காளிகாம்பாள் ஸ்லோகம்

kaali-compressed
- Advertisement -

எதிரிகள் இல்லாத நிலையும், நோய் நொடியில்லாத உடலும், கடனில்லாத வாழ்க்கையும் ஒருவருக்கு இருந்தால் அது மிகவும் சிறப்பான ஒரு அமைப்பாகும். ஆனால் இந்த நிலை எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. தொழில் போட்டிகளால் ஒருவர்கொருவர் தீய மாந்த்ரீகம் மற்றும் வேறு வழிகளால் தீமைகளை செய்து கொள்கின்றனர். தங்களின் தகுதிக்கு மீறிய கடன்கள் வாங்கி அதை அடைக்க முடியாமல் துன்புறுகின்றனர். இப்படியான பிரச்சனைகளால் தவிப்பவர்கள் கூற வேண்டிய “ஸ்ரீ காளிகாம்பாள்” அன்னையின் ஸ்லோகம் இது.

kaligambal

காளிகாம்பாள் ஸ்லோகம்

முழு முதற் கடவுளே மூஷிக வாகனனே
முக்கண்ணன் புதல்வனே மோதகப்ரியனே
பார்வதி மைந்தனே பாலனின் சோதரனே
பார்புகழ் நாயகனே பாடினேன் உனையே

- Advertisement -

காட்டின் இருளிலும் கனிவுடன் துணைவரும்
காளிகாம்பாள் கவசம் பாடவே முனைந்தேன்
கருத்தும் பொருளும் தெளிவுடன் அமைந்திட
காத்தருள்வாயே கற்பக கணபதியே

MathuraKaliamman

அருள்மிகு அம்பிகையின் அருள்பாதம் பணிந்தேன்
ஆனந்த ஜோதியே ஆதரிப்பாய் எமையே
இகபர சௌபாக்கியம் அளித்ததிடும் தேவியே
ஈரேழுலகமும் காத்திடும் அன்னையே
உலகம் உய்யவே உலகில் உதித்தவளே
ஊழ்வினையைத்தீர்த்து உண்மையைக்காப்பவளே
எங்கும் நிறைந்தவளே ஏகாந்த நாயகியே
ஏற்ற மிகு வாழ்வளிக்கும் எழில்மிகு அம்பிகையே
ஐந்தொழில் புரிந்திடும் ஐயனின் தேவியே
ஒன்றும் அறியாதவரை உயர்வடையச் செய்பவளே
ஓங்கார நாயகியே ஓம் சக்தித்தாயே
ஔடதமாய் நீ இருந்து அனைவரையும் காத்திடுவாய்

- Advertisement -

அகிலாண்ட நாயகியே ஆதிபராசக்தியே
அல்லல்கள் போக்கிடும் அபிராமி அன்னையே
கண்கண்ட தெய்வமே கருணையின் வடிவமே
கலியுகம் காக்கவே காட்சியளிப்பவளே
காளிகாம்பாள் எனும் காமாட்சித்தாயே
கமடேஸ்வரருடன் காட்சி தருபவளே
பாரதிபாடிய பரமகல்யாணியே
வீரமிகு சிவாஜிக்கு வீரத்தைக் கொடுத்தவளே
வெற்றித்திருமகளே வேண்டியவரமருள்பவளே
பெற்ற அன்னையாய்ப் பேணிக்காப்பவளே
பன்னிரு தலங்களில் காமாட்சி எனும் நாமமுடன்
மின்னும் ஒளியாய்க்காட்சி தருபவளே
சென்னைப்பதியில் சீருடன் அமர்ந்து
சென்னியம்மன் எனும் நாமமும் கொண்டவளே

