கடனை கரைக்கும் கல்கண்டு பரிகாரம்.

sukkiran
- Advertisement -

காலத்திற்கும் கடன் இல்லாமல் வாழ வேண்டும். கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும். தேவைக்கு ஏற்ப பணசுழற்சி இருந்து கொண்டே இருக்கணும், என்பவர்கள் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பார்க்கலாம். முக்கியமான வேலைக்கு போறீங்க. அந்த வேலையில் எந்த பிரச்சனையும் உங்களுக்கு வரக்கூடாது என்றால், இந்த பரிகாரம் உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.

உதாரணத்திற்கு கடன் வாங்க போறீங்க, கடன் கொடுக்க போறீங்க, பேங்கில் கடன் கேட்க போறீங்க, இப்படி பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக முடிய, பணத்தின் மூலம் உங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, செய்ய வேண்டிய கல்கண்டு பரிகாரம்.

- Advertisement -

பண பிரச்சனையை தீர்க்கும் கல்கண்டு பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு ஒரு கட்டி  கல்கண்டு தேவை. டைமண்ட் கல்கண்டு பயன்படுத்தினாலும் சரி, அல்லது வெள்ளை நிறத்தில் கட்டி கட்டியாக கொஞ்சம் பெருசாக கல்கண்டு இருக்கும். அதை பயன்படுத்தினாலும் சரி, அது உங்களுடைய விருப்பம். ஒரு கல்கண்டு கட்டியை எடுத்துக்கோங்க. சின்னதா வெள்ளை துணியில் வைத்து முடிச்சு போட்டுக்கோங்க.

இந்த கல்கண்டை உங்கள் வீட்டின் மகாலட்சுமி தேவியின் பாதங்களில் வைக்க வேண்டும். சுக்கிர பகவான் திரு உருவப்படம் பெரும்பாலும் நம்முடைய வீட்டில் இருக்காது. அதனால் மகாலட்சுமியின் பாதங்களில் இந்த கல்கண்டை வைத்து எடுத்து, உள்ளங்கையில் வச்சுக்கோங்க. இரண்டு உள்ளம் கைக்கு நடுவே இந்த கல்கண்டு முடிச்சு இருக்கும்.

- Advertisement -

சுக்கிர பகவானினே, மகாலட்சுமி தாயே, எனக்கு வெற்றி கொடு, தேவைக்கு ஏற்ப பணத்தை கொடு. இந்த காரியம் எனக்கு வெற்றியாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் கடன் வாங்க போறீங்களா, கடனை கொடுக்க போறீங்களா, அல்லது ஏதாவது பணம் உங்களுக்கு வரவேண்டியதாக இருக்குதா, அல்லது தொழில் முயற்சியில் வெற்றி காண வேண்டுமா எந்த விஷயமாக இருந்தாலும் சரி, உங்களுடைய தேவைக்கு ஏற்ப அந்த வேண்டுதலை வைத்துவிட்டு கையில் இருக்கும் அந்த வெள்ளை கல்கண்டை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள்.

பாக்கெட்டில் வச்சுக்கலாம். பர்ஸில் வைக்கலாம். ஹேண்ட் பேக்கில் இப்படி ஏதாவது ஒரு இடத்தில் உங்களோடு அந்த கல்கண்டு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அந்த வேலையை போய் வெற்றிகரமாக முடித்து வந்துவிட்டு, வீட்டிற்கு வந்த பிறகு, அந்த வெள்ளை முடிச்சுக்கு உள்ளே இருக்கும் கல்கண்டை எடுத்து செடி கொடிகளுக்கு கீழே போட்டு விடுங்கள்.

- Advertisement -

எறும்புகள் சின்ன சின்ன பூச்சிகள் வந்து சாப்பிட்டுக் கொள்ளும். முக்கியமான வேலை இருக்கும் சமயத்தில் மட்டும் தேவை என்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். தினமும் கடைக்கு போறீங்க. வியாபாரம் நல்லபடியா நடக்கணும் என்று வேண்டி தினமும் இந்த பரிகாரத்தை செய்தாலும் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: சூரியனின் பார்வையால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

இப்படி எந்த பணக்கஷ்டத்தை நீங்கள் தீர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த பணக்கஷ்டத்தை தீர்க்க இந்த கல்கண்டு போதும். முயற்சி செய்து பாருங்களேன். பத்து ரூபாய்க்கு கல்கண்டு வாங்கினால் கூட பத்து நாள் இந்த பரிகாரத்தை செய்யலாம். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -