழ்க்கை வாழ்பவர்கள் தான். இந்த கடன் என்னும் கொடிய அரக்கனிடம் சிக்கி சின்னாபின்னமான குடும்பங்கள் ஏராளம். இதிகாசங்களில் கூட ராவணனை குறிப்பிடும் போது கடன் பட்ட நெஞ்சம் போல என்ற ஒரு வார்த்தையை சொல்லி அவரின் வேதனையை சொன்னார்கள் என்றால், கடனின் வேதனையை சொல்ல இதை விட ஒரு உதாரணம் தேவையில்லை. அத்தகைய பெரும் சுமையான கடனை தீர்க்க ஒரு எளிய பரிகார முறையை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

சில நேரங்களில் கடன் வாங்கும் போது நமக்கு ஏதோ ஒரு வகையில் பணம் வர வேண்டியது இருக்கும் அதை வைத்து திருப்பி அடைத்து விடலாம் என்று யோசித்து வாங்குவோம். அனால் நாம் நினைத்து போல இல்லாமல் அந்த பணத்தை திருப்பி தருவதற்கான வாய்ப்பே இல்லாமல் போகும். அதனால் தான் கடன் வாங்கவும் போதும் நேரம் காலம் பார்த்து வாங்க வேண்டும். அவசர தேவை என்று வரும் போது அப்படி நம்மால் யோசிக்க முடியாது அல்லவா. இப்போது எப்போது அப்படி வாங்கி அடைக்கவே முடியாமல் திணறும் கடன் தீர என்ன வழி என்று பார்ப்போம்.

- Advertisement -

கடன் தீர சில்லறை காசு பரிகாரம்:
இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் காலை ஏழு மணிக்குள்ளாக செய்து விட வேண்டும். அதற்கு காலையில் குளித்து முடித்த முதலில் பூஜை அறையில் விளக்கு ஏற்றிக் வைத்து விடுங்கள் . அதன் பின் ஒரு சிகப்பு துணியில் பத்து கரு மிளகு, அதில் கொஞ்சம் கொட்டைப்பாக்கு, கொஞ்சம் சில்லரை காசுகள் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து முடிச்சாக கட்டி விடுங்கள்.

இந்த முடிச்சை ஒரு மண்பானையில் போட்டு வைத்து விடுங்கள். இத்துடன் ஒரு பேப்பரில் நீங்கள் கடன் வாங்கிய நபரின் பெயர், கடன் தொகை இரண்டையும் எழுதி அதையும் இந்த குடுவையில் போட்டு விடுங்கள். இந்த கடன் விரைவில் அடைய வேண்டும் என்று உங்கள் குலதெய்வத்திடம் மனதார வேண்டிக் கொண்டு இந்த குடுவையை உங்கள் பூஜை அறையிலே வைத்து விடுங்கள்.இந்த குடுவையில் உங்களை தவிர வேறு யாருடையை கையும் படாமல் பார்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

தினமும் பூஜை செய்யும் போது இந்த குடுவைக்கு தீபாராதனை காட்டி கடன் விரைவில் அடைய வேண்டும் என வேண்டி கொள்ளுங்கள். இதன் பிறகு இந்த கடனை அடைக்க நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சியும் உங்களுக்கு கைகூடி கடன் விரைவில் அடையும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: செய்யும் பூஜைக்கு எந்த பலனும் இல்லையா? பூஜை அறையில் இந்த மாற்றங்களை எல்லாம் செய்து பாருங்கள். உங்கள் வேண்டுதல்கள் எல்லாம் உடனுக்குடன் நிறைவேற துவங்கும்.

உங்கள் கடன் முதுவதுமாக அடைந்த பிறகு குடுவையில் இருக்கும் சில்லறை காசை கோவில் உண்டியலில் போட்டு விடுங்கள். இதில் மீதமிருக்கும் கொட்டைப்பாக்கு, கருமிளகு, பேப்பர், குடுவை அனைத்தையும் ஓடும் நீரில் விட்டு விடுங்கள். எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் பலன் உண்டு. இந்த பரிகாரத்தையும் நம்பிக்கையுடன் செய்து கடன் இல்லாத வாழ்க்கையை வாழுங்கள்.

- Advertisement -