உங்களால் தீர்க்கவே முடியாது என்று நினைத்த பிரச்சனையையும், மீளவே முடியாத கடன் தொல்லையையும் ஒரே நேரத்தில் சரி செய்யும் கைப்பிடி உப்பு பரிகாரம்.

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் பிரச்சனை இல்லாத மனிதனையும், கடன் வாங்காத மனிதரையும் பார்க்கவே முடியாது. பலர் கடன் வாங்கிய பிறகு அதை எப்படி கட்டுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருப்பார்கள், அதே போல் தான் சிலர் பிரச்சனைகளில் சமாளிக்க முடியாமல் பிரச்சனையிலேயே மூழ்கி விடுவார்கள். இப்படி தவித்து கொண்டே இருந்தால் அதற்கான தீர்வு கிடைத்து விடாது. அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை பற்றி நாம் தான்சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திக்கும் போது அந்த சிந்தனையும், எண்ணங்களும் நமக்கு உறுதுணையாக இருப்பதற்காக தான் சில பரிகாரங்களை மேற்கொள்கிறோம் அந்த வகையில் உங்கள் பிரச்சினையை நீங்களே தீர்க்க இந்த கைப்பிடி உப்பு பரிகாரம் மிகவும் பலன் அளிக்க கூடியதாக இருக்கும்.

மகாலட்சுமி தாயானவள் கடலிலே தோன்றியவள் அந்த கடலிலே தோன்றியது தான் இந்த உப்பும், தான் தோன்றிய இடத்தில் தோன்றியதாலே இந்த உப்பு மகாலட்சுமியின் அம்சமாகவே இன்று வரை போற்றப்படுகிறது. அத்தகைய சக்தி வாய்ந்த இந்த உப்பை வைத்து பரிகாரத்தை மேற்கொள்ளும் போது உங்களுக்கான பிரச்சினையை தீர்க்கும் ஆற்றலை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், கடனை விரைவில் அடைக்கும் யோகத்தையும் இந்த கைப்பிடி உப்பு உங்களுக்கு செய்து கொடுக்கும். அது எப்படி என்பதை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருள்கள் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு,ஒரு வெள்ளை தாள் இவை இரண்டும் தான் உங்கள் பிரச்சனைகளை நீங்களே தீர்த்துக் கொள்ள உங்களுக்கு உறுதுணையாக இருக்க போகும் பொருள்.

இந்த பரிகாரத்திற்கு நீங்கள் உங்கள் பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு சாமி படத்தின் முன் அமர்ந்து கொண்டு வெள்ளை பேப்பரை உங்கள் மடி மீது வைத்துக் கொள்ளுங்கள் . பிறகு உள்ளங்கை இரண்டிலும் கல் உப்பை எடுத்து கைகளை மடித்து இந்த வெள்ளை காகிதத்தின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் விரல்கள் வானத்தை நோக்கி பார்த்தவாறு இருக்க வேண்டும். விரல்கள் அனைத்திலும் இந்த கல்லுப்பு பட வேண்டும் அந்த அளவிற்கு உங்கள் கையில் கல் உப்பு இருக்க வேண்டும். இப்போது உங்களின் குல தெய்வத்தை மனதில் நினைத்து கொண்டு, நான் இந்த பிரச்சனையில் உள்ளேன், இதை தீர்க்கும் ஆற்றல் என்னிடம் உள்ளது. இதை நான் நிச்சயமாக தீர்த்து விடுவேன். என்றும் அதே போல நான் இந்த கடனில் உள்ளேன் அதை நான் சீக்கிரம் அடைத்து விடுவேன் என்றும், உங்கள் பிரச்சனைகளை நீங்களே தீர்த்துக் கொள்வதாக கூற வேண்டும்.

- Advertisement -

இப்படி பத்து முறை திரும்பத் திரும்ப இதையே கூறிக் கொண்டு இருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து பத்து நாள் இதே போல் செய்து வந்தால் நிச்சயம் பத்து நாள் முடிவதற்குள்ளாகவே உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்க்கான வலிமையும், ஆற்றலையும் தருவதோடு இல்லாமல் உங்கள் பிரச்னைதீர நிச்சயம் வழி பிறக்கும். பூஜை முடிந்தவுடன் இந்த உப்பை அந்த வெள்ளைத் தாளில் கொட்டி எடுத்துக் உங்கள் வீட்டு சிங்கில் கொட்டி தண்ணீரை திறந்து விடுங்கள். உப்பு முழுவதுமாக கரைந்து செல்லும் வரை தண்ணீரை ஊற்றுங்கள். உங்கள் கைகளிலும் இந்த உப்பு இருக்க கூடாது. அதன் பிறகு இந்த வெள்ளைத்தாளை குப்பை தொட்டியில் போட்டு விடுங்கள். தினமும் இதே போல் புது வெள்ளை தாள், புது கல் உப்பு வைத்து பத்து நாட்கள் தொடர்ந்து இந்த பரிகாரம் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வசிய பொருத்தமே இல்லாமல் திருமண வாழ்க்கை கசந்து போய் விட்டதா? கணவன் மனைவிக்குள் ஒற்றுமையை அதிகரிக்க இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொண்டாலே போதும்.

பிரச்சனையை தீர்க்க முடியாத காரணத்தினால் தான் பரிகாரத்தையே நாடுகிறோம். ஆனால் இந்த பரிகாரத்தின் மூலம் நம் பிரச்சினையை நாமே தீர்த்து கொள்ளும் ஆற்றல் நமக்கு கிடைக்க கூடிய சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு. இத்தகைய ஆற்றல் மிக்க பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து உங்களின் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் மீண்டு வாருங்கள்.

- Advertisement -