எங்கும் நிறைந்திருந்து எமபயம்நீக்கிடுவாய்
எல்லையில்லா பேரின்பப் பெருவாழ்வு தந்திடுவாய்
குங்குமத்தில் குடியிருந்து குடும்பத்தைக்காத்திடுவாய்
சங்காபிஷேகத்தில் மகிழ்ந்து சந்ததியைக்காத்திடுவாய்
சத்தியமாய் இருப்போர்க்கு சாட்சியாய் இருந்திடுவாய்
வித்தைகள் கற்போர்க்கு விளக்கம் தந்திடுவாய்
கரும்பேந்திய கையினளே கண்ணினைக்காத்திடுவாய்
விரும்பியே வருவோர்க்கு வீரத்தை அளித்திடுவாய்
நின்பாதம் பணிவோர்க்கு நிம்மதியைக்கொடுத்திடுவாய்
பன்மலரால் பூஜிப்போர்க்கு பக்கபலமாய் இருந்திடுவாய்
மஞ்சளில் குடியிருந்து மாங்கல்யம் காத்திடுவாய்
நெஞ்சில் நிறைந்திருந்து நெஞ்சத்தைக்காத்திடுவாய்
நம்பியே வருவோர்க்கு நல்லதே செய்திடுவாய்
தெம்பில்லாதவர்க்கு தெய்வபலம் அளித்திடுவாய்
வம்பு பேசுவோரையும் வரமளித்துக்காத்திடுவாய்
கும்பிடவருவோரின் குறைகளைக்களைந்திடுவாய்

- Advertisement -

பாமாலை சூட்டுவோர்க்கு பூமாலை சூட்டிடுவாய்
காமாலை நோயையும் கடிதே போக்கிடுவாய்
ஆடிவருவோர்க்கு ஆறுதல் தந்திடுவாய்
தேடி வருவோர்க்குத் தைரியத்தை அளித்திடுவாய்
வாடி வருவோரின் வ்றுமையைபோக்கிடுவாய்
நாடிவருவோர்க்கு நன்மையே புரிந்திடுவாய்
பாடி வருவோரின் பாரத்தை போக்கிடுவாய்
கூடிவருவோர்க்குக் குலவிலக்க்காயய்த்திகழ்ந்திடுவாய்
காளிகாம்பாள் கவசம் ஒதுவோர்க்கேல்லாம்
கஷ்டங்கள் ஒழியுமே கவலைகள் தீருமே
அஷ்டமா சித்தியும் அடைந்திடச்செய்யுமே
நஷ்டம் என்பதே எதிலும் வாராமல்
இஷ்டமுடன் இனிமையாய் வாழ்ந்திடச்செய்யுமே
போற்றி போற்றி ஜகத் ரக்ஷகியே போற்றி
போற்றி போற்றி கற்பகவல்லியே போற்றி
போற்றி போற்றி அங்கயற்கண்ணியே போற்றி
போற்றி போற்றி மூகாம்பிகை அன்னையே போற்றி

ஓம் சக்தி; ஓம்சக்தி ; ஓம்சக்தி ஓம்
நற்பவி நற்பவி நற்பவி ஓம்

காக்கும் தெய்வமான ஸ்ரீ காளிகாம்பாள் தேவியை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை தினங்களில் ஸ்ரீ காளிகாம்பாள் அன்னை கோவிலுக்கோ அல்லது வேறு ஏதேனும் அம்மன் கோவிலுக்கோ சென்று, தேங்காய் அல்லது ஒரு பூசணிக்காயை இரண்டாக வெட்டி, அதில் பஞ்சதீப எண்ணெய், நெய் ஊற்றி, தீபமேற்றி இந்த ஸ்லோகத்தை படித்து காளிகாம்பாளை வழிபட செய்வினை பாதிப்புகள், திருஷ்டி தோஷங்கள், எதிரிகளின் தொல்லை நோய் மற்றும் கடன் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். அதோடு கஷ்டங்கள் அனைத்தும் ஒழிந்து அஷ்டமாசித்திகள் கைகூடும்.

MathuraKaliamman

நல்லது மற்றும் தீயது கலந்தது தான் வாழ்க்கை. இவை இரண்டும் உலகெங்கிலும் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் பெரும்பாலான மனிதர்களிடம் நல்லதை விட தீயது தான் கலந்து இருக்கிறது. சிலர் பிறரின் நல்வாழ்வை பொறுக்க முடியாமல் தீய மாந்த்ரீக கலையின் மூலம் அவர்களுக்கு தீமையான விடயங்களை செய்ய முயல்கின்றனர். வேறு சிலருக்கு நோய் மற்றும் கடன் பிரச்சனைகள் வாட்டுகிறது. காளிகாம்பாளுக்குரிய இந்த ஸ்லோகத்தை கூறுவதால் மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளும்.

இதையும் படிக்கலாமே:
அர்த்தநாரீஸ்வரர் ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kalikambal slokam in Tamil or Kaligambal slogam in Tamil. It is also called Kalikambal kalikambal stotram lyrics in Tamil.

- Advertisement -