நிலை வாசலில் இந்த விளக்கை ஏற்றினால், உங்கள் வீட்டிற்குள் பண பிரச்சனை, கடன் பிரச்சனை நுழையவே நுழையாது.

vasal
- Advertisement -

எல்லோருக்கும் வாழ்க்கையில் கோடீஸ்வரர் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நாம் எல்லோரும் கஷ்டப்படுவது எதற்கு. அன்றாட உணவிற்கும், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் தேவையான பணம். அதாவது சீரான நல்ல வருமானம், கடன் இல்லாத வாழ்க்கை, இவைதான் நிம்மதியை கொடுக்கும். நிறைய பேருக்கு இந்த அடிப்படையான சந்தோஷம் கூட கிடைப்பது கிடையாது. அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள கூட முடியாமல், கடன் வாங்கி திருப்பிக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருவார்கள். நீங்கள் ரொம்பவும் பணக்கஷ்டத்தில் இருக்கிறீர்களா? வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் மேலும் மேலும் கடன் வாங்கி கஷ்டப்பட்டால் இந்த பதிவு உங்களுக்காக மட்டும்.

பண கஷ்டத்தை தீர்க்கும் விளக்கு:
இந்த விளக்கை கட்டாயம் வீட்டில் இருக்கும் பெண்கள் கையால்தான் ஏற்ற வேண்டும். காலை அல்லது மாலை உங்கள் சகோதரியும். காலை 6.00 மணிக்கு இந்த விளக்கை வீட்டில் ஏற்றலாம். மாலை 6:00 மணிக்கு இந்த விளக்கை ஏற்றலாம். 2 மண் அகல் விளக்குகளை எடுத்து அதில் நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். நல்லெண்ணெய் ஊற்றக்கூடாது. நெய் தான் பணக்கஷ்டத்தையும் கடன் சுமையையும் குறைக்கும்.

- Advertisement -

முன்கூட்டியே பஞ்சதிரியை மஞ்சள் தண்ணீரில் நனைத்து நிழலிலேயே காய வைத்து தயார் செய்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். அந்த மஞ்சள் திரியை, தயார் செய்து வைத்திருக்கும் நெய் விளக்கில் போட்டு ஏற்றி நிலை வாசல் படியில் வைத்து விட வேண்டும். (மஞ்சளில் நனைத்த திதி தான் இந்த விளக்கிற்கு ரொம்ப ரொம்ப முக்கியம்).

நிலைவாசல் படியில் தான் நம்முடைய குலதெய்வம் வாஸ்து தேவதைகள் எல்லாம் தங்கி நம்மை வாழ்த்தும் என்று சொல்லுவார்கள். அந்த நிலை வாசல் படியில் இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, இந்த வீட்டு வாசலுக்குள் மகாலட்சுமி யோடு சேர்த்து அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை வைக்க வேண்டும். கடன் சுமை வீட்டிற்குள் நுழைய கூடாது என்ற வேண்டுதலை நிலை வாசல் படியில் வையுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு வீட்டிற்குள் வந்து பூஜை அறையில் எப்போதும் போல விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வ வழிபாட்டை செய்யுங்கள். குலதெய்வத்தை மனதார நினைத்து பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி, குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மீண்டும் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். தினமும் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயமாக உங்கள் வீட்டிற்குள் பண பிரச்சனை இருக்கவே இருக்காது.

சில பேரால் தினமும் இந்த வழிபாட்டை செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம். அதுவும் முடியாது என்பவர்கள் கட்டாயம் வெள்ளிக்கிழமை மட்டுமாவது இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். ரொம்பவும் தாங்க முடியாத கஷ்டம் துயரங்கள் இருக்கிறது என்பவர்கள் மட்டும் தொடர்ந்து ஒரு 48 நாட்கள் இந்த விளக்கை ஏற்றி வந்தால் நல்ல பலனை கை மேல் பெறலாம்.

இதையும் படிக்கலாமே: மணி பர்ஸ் வாங்கும் போது இப்படி வாங்கி பணம் வைத்து பாருங்கள், அள்ள அள்ள குறையாமல் பணம் பெருகிக் கொண்டே இருக்கும். பர்சில் எப்போதும் பணம் பெருக சூட்சம ரகசியம்.

வெள்ளிக்கிழமை கூட எங்களால் இந்த வழிபாட்டை செய்வதற்கு நேரம் இல்லை என்பவர்கள் மாதத்தில் ஒரு நாள் பௌர்ணமி தினத்தில் இந்த மஞ்சள் திரி போட்டு விளக்கு ஏற்றி வைப்பது சிறப்பான பலனை கொடுக்கும். பணக்கஷ்டத்தை தீர்ப்பதற்கு மிக மிக எளிமையான ஆன்மீகம் சொல்லக்கூடிய பரிகாரம் இது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -