தினமும் குளிக்கும் நீரில் இந்த இரண்டு பொருட்களை கலந்து குளித்தால், நமக்கு ஏற்பட்டிருக்கும் பணத்தடைகள் அனைத்தும் விலகி, கையில் பணம் தாராளமாக புழங்க ஆரம்பிக்கும்.

bath
- Advertisement -

மனிதனின் வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருக்கும். யாருடைய வாழ்க்கையிலும் ஏற்றம் மட்டும் நிலைத்திருக்காது. அதேபோல் இறக்கம் மட்டுமே இருக்காது. ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஏற்றவும் இருக்கும், இறக்கமும் இருக்கும். சிலர் நாம் எவ்வளவுதான் நல்லது செய்தாலும் நமக்கு நல்லது நடக்கவில்லையே என்று புலம்புவார்கள். அதற்கு காரணம் அவர்கள் முற்பிறவியில் செய்த பாவமே. அந்த பாவத்தால் பல தடைகள் ஏற்பட்டு அவர்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் குளிக்கும் பொழுது எந்த பொருட்களை உபயோகப்படுத்தினால் அவர்களின் பாவங்கள் நீங்கி பணம் தாராளமாக வந்து சேரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவரின் வாழ்வில் கஷ்ட காலம் ஏற்படுகின்றது என்றால் முதலில் பாதிக்கப்படக் கூடியது அவருடைய பொருளாதாரமாக தான் இருக்கும். அவ்வாறு அவருடைய பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய அந்த மாற்றங்களை சரி செய்வதற்கு முதலில் தங்களுடைய பாவத்தை நிவர்த்தி செய்ய வேண்டும். அதை செய்தாலே அவர்களுடைய பொருளாதார தடைகள் அனைத்தும் விலகி அதிர்ஷ்டம் அவர்களை தேடி வர ஆரம்பித்து விடும்.

- Advertisement -

நாம் அனைவரும் அன்றாடம் செய்யும் முக்கியமான வேலைகளில் ஒன்று தான் குளிப்பது. இதில் பல சாஸ்திரங்கள் இருக்கின்றன. எந்த திசை நோக்கி குளிக்க வேண்டும்? எப்படி குளிக்க வேண்டும்? குளிக்கும்போது எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்? என்றெல்லாம் பல சாஸ்திரங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் தாண்டி நமக்கு மிகவும் எளிமையாக கிடைக்கக் கூடிய இரண்டு பொருட்களை பயன்படுத்தி நாம் குளித்தோம் என்றால் நம்முடைய துரதிஷ்டம் அனைத்தும் நீங்கி அதிர்ஷ்டம் பெருகி பணம் என்றும் நம் கையில் இருக்கும் என்றே கூறலாம்.

இதற்கு நமக்கு தேவைப்படும் இரண்டு பொருட்களில் ஒன்று வெட்டிவேர், மற்றொன்று பச்சை கற்பூரம். இவை இரண்டையும் தனித்தனியாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடிகளை ஒரு சிட்டிகை எடுத்து குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை நாம் மேற்கொள்ளும் நேரம் ஆனது விடியற்காலை நேரமாக இருக்க வேண்டும். அதாவது ஆறு மணிக்கு முன்பாகவே குளித்து விட வேண்டும்.

- Advertisement -

ஒரு சிலர் மாலை நேரங்களில் குளிப்பார்கள். அந்த சமயங்களில் இந்த பரிகாரத்தை செய்வதை தவிர்த்து விட வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து குளிக்கும் பொழுது இந்த பொடிகளில் ஒரு சிட்டிகையை எடுத்து குளிக்கும் நீரில் கலந்து உடல் முழுவதும் ஊற்றி விட்டு சிறிது நேரம் அப்படியே இருக்க வேண்டும். பிறகு நாம் சாதாரண தண்ணீரில் குளிக்கலாம் அதில் எந்த தவறும் இல்லை.

இதையும் படிக்கலாமே: ஒரே நாளில் வியாபாரம் ஓவென்று சூடு பிடித்து கல்லாப்பெட்டி பணத்தாலே நிரம்பி வழிய ஒரே ஒரு அரச இலை இப்படி செய்து உங்க கல்லாப்பெட்டியில் வைத்து விடுங்கள் போதும்.

இவ்வாறு செய்வதால் நமக்கு இருக்கும் தோஷங்களும், துரதஷ்டங்களும், பாவங்களும் நம்மை விட்டு நீங்கும். அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். பணத்தடைகள் நீங்கி பணவரவு அதிகரிக்கும்.

- Advertisement -