வசிய பொருத்தமே இல்லாமல் திருமண வாழ்க்கை கசந்து போய் விட்டதா? கணவன் மனைவிக்குள் ஒற்றுமையை அதிகரிக்க இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொண்டாலே போதும்.

fight
- Advertisement -

ஆணிற்கும் பெண்ணிற்கும் ஜாதகம் பார்ப்பது திருமணம் செய்து வைப்பது காலம் காலமாக பாரம்பரியமாக நாம் பின்பற்றக்கூடிய ஒரு வழக்கம். அந்த ஜாதக பொருத்தத்தில் வசிய பொருத்தம் என்ற ஒன்று சில பேருக்கு பொருந்தாமல் இருக்கும். அப்படி இருக்கும் போது ஜோதிட்படி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது. அப்படி வசிய பொருத்தம் இல்லாமல் ஒரு ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணையும் போது, அவர்களுடைய வாழ்க்கை கசந்து போக தான் செய்யும்.

ஆனால் இன்றைய சூழ்நிலை வேறு. ஜாதக பொருத்தம் பார்க்காமல் மனப்பொருத்தம் பார்த்து விரும்பி திருமணம் செய்து கொள்ளக்கூடிய நிறைய பேர் தங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தி வருகிறார்கள். அது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பாசத்தில் புரிந்து நடந்து கொள்வது. அது வேறு. அதை நாம் கொண்டு வந்து இங்கே சேர்க்க வேண்டாம். ஆனால் சில சமயம் காதல் திருமணமும் தோல்வியில் முடிவதுண்டு. பத்து பொருத்தமும் பொருந்தி இருந்தாலும் சரி, பெரியவர்களால் நிச்சயம் படுத்தப்பட்ட திருமணமும் தோல்வியில் முடிகின்றது.

- Advertisement -

திருமணம் நடந்த மூன்றே மாதத்தில் பிரிந்த கணவன் மனைவியை எல்லாம் கூட நாம் பார்த்து இருக்கின்றோம். வசியம் என்பது தவறான வார்த்தை அல்ல. ஒருவர் மேல் மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய ஈர்ப்பு. புரிதல், இந்த ஈர்ப்பு இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. இந்த வசிய பொருத்தம் இல்லாத கணவன் மனைவிக்குள், வசிய தன்மையை கொண்டு வருவது எப்படி. எப்போதுமே எலியும் பூனையுமாக சண்டை போட்டு கொண்டே இருக்கும் வாழ்க்கைத் துணையை அன்போடு மாற்றுவது எப்படி, என்பதற்காக ஒரு சின்ன தாந்திரீக குறிப்பை தான் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலனை பெறலாம்.

இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள் வசம்பு. பேரம் பேசாமல் நாட்டு மருந்து கடைகளில் இதை வாங்கிக் கொள்ளுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு, இந்த வசம்பை ஏற்றி வைத்திருக்கும் விளக்கு நெருப்பில் காண்பியுங்கள். வசம்பு கருகி விடும். அந்த கருகிய வசம்பில் ஒரு சொட்டு நெய்விட்டு, உள்ளங்கையில் குழைத்தால் கருப்பு நிறத்தில் மை நமக்கு கிடைக்கும். இந்த மையை உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரைச் சொல்லி உங்கள் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்படி கணவரும் இந்த பரிகாரத்தை செய்து நெற்றியில் மையை வைத்துக் கொள்ளலாம். மனைவியும் இந்த பரிகாரத்தை செய்து நெற்றியில் மையை வைத்துக் கொள்ளலாம். நீங்கள் மனைவியாக இருந்து உங்கள் கணவர் உங்களை எப்போதுமே திட்டிக் கொண்டே இருக்கிறார் என்றால், தொடர்ந்து 48 நாள் இந்த பரிகாரத்தை செய்து வாருங்களேன். உங்களுடைய கணவரின் நடவடிக்கையில் மாற்றம் தெரியும். உங்கள் கணவர் தானாகவே உங்கள் மீது இருந்த வெறுப்பிலிருந்து வெளிவந்து, உங்கள் மீது தானாக பாசமாக நடந்து கொள்வார். இதே போல தான் ஆண்களும். சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் மனைவியை சரி செய்ய இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இழந்த பணம் நகை சொத்துக்கள் அனைத்தையும் திரும்ப மீட்டு தரும் சக்தி வாய்ந்த தென்னை மர பரிகாரம்.

வசிய பொருத்தம் இல்லாத கணவன் மனைவிக்குள் ஒரு வசியத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி இந்த வசம்புக்கு உண்டு. திருமணம் ஆகி விவாகரத்து நடந்து பிரிந்து இருக்கின்றோம், அல்லது இன்னும் சில நாட்களில் விவாகரத்து கிடைக்கப் போகிறது, கோர்ட் கேஸ் வழக்குகள் நடந்து கொண்டிருக்கிறது என்பவர்கள் கூட சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை மனதிற்குள் இருந்தால், இந்த பரிகாரத்தை செய்து வரும் போது நிச்சயமாக உங்களுக்கு நல்லது நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த சின்ன பரிகாரத்தை செய்து பாருங்கள். இல்லற வாழ்க்கை இனிமையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -