இன்றைய தேய்பிறை பஞ்சமி நாளில் கஷ்டங்கள் தேய்ந்து போக வாராகி அன்னைக்கு இரவு இந்த தீபம் ஏற்றுங்கள்.

varahi dheepam
- Advertisement -

சப்த கன்னயர்களில் ஐந்தாவது அன்னையாக திகழும் வாராகி அன்னைக்கு பஞ்சமி திதி மிகவும் உகந்த நாள். இந்த நாளில் அன்னையை நாம் மனதார வணங்கும் போது நம்முடைய துன்பங்கள், கஷ்டம், கடன் என அனைத்து இன்னல்களையும் உடனே தீர அருள் புரிவார்.

எவையெல்லாம் நாம் தேய்ந்து போக வேண்டும் என நினைக்கிறோமோ அவையெல்லாம் தேய வேண்டி தேய்பிறை பஞ்சமியில் தீபம் ஏற்றும் போது அவையெல்லாம் தேய்ந்து நம்முடைய வாழ்க்கை வளர்பிறை போல வசந்தமாகும். ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் வாராகி அன்னையை துன்பம் தீர எப்படி வணங்குவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கஷ்டங்கள் தீர வாராகி அன்னை வழிபாடு

அன்னை என்றாலே அன்பும் அருளும் உடையவள். அதிலும் வாராகி அன்னை துன்பம் என்று வந்தவர் துயர தீர்க்க உடனே அருள் புரியும் அற்புதமான தாயாக திகழ்கிறார். இந்த அன்னையை மனதார நினைத்து ஒரு கணம் உண்மையான அன்புடன் வேண்டினாலே போதும். அந்த வேண்டுதலுக்கு உடனே செவி சாய்ப்பார்.

அப்படியான இந்த அன்னையை இந்த நாளில் நாம் எப்படி வணங்கினால் நம்முடைய துன்பங்கள் தீரும் என்பதை பார்க்கலாம். வாராகி அன்னையை நாம் இரவு எட்டு மணிக்கு மேல் வணங்குவது சிறந்தது. ஆகையால் இன்று இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாக இந்த தீபம் ஏற்றுங்கள். இதை ஆலயத்தில் ஏற்றுவது மிகவும் நல்லது.

- Advertisement -

உங்கள் வீட்டின் அருகில் வாராகி அம்மன் ஆலயம் இருப்பின் அங்கு சென்று அன்னைக்கு செவ்வரளி மலரை வாங்கி கொடுங்கள். அதன் பிறகு தேங்காயில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுங்கள். இந்த தீபம் ஏற்றிய பிறகு தீபத்தின் முன் அமர்ந்து உங்களுடைய துன்பங்களை எல்லாம் மனதார அவரிடம் சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

வாராகி அன்னை ஆலயம் அருகில் இல்லாதவர்கள் வீட்டிலும் தீபம் ஏற்றலாம். ஆனால் வீட்டில் தேங்காய் தீபம் ஏற்றக் கூடாது. ஐந்து அகல் தீபம் ஏற்றுங்கள். அதில் ஒரே ஒரு தீபம் நெய் தீபமாக இருக்க வேண்டும் இதற்கு ஐந்து வெற்றிலை வைத்து வெற்றிலை வைத்து அதன் மேல் ஐந்து அகல் வைத்து தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

இதையும் படிக்கலாமே: துன்பம் தீர செய்வாய்க்கிழமையில் துர்க்கை அம்மனின் இந்த ஒரு வரி மந்திரத்தை சொன்னால் போதும்.

இந்த தீபத்தை ஆலயத்தில் ஏற்றினாலும் சரி வீட்டில் ஏற்றினாலும் சரி தீபம் நீங்கள் ஏற்றி வணங்கும் போது ஓம் வாராஹி அன்னையே போற்றி என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். உங்களுடைய இந்த வேண்டுதலுக்கு அன்னை உடனே மனம் இறங்கி வந்து தீர்த்து வைப்பார். நம்பிக்கையுடன் இந்த தீபத்தை இன்று ஏற்றி அன்னையை வணங்குங்கள்.

- Advertisement -