எந்த கலரில் கயிறு கட்டினால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

mahalashmi
- Advertisement -

வெறும் கயிறு தானே. இந்த கயிறை கையில் கட்டினால் என்ன நடக்கப் போகிறது என்று சில பேருக்கு, இந்த கயிறை கட்டுவதில் எல்லாம் நம்பிக்கை இருக்காது. ஆனால், அம்மனுக்கு காப்பு கட்டுவது, கங்கணம் கட்டுவது போன்ற விசேஷங்களில் முக்கிய பங்கு வகிப்பது இந்த கயிறுதான்.

வெறும் மஞ்சள் கயிறு கட்டி விட்டால், அது காப்பு. மஞ்சள் கயிறில் மஞ்சள் கொம்பை கட்டினால் அது தாலி. இப்படி நிறைய பெரிய பெரிய விஷயங்களுக்கு பயன்படுத்தக்கூடிய இந்த சின்ன கயிறு, ஒருவருக்கு அதிர்ஷ்டம் கொடுக்க கூடிய கயிறாக மாற வேண்டும் என்றால், அந்த கயிறை எப்படி கையில் கட்டுவது.

- Advertisement -

உங்களுடைய குறிக்கோளை நிறைவேற்ற, உங்களுடைய பிரச்சனைகள் தீர, உங்கள் கையில் என்ன கயிறு கட்டினால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதை தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக உள்ளதா. பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அதிர்ஷ்டம் தரும் கயிறு

குழந்தைகள் நன்றாக படிக்க, திருமணமாகமல் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க, தொழிலில் சிறந்து விளங்க, கட்டு கட்டாக பணம் சேர, நீங்கள் மஞ்சள் கயிறை கையில் கட்டிக் கொள்ளலாம். மஞ்சள் நிற கயிறை வாங்கிக்கோங்க. அதை கொண்டு போய் குரு பகவானின் பாதங்களில் வைத்துவிட்டு குருபகவான் சன்னிதானத்திலேயே அந்த கயிறை உங்கள் கையில் கங்கணமாக கட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கல்வி செல்வம் பெற இந்த கயிறு குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப உதவியாக இருக்கும். இப்படியாக நீங்கள் கட்டும் கயிறை 48 நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பழைய கயிறை கழட்டி கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் புதிய கயிறை கட்டினால் தான் அந்த கயிருக்கு பவர் கிடைக்கும்.

அடுத்தபடியாக மகாலட்சுமியின் அம்சமும், குபேரரின் அனுகிரகமும் கிடைக்க வேண்டும் என்றால், பச்சை நிற கயிறை உங்கள் கையில் கட்டிக்கொண்டால் நல்லது. இதே போல தான் பச்சைக் கயிறு கொண்டு போய் தாயார் சன்னிதானத்தில், தாயாரின் பாதங்களில் வைத்து, பூஜை செய்து எடுத்து கையில் கட்டிக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் குபேரர் கோவிலுக்கு சென்று அங்கு பச்சை கயிறு விற்கும். அதைக்கூட வாங்கி நீங்கள் கையில் கட்டிக் கொள்ளலாம்.

- Advertisement -

சிகப்பு, அம்மனுக்கு உண்டான கயிறு. சில பேர் ரொம்பவும் பயந்த சுபாவம் ஆக இருப்பார்கள். கோழையாக இருப்பார்கள். மன தைரியம் இல்லாமல் வாழ்க்கையில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தடுமாறுபவர்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த சிகப்பு கயிறை கையில் கட்டிக் கொள்ளலாம்.

ஏதாவது ஒரு அம்பாள் கோவிலுக்கு சென்று சிவப்பு கயிரை கொண்டு போய் கொடுத்து அம்மன் பாதங்களில் வைத்து வாங்கிக் கொள்ளுங்கள். அந்த சிகப்பு கயிறை கோவிலிலேயே அமர்ந்து உங்கள் கையில் கட்டிக் கொள்ளுங்கள். இதை செய்தால் அம்பாள் சக்தி உங்களுக்கு வந்துவிடும்.

குறிப்பாக இந்த கயிறை பெண் பிள்ளைகளுக்கு கட்டி விடுவது ரொம்ப ரொம்ப நல்லது. இந்த கயிறை கட்டிக் கொள்வதன் மூலம் ஒருவருடைய மனதில் வீரம் பிறக்கும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கயிறுக்குப் பவர் 48 நாட்கள் மட்டும்தான் இருக்கும். ரொம்பவும் பழைய கயிறை கையில் கட்டிக் கொண்டிருப்பதன் மூலம் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: இன்றைய தேய்பிறை பஞ்சமி நாளில் கஷ்டங்கள் தேய்ந்து போக வாராகி அன்னைக்கு இரவு இந்த தீபம் ஏற்றுங்கள்.

ரொம்பவும் மெல்லிசாக இருக்கக்கூடிய கயிறில் 3 நிறத்தை வாங்கி, 3 கோவில்களிலும் வைத்து அர்ச்சனை செய்து, ஒன்றாக பின்னி கையில் கட்டிக் கொண்டால் கல்வி, செல்வம், வீரம் மூன்றுமே உங்களுக்கு கிடைக்கும். மஞ்சள் பச்சை சிவப்பு. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த சின்ன சின்ன பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -