கடன் தீர நெல்லிமர வழிபாடு

kadan theera
- Advertisement -

ஒரு மனிதனுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சனைகளில் கடன் பிரச்சனை எத்தனை கொடுமையானது என்று யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கடன் ஒருவருடைய வாழ்க்கையில் புகுந்து விட்டால் அவருடைய வாழ்க்கை அவர் கையில் இல்லை என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு கடன்பாடாய் படுத்தும்.

அப்பேர்ப்பட்ட கடன் தொல்லையில் இருந்து வெளி வந்து நிம்மதியாக வாழவும் மேலும் செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ளவும் விருட்சம் வழிபாடு துணை புரிகிறது என்று சொல்லப்படுகிறது. அது என்ன விருட்சம் அதை எப்படி வணங்க வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் தீர நெல்லிமர வழிபாடு

நம்முடைய வழிபாடுகளில் இயற்கை வணங்கும் முறையும் கலந்தே இருக்கிறது. ஒவ்வொரு வழிபாட்டின் பின்னணியிலும் இது கலந்து இருக்கிறது என்பதை நாம் சற்று கூர்ந்து கவனித்தால் தெரியும். அந்த வகையில் விருட்சங்களை வழிபடுவது நம் காலம் தொட்டு செய்து வரும் வழிபாடு தான். அதிலும் பழமை வாய்ந்த விருட்சங்கள் சென்றால் அதற்கான பலன்களே தனி.

இந்த விருட்ச வழிபாட்டு பலனும் விருட்சங்களின் பயனையும் புகழ் பெற்ற ஆலயங்களில் உள்ள தலவிருட்சங்களை தெரிந்து கொண்டாலே அதன் உண்மை தம்மை புலப்படும். அதுமட்டுமின்றி சில விருட்சங்கள் தெய்வத்தின் சொரூபமாகவே கருதப்படுகிறது. அந்த விருட்சங்களை வணங்குவது அந்த தெய்வத்தையே வணங்குவதற்கு ஈடாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த மரத்தை வழிபடுவதன் மூலம் கடன்கள் தீர்ந்து விடுவதோடு செல்வ வளத்தையும் பெருக்கிக் கொள்ளலாம். அந்த விருட்சம் வேறொன்றுமில்லை நெல்லி மரம் தான். இந்த நெல்லி மரத்தை எப்படி வழிபட்டால் நம்முடைய கடன் தீரும் என்று பார்க்கலாம்.

நெல்லி மரமானது பெருமாள் வாசம் செய்யும் இடமாக கருதப்படுகிறது. நெல்லி மரத்தை வழிபடுவது பெருமாளையே வழிபடுவதாக அர்த்தம். அது மட்டும் இன்றி இதன் கனி குபேரருக்கு உகந்தது. இத்தனை சிறப்பு அம்சங்கள் பொருந்திய இந்த மரத்தடியில் 21 நாட்கள் நாம் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த மரத்தடியில் அகல் தீபத்திற்கு பதிலாக நெல்லி தீபமே ஏற்றி வழிபட்டால் அது இன்னும் பெரும் பலனை பெற்று தரும். இந்த தீபத்தை ஏற்றும் நேரத்தில் ஊதுபத்தி கற்பூரம் போன்றவற்றை மரத்திற்கு காட்டி மரத்தை மூன்று முறை சுற்றிவர வேண்டும். அப்படி சுற்றி வரும் போது உங்களுடைய கடன் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த மரத்தை வழிபாடு செய்தாலே பெருமாள், குபேரர், மகாலட்சுமி தாயார் என மூன்று பேரின் அருளையும் சேர்த்து பெறலாம். செல்வாதிபதிகளான இவர்கள் அருளைப் பெற்றால் செல்வ வளத்திற்கு ஏது குறை அதன் பிறகு கடன் தொல்லை உங்கள் வாழ்க்கையில் இருக்காது.

இதையும் படிக்கலாமே: ஜென்ம தரித்திரம் நீங்க தீபம்

இந்த நெல்லி மர தீப வழிபாடு மிக மிக எளிமையான ஒரு வழிப்பாட்டு முறை தான். ஆனால் இதன் பலவிதமான நன்மைகளை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி எப்பேர்பட்ட பிரச்சனைகளையும் கூட இந்த வழிபாடு தீர்க்கும் என்று நம்பப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த நெல்லிமர தீப வழிபாடு செய்து பலன் பெறலாம்.

- Advertisement -