காலையில் எழுந்தவுடன் முதலில் இவற்றை மட்டும் பார்த்துவிட்டு எழுந்திருங்கள். உங்களின் அன்றைய நாள் மிகவும் அற்புதமாகவும், அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் மாறிவிடும்

morning
- Advertisement -

ஒரு வேலையை முதலில் துவங்குவதற்கு முன்னர் மிகவும் உற்சாகமாகவும், சந்தோஷத்துடனும் தொடங்கினோம் என்றால் அந்த காரியம் நாம் நினைத்ததைவிட மிகவும் சீக்கிரமாகவும், எந்தவித பிரச்சனையும் இல்லாமலும் சிறந்த முறையில் நடந்து முடியும். அவ்வாறு காலையில் எழுந்திருக்கும் பொழுது நாம் எந்த அளவிற்கு உற்சாகமாகவும், சுறுசுறுப்புடனும் எழுந்திருக்கிறோமோ அந்த அளவிற்கு அன்றைய நாள் மிகவும் உற்சாகமாக செல்லும். அவ்வாறு நாம் சில பொருட்களை பார்த்துவிட்டு நமது படுக்கையிலிருந்து எழுந்து வந்தால் நமது நாள் மிகவும் அதிர்ஷ்டமான நாளாக மாறிவிடும். அவ்வாறு காலையில் எழுந்தவுடன் நாம் முதலில் பார்க்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sleep less

ஆன்மீக ரீதியாக இல்லாமல் மன ரீதியாக பார்த்தோம் என்றால் நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது எப்போது என்றால் நமக்கு பிடித்தவர்கள் நம்முடன் இருக்கும் பொழுதோ அல்லது நமக்கு பிடித்தமான விஷயத்தை நாம் பார்க்கும் பொழுதோ தான். அவ்வாறு நாம் பயத்துடனும், வெறுப்புடனும் இருப்பதற்கு காரணம் நமக்குப் பிடிக்காதவர்களை பார்க்கும் பொழுதும் நமக்கு எரிச்சலூட்டும் விஷயங்களை பார்த்தாலும் தான்.

- Advertisement -

ஒருவர் நம்முடன் இருந்தால் நமது மனதிற்கு தைரியம் கிடைக்கும் அல்லது இவரைப் பார்த்தால் தன்னம்பிக்கை பிறக்கும் என்கிற மாதிரி உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தார்கள் என்றால் அவரது புகைப்படத்தை எப்பொழுதும் உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள். அது கடவுளாக இருந்தாலும் சரி, மனிதராக இருந்தாலும் சரி இவ்வாறு அவரின் புகைப்படத்தை காலையில் எழுந்தவுடன் முதலில் பார்த்துவிட்டு எழுந்திருங்கள்.

Adbul kalam

அது போல பலரும் சொல்கின்ற வகையில் நமது உள்ளங்கையை முதலில் பார்ப்பது நமக்கு பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கவல்லது. நமது உள்ளங்கையில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒரு கையையோ அல்லது இரண்டு கையையோ சேர்த்துப் பார்ப்பது மிகவும் விசேஷமாக அமைகிறது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இவ்வாறு உள்ளங்கையை பார்க்கும் பொழுது உங்களின் இஷ்ட தெய்வத்தையோ அல்லது குல தெய்வத்தையோ மனதில் நினைத்துக் கொண்டு பார்ப்பது சிறந்த பலனைக் கொடுக்கிறது.

- Advertisement -

அவ்வாறு ஒரு சில விஷயங்களைப் பற்றி கூறும் பொழுது நமது மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். அப்படிப்பட்டவை என்னவென்றால் தீபம், சூரியன், தாமரை, கடல், புகை இல்லாமல் எரியும் நெருப்பு, கன்றுடன் கூடிய பசு, மேகங்கள் சூழ்ந்த மலை, கண்ணாடி, செம்மை நிற சந்தனம், சிவலிங்கம் இப்படி என் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்க கூடிய படங்களையோ அல்லது இடங்களையும் நாம் காலையில் பார்த்தோம் என்றால் அன்றைய நாள் முழுவதும் மிகவும் புத்துணர்ச்சியுடன், சந்தோஷமாக செல்லும்.

sun1

ஏதேனும் மங்கள கரமான விஷயங்களைத் தொடங்குவதாக இருந்தால் முதலில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி இவ்வாறான மங்கலப் பொருட்களை முன்வைத்து தான் துவங்குவார்கள். இவற்றை வைப்பதற்கு காரணம் துவங்கவிருக்கும் காரியம் இனிதே நடந்து முடிய வேண்டும் என்பது தான். அவ்வாறு இவ்வாறான மங்கல பொருட்களை நம் கண்முன்னே பார்ப்பதன் மூலம் நாம் செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும்.

- Advertisement -