கஷ்டமே இல்லாத கலகலப்பான குடும்பத்தை பெற, 1 கைப்பிடி கல்லுப்பை வீட்டில் இப்படி வைத்தாலே போதும். எத்தனை காலம் கடந்தாலும் சந்தோஷம் உங்கள் வீட்டில் நிலையாக குடியிருக்கும்.

- Advertisement -

நாமும் நம் வீட்டில் இருப்பவர்களும் நினைக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்ன. நம்முடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களுக்குள் சண்டை சச்சரவு வரக்கூடாது. பிரிவு ஏற்படக்கூடாது. வீட்டில் வறுமை இருக்கக் கூடாது. இது அத்தனையையும் வேண்டிதானே சாமி கும்பிடுகின்றோம். இந்த எல்லாவற்றையும் ஒரு சேர உங்கள் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டும் என்றால் பின் சொல்ல கூடிய பரிகாரத்தை செய்தாலே போதும். உங்கள் குடும்பம் எப்போதும் கலகலப்பாக கண்ணீர் இல்லாமல் இருக்கும்.

கலகலப்பான குடும்பத்தைப் பெற கல்லுப்பு பரிகாரம்:
பொதுவாகவே லட்சுமி கடாட்சம், சந்தோசம் மன நிறைவு என்றால் அந்த இடத்தில் இருக்க வேண்டிய பொருள் கல் உப்பு. ஆனால் சமீப காலமாக நிறைய பேர் வீடுகளில் சமையலறையில் இந்த கல்லுப்பு இல்லாமலேயே போய்விட்டது. அதனால் தான் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த சந்தோஷம், கலகலப்பு, இன்பம், லட்சுமி கடாட்சமும் இல்லாமல் போய்விட்டது போல‌. அதன் பின்பு விஷயம் தெரிந்த சில பேர் சில விஷயங்களை சொல்லி சொல்லி, வீடு என்று இருந்தால் அதில் கல் உப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்று சொல்லி, தற்போது எல்லோரும் கல்லுப்பை வாங்கி ஜாடியில் கொட்டி வைக்கும் பழக்கத்திற்கு மீண்டும் வந்து விட்டார்கள்.

- Advertisement -

எந்த வீட்டில் கல் உப்பு நிறைவாக அல்ல அல்ல குறையாமல் இருக்கிறதோ, அந்த வீட்டில் ஐஸ்வர்யமும் அல்ல அல்ல குறையாமல் தான் இருக்கும். இது நிதர்சனமான உண்மை. சரி குடும்ப சந்தோஷ பரிகாரத்திற்காக கல் உப்பை எப்படி பயன்படுத்துவது. ஒரு சிறிய கண்ணாடி பவுல் பீங்கான் பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நிரம்பல் உப்பை போட்டு, உப்புக்கு மேலே வட்ட வடிவமாக ஐந்து மிளகுகளை அடுக்கி வைத்து விடுங்கள். இதை உங்களுடைய வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விட வேண்டும். ஆனால் இந்த உப்பு கீழே கொட்ட கூடாது. கண்ணாடி பவுலும் உடைய கூடாது. குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஜாக்கிரதையாக இதை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். தரையில் தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அலமாரியில் மேல் பக்கத்தில் கூட யார் கைக்கும் எட்டாமல் வைக்கலாம்.

10 நாட்கள் இந்த உப்பு உங்கள் வீட்டு வரவேற்பறையில் இப்படியே இருக்கட்டும். உங்களுடைய குடும்பத்தில் என்னென்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை நீங்களே உணருவீர்கள். எப்போதும் மன சஞ்சலத்தோடு, கஷ்டத்தோடு இருப்பவர்கள், சந்தோஷமாக இருப்பார்கள், அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் உறவுகள் எல்லாம் சந்தோஷமான உறவுகளாக மாறும்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் குறையும். கடன் சுமை குறையும். வீட்டில் இருந்தாலே ஒரு மன நிறைவு ஏற்படும். கண் திருஷ்டி வீட்டில் இருப்பவர்களை எதுவும் செய்யாது. பத்து நாட்களுக்கு ஒரு முறை இந்த உப்பை தண்ணீரில் கரைத்து விட்டு மீண்டும் அந்த பவுலை கழுவி விட்டு, புது உப்பு மிளகு வைத்து அதே இடத்தில் வைத்து விட வேண்டும்.

அடுத்து சில பேருக்கு பகல் நேரங்களில் எல்லாம் சந்தோஷம் இருந்தாலும், இரவு நேரத்தில் நிம்மதியும் நிம்மதியான தூக்கமும் இருக்காது. அது ஏனோ தெரியவில்லை. இந்த இரவு தூக்கத்தை நிம்மதியாக பெறவும் இந்த கல்லுப்பை வைத்து ஒரு பரிகாரம் செய்யலாம். ஒரு மஞ்சள் துணியில், ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பை வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் நிறையவே வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைப்பிடி வைத்தால் கூட தவறில்லை. அதில் 10 மிளகு வைத்து முடிச்சாக கட்டி, தலையணைக்கடியில் வைத்து தூங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பூஜை அறையில் இந்த 1 வார்த்தையை எழுதி வைத்தால் போதும். தெய்வங்கள் உங்கள் பூஜை அறையில் வந்து விரும்பி அமர்ந்து கொள்ளும்.

மூன்று நாட்கள் அந்த கல் உப்பு அப்படியே தலையணைக்கடியில் இருக்கட்டும். மூன்றாவது நாள் கல் உப்பை முடிச்சோடு கொண்டு போய் ஓடும் தண்ணீரில் போட்டு விடுங்கள். அப்படி இல்லை என்றால் ஒரு பெரிய டப்பில் தண்ணீர் வைத்து முடிச்சோட அந்த கல்லுப்பை கொண்டு போய் அந்த தண்ணீரில் போட்டு விடுங்கள். உங்களுடைய நெகட்டிவ் எனர்ஜியை எல்லாம் அந்த கல்லுப்பு ஈர்த்து வைத்து இருக்கும். அதை திரும்பவும் நீங்கள் போய் கையில் தொடாதீர்கள். வீட்டிலேயே டப்பில் தண்ணீர் ஊற்றி இந்த கல்லுப்பை கரைத்தாலும் கை படாமல் அந்த தண்ணீரை கீழே கொட்டி விடுங்கள். மூன்று நாள் கழித்து பின்பு உங்களுக்கு இரவு நல்ல தூக்கம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது‌. எளிமையான ஆன்மீகம் சார்ந்த இந்த இரண்டு பரிகாரத்திலும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -