அடிக்கடி இந்த தண்ணீரை உங்கள் வீட்டில் தெளித்துக் கொண்டே இருந்தால் கோடி ரூபாய் கடனும் ஓடிப் போகும். கடன் பிரச்சனை இல்லாமல் நிம்மதியாக வாழ செலவே இல்லாத பரிகாரம்.

kadan
- Advertisement -

எவ்வளவுதான் சம்பாதித்தாலும் இந்த கடன் பிரச்சனையில் இருந்து மட்டும் நம்மால் தப்பிக்கவே முடியாது. சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் பணத்தையும் தாண்டி, கடன் வாங்கி செலவு செய்து கௌரவத்தை தேடுகின்ற எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள். ‘வட்டிக்கு கடன் வாங்கி, அட்டிகை செய்து போட்டுக் கொள்ளும்’ சூழ்நிலைதான் இன்று நிலவி வருகிறது. பேராசைப்பட்டு செலவு செய்வதை தடுக்க, அதை சுட்டிக்காட்ட இந்த பழமொழியை பெரியவர்கள் சொல்லுவார்கள். வட்டிக்கு, கடனாக காசை வாங்கி, அட்டிகை செய்து போட்டுக் கொண்டுதான் திருமணம் காதுகுத்து போன்ற விசேஷ காரியங்களுக்கு செல்ல வேண்டுமா. அவ்வளவு ஆடம்பர செலவை கடன் வாங்கி செய்வது குடும்பத்திற்கு நல்லதா. நிச்சயம் கிடையாது. அப்படி தான் ஒவ்வொரு விஷயமும்.

கடன் வாங்கி நாம் எந்த வேலையையும் செய்யக்கூடாது. நம் கையில் இருக்கும் பணத்துக்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கை சூழ்நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். கடவுள் நமக்கு கொடுத்தது இதுதான் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். கைநீட்டி கடன் வாங்கவே வாங்காதீங்க. அதுவும் அனாவசிய செலவு, ஆடம்பர செலவுக்காக. சரி ஒரு அவசர தேவை உயிர் போகும் சூழ்நிலை, மருத்துவ செலவு என்றால் கடன் வாங்கி தான் ஆக வேண்டும். சில பேர் வீடு கட்ட கடன் வாங்குறாங்க. சில பேர் கல்யாணம் பண்ணிக்க கடன் வாங்குறாங்க.

- Advertisement -

என்னதான் ஒரு காரணம் சொன்னாலும், கடன் வாங்கி கல்யாணம் செய்வதும் தவறுதான். கடன் வாங்கி வீடு கட்டுவதும் தவறுதான். இருந்தாலும் இன்றைய சூழ்நிலை லோன் என்ற ஒன்று நம்மை வளைத்து கட்டிப்போட்டு இருக்கின்றது.

லோன் என்றாலும் அது கடந்தானே. சரிங்க எதுவாக இருக்கட்டும் நம் வீட்டில் இருக்கும் வறுமையை விரட்டி அடிக்க, கடன் பிரச்சனையை சரி செய்ய, செலவே இல்லாமல் இன்று நாம் ஒரு பரிகாரத்தை பார்க்க போகின்றோம். கடன் வாங்கி பரிகாரம் செய்தால் அதுவும் தவறுதான் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம்.

- Advertisement -

கடன் தீர செலவில்லாத பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை வீடு முழுவதையும் சுத்தம் செய்துவிட்டு, கட்டாயம் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். காலை நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ சுத்தமான கோமியத்தில் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடியை போட்டு அந்த கோமியத்தை உங்கள் வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.

வீட்டு பக்கத்தில் மாடு இருந்தால் அந்த மாட்டு சொந்தக்காரரிடம் சொல்லிவிடுங்கள். கோமியம் தேவை என்று. மாடு காலையில் முதன்முறையாக சிறுநீர் கழிக்கும் அதைத்தான் கோமியம் என்று சொல்லுவார்கள். அடுத்தடுத்த முறை போகக்கூடிய சிறுநீரை பயன்படுத்தினால் முழு பலன் கிடைக்காது. வீட்டை சுத்தம் செய்துவிட்டு வீட்டு மூளை முடுக்குகளில் இந்த கோமியத்தை தெளிக்கலாம். பூஜை அறை முதல் சமையல் வரை இந்த கோமியத்தை தெளிக்கலாம் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: கடலளவு கடனும் காணாமல் போக இன்று ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையுடன் கூடிய வளர்பிறை அஷ்டமியில் அம்பிகைக்கு இதை தவறாமல் செய்து விடுங்கள்.

ஒரு வெற்றிலை, மா இலையை வைத்து இந்த கோமியத்தை தெளிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் வீட்டில் விளக்கு ஏற்றி மணக்க மணக்க சாம்பிராணி தூபம் போட்டு இந்த கோமியத்தை தெளித்து வந்தால் வீட்டை பிடித்த தரித்திரம் தானாக விலகும். வீட்டிற்குள் மகாலட்சுமி கடாட்சம் நுழையும். உங்கள் வீட்டில் இருக்கும் கடன் பிரச்சனை எல்லாம் படிப்படியாக குறைவதற்கு இந்த எளிமையான பரிகாரம் ஒன்றே போதும். உங்க வீட்டு பக்கத்தில் மாடு இல்லை என்றால் கோமியத்தை காசு கொடுத்து கடையில் தான் வாங்க வேண்டும். வேறு வழியே கிடையாது. எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -