யோகம் அதிகரிக்க பரிகாரம்

nilaivasal yogam
- Advertisement -

ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் யோகங்கள் என்பது இருக்கும். அந்த யோகத்தின் படி அவர்களுடைய வாழ்க்கையில் நன்மைகள் நடைபெறும். இது ஜாதக ரீதியாக கூறப்படும் ஒன்று. அப்படி யோகங்கள் இருந்தும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தாலும், யோகமே இல்லை என்றாலும் எந்த எண்ணில் பிறந்தவர்கள் எந்த பொருளை தங்களுடைய நிலை வாசலில் வைத்தால் யோகத்தை பெற முடியும் அல்லது யோகத்தை அதிகரிக்க முடியும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஜாதகப்படி பல யோகங்கள் இருக்கின்றன. அந்த யோகங்கள் முறையாக நமக்கு கிடைக்கிறதா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை என்று தான் கூற வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் நம்முடைய கர்ம வினைகளாலும் நமக்கு யோகங்கள் கிடைப்பது தடைப்படும். இப்படி தடைப்பட்ட யோகத்தை பெறுவதற்கு சில சூட்சமமான பொருட்கள் நமக்கு உதவி செய்யும். அந்த பொருட்களை நம்முடனோ அல்லது நம் வீட்டின் நிலை வாசலிலோ வைப்பதன் மூலம் தடைப்பட்ட யோகங்கள் தடையில்லாமல் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் தங்கள் பர்சிலும், நிலை வாசலிலும் மஞ்சள் நிற துணியில் செம்பருத்தி வேரை வைத்து கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் வெள்ளருக்கு வேரை மஞ்சள் துணியில் கட்டி நிலை வாசலில் கட்ட வேண்டும். தங்களுடனும் வைத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் ஆலமரம் அல்லது மாமர பேரை மஞ்சள் துணியில் கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். வேர் கிடைக்காதவர்கள் ஆலமர விழுதை வைத்துக் கொள்ளலாம். அதேபோல் நிலை வாசலில் ஆலமர இலைகளை தோரணமாக கட்டுவதன் மூலமும் யோகம் உண்டாகும். நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் நிலைவாசலில் கற்றாழையை கட்டி விட வேண்டும்.

- Advertisement -

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் ஒரு சிவப்பு நிற துணியில் ஒரு கைப்பிடி அளவு பச்சை பயிரை வைத்து அதனுடன் ஒரு தேங்காயை வைத்து கட்டி நிலை வாசலில் கட்டிவிட வேண்டும். இவர்கள் தங்களுடன் கருந்துளசியை வைத்துக் கொள்வதன் மூலம் யோகம் உண்டாகும். ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் நிறைவாசலில் விரலி மஞ்சள் கட்டி விட வேண்டும். விரலி மஞ்சளை தங்களுடன் எப்பொழுதும் இருப்பது போல் பார்த்துக் கொள்ள யோகம் உண்டாகும்.

ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் நவதானியங்களை பல வண்ண துணியில் கட்டி நிலை வாசலில் கட்டிவிட அவர்களுக்கு யோகம் உண்டாகும். எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் வன்னி மர வேரை மஞ்சள் துணியில் கட்டி நிலை வாசலில் கட்ட வேண்டும். வன்னி மர வேர் கிடைக்காத பட்சத்தில் கருவேப்பிலை வேரை உபயோகப்படுத்தலாம்.

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் எலுமிச்சம் பழத்தை நிலை வாசலில் வைக்க வேண்டும் அல்லது பைரவர் படத்தை வைப்பதன் மூலமும் அவர்களுக்கு யோகம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: குரு அருள் பெற உதவும் தீபம்
இந்த முறையில் பரிகாரம் செய்து நமக்கு இருக்கக்கூடிய யோகத்தை அதிகரித்து வாழ்க்கையில் வெற்றிகளை பெறுவோம்.

- Advertisement -