கஷ்டம் தீர்க்கும் காமாட்சி அம்மன் வழிபாடு

kamatchi
- Advertisement -

வாழ்க்கையில் சில பேருக்கு வெளியில் சொல்ல முடியாத நிறைய கஷ்டங்கள் இருக்கும். நிறைய வேண்டுதல் இருக்கும். எப்படியாவது என் வாழ்க்கையில் இந்த ஒரு விஷயம் நடந்து விடாதா, இந்த ஒரு கஷ்டம் தீர்ந்து விடாதா, என்று தவம் இருப்பார்கள். அதற்கான முயற்சிகளை எல்லாம் மேற்கொள்வார்கள்.

ஆனால் நாம் மனதில் நினைத்திருக்கும் அந்த ஒரு காரியம் மட்டும் நடக்கவே நடக்காது. அப்படி உங்களுடைய மனதில் ஏதாவது ஒரு வேண்டுதல் இருந்தால், அதை நிறைவேற்றிக் கொள்ள காமாட்சியம்மனை நினைத்து 48 நாள் தவம் போல இந்த ஒரு வழிபாட்டை செய்யுங்கள். நீங்கள் மனதில் நினைத்த அந்த காரியம் நிச்சயம் நடக்கும்.

- Advertisement -

உதாரணத்திற்கு வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கணவர் சரியில்லாமல் இருப்பார். கணவர் சம்பாதிக்காமல் இருப்பார். பிள்ளைகளுக்கு திருமணம் நடக்காமல் இருக்கும். திருமணம் ஆகி சென்ற பிள்ளை கணவரோடு வாழாமல் இருக்கும். நம் வீட்டு க்கு வந்த மருமகள், நம்முடைய வீட்டில் வாழாமல் நம் பிள்ளையை பிடிக்காமல், சண்டை போட்டுக் கொண்டு திரும்பவும் அம்மா வீட்டுக்கே சென்று இருப்பார்கள்.

இப்படியெல்லாம் தலை போக கூடிய பிரச்சனைகள் ஏராளம் இருக்கு. இதில் எது சரியாக வேண்டுமென்றாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். இது அல்லாமல் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கணும், கடன் சுமை குறையணும், இப்படி பல பிரச்சினைகள் இருக்கும். அதையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்றாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். சரி வழிபாட்டை பார்த்து விடுவோம்.

- Advertisement -

கஷ்டம் தீர்க்கும் காமாட்சியம்மன் வழிபாடு

இந்த பரிகாரத்திற்கு நமக்கு சிவப்பு நிறத்தில் இருக்கும் பூ தேவை. அதிலும் பிச்சிப்பூ என்று சொல்வார்கள் அல்லவா. இட்லி பூ. அது கிடைத்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. இந்த பூ கிடைக்கவில்லை என்றால் பூக்கடைக்காரரிடம் சொல்லி வர வைத்து வாங்கி கொள்ளுங்கள். அந்த பூவை ஒவ்வொரு பூக்களாக பிரித்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.

எவ்வளவு பூக்கள் வேண்டும் என்றாலும் போட்டுக் கொள்ளலாம். அந்த பூக்களுக்கு மேலே காய்ச்சாத பசும்பாலை ஊற்ற வேண்டும். கொஞ்சமாக ஊற்றினால் போதும். ஒரு ஸ்பூன் அளவு. இப்போது இந்த பூவை வைத்து காமாட்சி அம்மனை வழிபாடு செய்யணும். பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி வைக்கவும். காமாட்சி அம்மன் திரு உருவப்படம் இருந்தால் அதை எடுத்து வச்சுக்கோங்க. மஞ்சள் குங்குமம் பொட்டு வச்சுக்கோங்க.

- Advertisement -

இந்த கிண்ணத்தில் பசும்பாலால் நனைக்கப்பட்ட பூக்கள் இருக்கிறது அல்லவா. அதில் இருந்து ஒவ்வொரு பூக்களாக எடுத்து அந்த காமாட்சி அம்மன் விளக்கிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ‘ஓம் காமாட்சி அம்மனை போற்றி, காமாட்சி அம்மனை துணை’ என்ற இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். காமாட்சியம்மனை மனதில் நினைத்து உங்கள் மனதில் ஒரு கோரிக்கையை வைத்து, இந்த பூஜையை தொடங்குங்கள்.

தொடர்ந்து 48 நாள் காமாட்சி அம்மனை சிவப்பு பூ கொண்டு வழிபாடு செய்தால் நீங்கள் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த 48 நாளும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த வழிபாடு செய்தால் சொல்லவே வேண்டாம். நீங்க காமாட்சி அம்மன் கண்ணில் பட்டுவிடுவீர்கள். காமாட்சி அம்மனின் பார்வை நேராக உங்கள் மீது விழும். உங்கள் குடும்பம் சுபிட்சம் பெறும்.

இதையும் படிக்கலாமே: கடுமையான தோஷங்களை போக்கும் பரிகாரம்

மக்களை காத்து ரக்க்ஷிக்கும் அம்மன் காமாட்சியம்மன். நம்பிக்கையோடு இந்த காமாட்சி அம்மன் பாதங்களை பற்றிக்கொள்ளுங்கள். வளர்பிறை வெள்ளிக்கிழமையாக பார்த்து இந்த பூஜையை தொடங்குங்கள். உங்கள் குடும்பம் சுபிட்சம் பெரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -